Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை

2 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள் இன்று முற்பகல் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் − தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கே போலீஸ் மாஅதிபர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த இரண்டு ஆலயங்களும், இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் என்பது விசேட அம்சமாகும்.

இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுக்குள், போலீஸ் அதிகாரி பாதணியுடன் சென்றமை, ஆலயத்தின் மகிமையை அவமதிப்பதாக இந்துக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பானது - போலீஸ்

யாழ்ப்பாணத்தில் போலீஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த போலீஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அதைவிடுத்து, ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

போலீஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றுவதாக அவர் கூறினார்.

அது இந்து மதத்திற்கு போலீஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர், ஆலய நுழைவாயிலுக்கு அருகில் போலீஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவித்தார்.

தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58901201

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சப்பாத்துக் காலுடன்... சந்நிதி ஆலயத்திற்குள் நுழைந்த, பொலிஸ் அதிகாரி!

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (புதன்கிழமை) நண்பகல்  விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

FBj_vT9VcAANyjY-600x352.jpg

21-6166964c6444d-600x375.jpg

https://athavannews.com/2021/1244673

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம் ; இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை

பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலயத்திற்குள்ளும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்குள்ளும்  காலணியுடன்  பிரவேசித்ததாகச் செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் பரவி வருகின்றது.

 

இந்த விடயத்தினைக் கருத்திற்கொண்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அது தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

 

திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்கள்.

இந்து ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம் ; இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

செல்வசந்நிதி ஆலய சுற்றாடலில்  இலங்கை பாதுகாப்பு படைகள் ஆற்றின் அப்பாலிருந்து  துப்பாக்கி சூடு நடத்தி பிச்சைக்காரர்களிலிருந்து பலரை பிணமாக்கியிருக்கிறார்கள், தேருக்கு தீமூட்டியிருக்கிறார்கள், விமானகுண்டுவீச்சு நடத்தியிருக்கிறார்கள்,

எறிகணைகள் மூலம் மணி கோபுரம் கூரைகளை சேதபடுத்தியிருக்கிறார்கள். சில கோவில்களுனுள்ளேயே எறிகணை உலங்குவானூர்தி தாக்குதல் நடத்தி தஞ்சமடைந்த மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள் 

அப்படிபட்டவர்களுக்கு காலணியுடன் செல்வது ஒரு பிரச்சனையா, அல்லது காலணியுடன் சென்றவர்கள் இதற்குமுதல் தமிழர்களின் ஆன்மீக தலங்கள்மீது மிகவும் பய பக்தியுடன் நடந்து கொண்டிருக்கிறார்களா?

என்னமோ இதுபோன்ற சம்பவங்களின் மூலம் மட்டுமே இவர்கள் எங்கள் இறை நம்பிக்கைகள் மீது மிதித்தார்கள் என்பதுபோல்  நமது சமூகவலைதள வாதிகள் சிலாகிப்பது சிங்களவர்களை மிக யோக்கியமாக காட்டும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என்றே தோன்றுகிறது.

வேண்டுமென்றால்  ஆலயங்களின் சூழலில் முன்னர் நடந்த கொடூரங்களுடன் இணைத்து செய்தி பகிருங்கள் அது இப்போதைய இளம் தலைமுறைக்கு கடந்தகால  செய்தியை சொல்லிக்கொண்டேயிருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2021 at 13:06, ஏராளன் said:

அது இந்து மதத்திற்கு போலீஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர்

காலணியுடன் கோயிலினுள் செல்வது சுகாதார சீர்கேடு.

பக்தர்கள் நிலத்தில் உருண்டு பிரதிட்டை செய்வது தொடக்கம் அபிசேகம், அன்னதானம் வரை, அமர்தல், இளைப்பாறுதல் உட்பட பல காரியங்கள் கோயில்களில் தரையிலேயே நடைபெறுகின்றன. 

இதனாலேயே காலணி வைப்பதற்கு பிரத்தியேகமாக இடம் உள்ளது. அத்துடன் கால்களை கழுவிவிட்டு செல்வதற்கு கோயில் உள்ளே நுழைய முன் தண்ணீர் தொட்டி உள்ளது. 

சப்பாத்து காலோ, செருப்பு காலோ நாய் கக்கா தொடக்கம் எத்தனையோ பல அசுத்தங்களை கோயில் வளாகத்தினுள் கொண்டு வரக்கூடும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.