Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்தக் கடல்.. பெரிய அலையுடன் கூடிய.. ஆழமான பகுதியா?
இங்கிலாந்தில் வளர்ந்த பிள்ளை என்ற படியால்...
எப்படியும் அவருக்கு, நீச்சல்  தெரிந்திருக்கும்.. என நினைக்கின்றேன்.

26 வயது... அப்பதான் கஸ்ரப் பட்டு, படித்து முடித்து..
ஒரு சில வருடங்கள் தான்... வேலை செய்திருப்பார்.
அதற்குள்... இப்படி நடந்து விட்டது.

இது, மனதை நெருட வைத்த மரணம்.

எமது முல்லை தீவு பக்கம் இருக்கும் கடல் போல் பெரும் அலை எழும்பும் ஆண் கடல் அல்ல.

இவரின் சடலம் எடுக்கபட்ட துறைமுக பகுதியின் இறங்குதுறை ஒரு குடாவின் ஒரு கரை போலவும், மறு கரை தரையாகவும் இருக்கும் ஒரு களப்புக்கடல்.

இலங்கை கடல்களை நான் இப்படி அவதானிக்கவில்லை. ஆனால் யூகேயில் அலை ஏற்றம் இறக்கம் மிக அதிகமாகவும், சடுதியாகவும் இருக்கும். குறிப்பாக களப்புகளில். low tide எனப்படும் நேரம் கடல் உள்வாங்கி கனதூரம் போகும், பின் high tide நேரம் மிக வேகமாக உள்ளே வரும், தலைக்குமேல் உயரத்தில். 

2001 என நினைகிறேன் மோர்கம்பே எனும் இடத்தில் சிப்பி பொறுக்க போன 50 ற்கு மேற்பட்ட சீனர்கள் tide இல் அகபட்டு இறந்தார்கள்.

நான் எந்த கடற்கரை போனாலும் முன்பே இதை ஒருதரம் விசாரித்து விட்டே போவேன். மார்கேட்டிலும் இந்த சடுதியான மாற்றம் இருப்பதாக அறிந்தேன். 

இப்படி ஒரு tide இல் மாட்டினாரோ தெரியாது. செம்டெம்பர் இரவு குளிர் நீர், நீந்த தெரிந்தாலும் உடலை இறுக்கி விடும்.

அந்த இறங்கு துறையில் தொங்கலில் ஒரு சிலை இருக்கிறது அதற்கு அப்பால் நாம் போனபோது கும்மிருட்டாய் இருந்தது. வழுக்கி கூட விழுந்திருக்கலாம்.

எல்லாம் இனி நமது கற்பனைக்கு ஏற்ப ஊகம்தான் சொல்ல முடியும். மரண விசாரணை என்ன சொல்கிறது என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்தக் கடல்.. பெரிய அலையுடன் கூடிய.. ஆழமான பகுதியா?
இங்கிலாந்தில் வளர்ந்த பிள்ளை என்ற படியால்...
எப்படியும் அவருக்கு, நீச்சல்  தெரிந்திருக்கும்.. என நினைக்கின்றேன்.

எவ்வளவு நீச்சல் தெரிந்தாலும் குளிர் தண்ணிக்கு கால் தசை கொழுவி பிடிக்கும்.அதற்கு பிறகு எதுவுமே செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எமது முல்லை தீவு பக்கம் இருக்கும் கடல் போல் பெரும் அலை எழும்பும் ஆண் கடல் அல்ல.

இவரின் சடலம் எடுக்கபட்ட துறைமுக பகுதியின் இறங்குதுறை ஒரு குடாவின் ஒரு கரை போலவும், மறு கரை தரையாகவும் இருக்கும் ஒரு களப்புக்கடல்.

இலங்கை கடல்களை நான் இப்படி அவதானிக்கவில்லை. ஆனால் யூகேயில் அலை ஏற்றம் இறக்கம் மிக அதிகமாகவும், சடுதியாகவும் இருக்கும். குறிப்பாக களப்புகளில். low tide எனப்படும் நேரம் கடல் உள்வாங்கி கனதூரம் போகும், பின் high tide நேரம் மிக வேகமாக உள்ளே வரும், தலைக்குமேல் உயரத்தில். 

2001 என நினைகிறேன் மோர்கம்பே எனும் இடத்தில் சிப்பி பொறுக்க போன 50 ற்கு மேற்பட்ட சீனர்கள் tide இல் அகபட்டு இறந்தார்கள்.

நான் எந்த கடற்கரை போனாலும் முன்பே இதை ஒருதரம் விசாரித்து விட்டே போவேன். மார்கேட்டிலும் இந்த சடுதியான மாற்றம் இருப்பதாக அறிந்தேன். 

இப்படி ஒரு tide இல் மாட்டினாரோ தெரியாது. செம்டெம்பர் இரவு குளிர் நீர், நீந்த தெரிந்தாலும் உடலை இறுக்கி விடும்.

அந்த இறங்கு துறையில் தொங்கலில் ஒரு சிலை இருக்கிறது அதற்கு அப்பால் நாம் போனபோது கும்மிருட்டாய் இருந்தது. வழுக்கி கூட விழுந்திருக்கலாம்.

