Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, nochchi said:

சிங்களத்தின் இனப்படுகொலை மீளநிகழாதிருக்க ஐ.நா. வின் கதவைத்தட்டியவாறு  உள்ளக ரீதியாகப் படுபிற்போக்கான அடிமைத்தனத்தை அரங்கேற்றும் தமிழர்களுக்கு நீதிகோரும் அருகதையுள்ளதா என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது. இங்கே உணர்வுமயப்பட்ட கருத்துகளுக்கப்பால், அறிவுமயப்பட்ட குமுகாய அமைப்புகளாகத் தாயத்திலும் புலத்திலும் வாழும் முற்போக்கான இளையதலைமுறை ஒன்றிணைவதும், இந்தக் குற்றச்செயல்களையும், குற்றங்களைப் புரிவோரது விபரங்களை அம்பலப்படுத்துவதுமே இவற்றைத் தடுக்கவும் நீண்டகால நோக்கிலான மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.  

அமைப்புமுறையற்ற செயற்பாடுகளாலோ அல்லது சட்டநடவடிக்கைகளாலோ சிறியதொரு அமைதியேற்படலாம். ஆனால் அதனது அடிப்படைகள் அப்படியேயே இருக்கும். இதிலே கட்சிகளைவிட (ஏனென்றால் அவர்களது இலக்கு மக்களது அமைதியான வாழ்வல்லவே) குமுகாய அமைப்புகளும், குமூக ஊடகங்களும் பெரும் பங்காற்ற முடியும். செய்வார்களா?

வெள்ளையர்கள் வந்து மதம்மாற்றியபோது இதுவே நிகழ்ந்தது. பின்னாளில் எங்கே அவர்கள் படித்து மேலோங்கிவிடுவார்களேயென்று யோசித்த மேல்சாதி இந்துக்களும் மதம் மாறியதும் நிகழ்ந்தது. தற்போது நாம் பௌத்தத்தைத் தழுவுதல் தீர்வென்றுகாட்டிவிட பெரும்பாலான கிராமங்கள் பௌத்த கிராமங்களாகவே மாறிவிடக்கூடிய நிலையெழலாம். ஏலவே இஸ்லாமிய, கிறித்துவ தமிழர்களாகப் பிரிந்து நின்று சேறள்ளியெறியும் நிலையில், பௌத்த தமிழரென்ற தரப்போடு முறுக வேண்டிய சூழலமைவது மட்டுமன்றி, அது அரசமதமென்ற கோதாவில் பழிவாங்கல்களும் பலமாக இருக்கும். தமிழினம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

பிரச்சினைக்கும் அதற்குக் கரணியமானோருக்கும் தகுந்த தீர்வைக்காட்டுவதே இனத்துவ அடிப்படையிலான இலக்குகளுக்கு உரிய வலுச்சேர்க்கும். சாதிகளாகப் பிரிந்து நின்று சாக்கடையுள் விழுவதைவிடுத்து சாதிக்க வேண்டுமெனில் சாதிகளைக் குறைந்தபட்சம் வீடுகளுக்கு வெளியேயாவது களைவோமா?   
 

 

 

நீங்கள் சொல்வது உண்மைதான்
என் தலைமுறை திருந்தினாலும், உந்த 30,40 + திருந்தாதுகளே. அதுகள் இளைய தலைமுறைக்கு அந்த வெறியை ஊட்டிவிடுதுகள். இதனால் அவர்களுக்கும் அந்த வெறி தொற்றிக்கொள்ள, அவர்கள் சன்னதம் ஆடுகின்றனர். இந்தக் கிழடுகளை இல்லாமல் ஒழிக்கோனும், இல்லை இளசுகளிடம் சாதிவெறிக் கிழடுகள் மந்திரம் ஓத வர, அந்த இளசுகள் நல்ல பாடம் எடுக்க வேணும்.

இதுதான் என்னைப் பொறுத்த வரை ஒரே வழி. 

On 1/10/2021 at 09:16, manimaran said:

'தாழ்த்தப்பட்ட' சாதியை சேர்ந்த எமது மக்கள் சிங்கள பேரினவாதத்தினால் பாதிப்படைந்ததை விட பக்கத்து 'உயர்சாதிக்காரரினால்' பாதிப்படைந்தது அதிகம். 

 

'தாழ்த்தப்பட்ட' ?

'உயர்சாதிக்காரரினால்'?

What you're talking about is nonsense.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Knowthyself said:

 

'தாழ்த்தப்பட்ட' ?

'உயர்சாதிக்காரரினால்'?

What you're talking about is nonsense.

இப்பிடி மொட்டையாச் சொன்னால் எப்பிடி? சென்ஸ் என்னவெண்டு நீங்கள் சொன்னால் எங்களுக்கும் விளக்கம் கிடைக்குமல்லா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.