எல்லாம் இனி நமது கற்பனைக்கு ஏற்ப ஊகம்தான் சொல்ல முடியும். மரண விசாரணை என்ன சொல்கிறது என பார்ப்போம்.

நான்.. பார்த்தவரையில்,
திருகோணமலை கடலும், கொழும்பு கடலும் மிகவும், 
ஆக்ரோசமானவை என நினைக்கின்றேன்.

ஹிக்கடுவ கடல்....  உள்வாங்கி, திடீரென்று.. அதன் உயரம் அதிகரிக்கும்.

எனக்கு விருப்பமான... கடல் என்றால், 
கீரிமலையை விட, காரை நகரில் உள்ள (கஸோரினா பீச்) கடல் தான்.
கீரிமலை எல்லாம்... இரண்டாம்  தெரிவு.

என்ன... இருந்தாலும், அந்தியேட்டிக்கு.. சாம்பலை அங்கு தான்...
கரைப்பார்கள்  என்பதால், கீரிமலையை, இரண்டாவதாக வைத்துள்ளேன்.
கீரிமலை... நம், உயிருடன்.. கலந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நான்.. பார்த்தவரையில்,
திருகோணமலை கடலும், கொழும்பு கடலும் மிகவும், 
ஆக்ரோசமானவை என நினைக்கின்றேன்.

ஹிக்கடுவ கடல்....  உள்வாங்கி, திடீரென்று.. அதன் உயரம் அதிகரிக்கும்.

எனக்கு விருப்பமான... கடல் என்றால், 
கீரிமலையை விட, காரை நகரில் உள்ள (கஸோரினா பீச்) கடல் தான்.
கீரிமலை எல்லாம்... இரண்டாம்  தெரிவு.

என்ன... இருந்தாலும், அந்தியேட்டிக்கு.. சாம்பலை அங்கு தான்...
கரைப்பார்கள்  என்பதால், கீரிமலையை, இரண்டாவதாக வைத்துள்ளேன்.
கீரிமலை... நம், உயிருடன்.. கலந்தது.  

கசூரினா நல்ல பீச்தான். ஆனால் திருகோணமலையின் பளிங்கு கடற்கரை (மாபிள் பீச்) தான் எனக்கு நெ1.

பாசிகுடாவும் நல்லம். யாழில் சாட்டி நல்ல கடற்கரை. கடற்தாவரங்கள் ஒதுங்குவது சிலருக்கு பிடிக்காது. 

கீரிமலை ஒரே கல்லு. எனக்கு கடலை விட கேணி பிடிக்கும். ஆனால் அந்த மடத்தில் இருந்தால் பழைய நினைவுகள் வருவது ஒரு சந்தோசம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

கசூரினா நல்ல பீச்தான். ஆனால் திருகோணமலையின் பளிங்கு கடற்கரை (மாபிள் பீச்) தான் எனக்கு நெ1.

பாசிகுடாவும் நல்லம். யாழில் சாட்டி நல்ல கடற்கரை. கடற்தாவரங்கள் ஒதுங்குவது சிலருக்கு பிடிக்காது. 

கீரிமலை ஒரே கல்லு. எனக்கு கடலை விட கேணி பிடிக்கும். ஆனால் அந்த மடத்தில் இருந்தால் பழைய நினைவுகள் வருவது ஒரு சந்தோசம்தான்.

எனக்கு.... எட்டு, வயதாக இருக்கும் போது,
அப்பா... திருகோணமலையில் வேலை செய்தவர்.
அவர், வசித்த  வீடு.. திருகோணமலை, ஆஸ்பத்திரி வீதி.   
அந்த வீட்டிற்கு... முன்புறம், கடலும்...  பின் புறமும் வீதி  உள்ள வீடு.

அம்மா, தங்கச்சி, தம்பி எல்லோரும்,  பாடசாலை விடுமுறை நாட்களில்...
திருகோணமலைக்கு போய்... எமது விடுமுறையை, கழிப்பது வழக்கம்.

ஒருமுறை...  மாலை நேரத்தில், வீட்டு  சுவர் அருகில் இருந்து,
கடற்கரையில்... இருந்து, குடும்பமாக கதை பேசி, 
நண்டுக்  குஞ்சு பிடித்து, விளையாடிக் கொண்டிருந்த போது...
ஒரு, பெரிய அலை வந்து...  தம்பியை, அள்ளிக் கொண்டு போட்டுது.

எல்லாரும்... என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க,
அடுத்த அலை... எனது தம்பியை, திரும்பக் கொண்டு... கரையில் விட்டது...
திருக் கோணேஸ்வர பெருமானின்... அருள், என்றுதான் நான் சொல்வேன்.

அதற்குப் பிறகு... கடல் என்றால்,  பயம் தான்.
ஆனால்.. என்ன செய்வது,  கடல்  அழகானதும், ஆபத்தானதும் என்று தெரிந்தும்...
அதனை... நெருங்கி பார்க்க வேண்டும்  என்று தான், எல்லோரும் விரும்புகின்றார்கள். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.