Jump to content

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்?

சீன மின் நிலையமும் கொடியும்.

சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது.

சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை. 

காற்றுமண்டலத்தில் உமிழப்படும் கார்பன் அளவும், காற்று மண்டலத்தில் இருந்து மரங்கள் உள்ளிட்டவை உறிஞ்சிக்கொள்ளும் கார்பன் அளவும் சம நிலையில் இருப்பதுதான் கார்பன் சமநிலை எனப்படுகிறது. 

அதிவேக வளர்ச்சி

எல்லா நாடுகளுக்குமே தங்கள் கார்பன் உமிழ்வு அளவை குறைப்பது சிக்கலாக உள்ளது. சீனா இதில் மிகப்பெரிய சவாலையே எதிர்கொண்டுள்ளது. 

ஒரு சராசரி அமெரிக்கரால் உமிழப்படும் கார்பனைப் போல பாதி அளவு கார்பன்தான் ஒரு சராசரி சீனரால் உமிழப்படுகிறது. 

ஆனால், சீனாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த உமிழ்வு அளவை மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளன. 

 

உலகிலேயே கரியமில வாயுவை அதிகம் உமிழும் நாடாக 2006ல் ஆனது சீனா. தற்போது உலகெங்கிலும் உமிழப்படும் மொத்த பசுமை இல்ல வாயுக்களில் கால் பங்கு சீனாவில் இருந்துதான் வெளியாகிறது. 

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள சிஓபி26 என்று பெயரிடப்பட்ட ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் சீனாவின் உமிழ்வு விஷயம் தீவிர பரிசீலனைக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. 

அதாவது இந்த உமிழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சீனாவின் வாக்குறுதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளைப் போலவே, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலையை ஒப்பிட உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுப்பதற்குரிய மாற்றங்களை செய்வதாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது. 

2020ம் ஆண்டில் சீனா மேலும் வலுவான வாக்குறுதியை அளித்தது. ஆனால், பருவநிலை மாற்றம் தொடர்பான அந்த இலக்குகளை அடைய சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் போதுமானவை அல்ல என்று கூறுகிறது 'கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர்' என்ற அமைப்பு. உலக அளவிலான விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வல்லுநர்களைக் கொண்டது இந்த அமைப்பு. 

spacer.png

 

நிலக்கரியில் இருந்து விலகல்

சீனாவின் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது சாத்தியம்தான் என்று கூறும் வல்லுநர்கள் ஆனால், அதற்கு தீவிரமான மாற்றங்கள் தேவை என்கிறார்கள். 

அந்நாட்டின் முக்கிய ஆற்றல் மூலாதாரமாக நிலக்கரியே நீண்ட காலமாக உள்ளது. 

spacer.png

நிலக்கரி பயன்பாட்டை 2026ல் இருந்து படிப்படியாக குறைத்துக்கொள்வதாகவும், வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் இயங்கும் திட்டங்களை கட்டமைக்கப்போவதில்லை என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகிறார். ஆனால், அரசாங்கங்களும், செயற்பாட்டாளர்களும் இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என்கிறார்கள். 

மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2050 வாக்கில் முழுமையாக சீனா நிறுத்திவிடவேண்டும். அதற்குப் பதிலாக அணுசக்தி அல்லது புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், நிலக்கரி மூலம் இயங்கும் மின்சார நிலையங்களை மூடுவதற்குப் பதிலாக 60க்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கரி மூலம் இயங்கும் புதிய அனல் மின் நிலையங்களை சீனா அமைத்துவருகிறது. இந்த புதிய மின் நிலையங்கள் பலவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் அமைக்கப்படுகின்றன. 

spacer.png

புதிதாக கட்டப்படும் அனல் மின் நிலையங்கள் பொதுவாக 30-40 ஆண்டுகளுக்கு செயல்படும். 

எனவே கார்பன் உமிழ்வை சீனா குறைக்கவேண்டுமானால், புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்களின் திறனைக் குறைக்கவேண்டும்; பழைய நிலையங்களை மூடவேண்டும் என்கிறார் ஆய்வாளர் பிலிப்பி சியாய்ஸ். பாரிசில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஆஃப் என்விரோன்மென்ட் அன்ட் கிளைமேட் சயின்ஸ்' கல்வி நிலையத்தை சேர்ந்தவர் இவர். 

சில மின் நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, கார்பன் உமிழ்வு அளவை குறைக்க முடியும். ஆனால், இதை பெரிய அளவில் செய்வதற்கான தொழில்நுட்பம் இப்போதுதான் உருவாகிவருகிறது. 

கரியமில வாயுவை அதிகம் உமிழ்வதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையைக் குறைப்பது என்ற மேற்கத்திய நாடுகள் கடந்த காலத்தில் பின்பற்றிய உத்தியைப் பின்பற்ற தங்களுக்கு உரிமை உள்ளது என்கிறது சீனா. 

குறுகிய காலக் கண்ணோட்டத்தில், வரும் குளிர்காலத்தில் மின்வெட்டு வருவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சீனா. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பல கனரகத் தொழில்களில் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

பசுமை ஆற்றலுக்கு மாறும் சீனா

2050 வாக்கில் 90 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்கள் வழியாக வரவேண்டும் என்கிறார்கள் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சோலார் பேனல், பெரிய பேட்டரிகள் போன்ற பசுமை தொழில்நுட்பங்களில் சீனா காட்டும் முனைப்பு உதவியாக இருக்கும். 

பல சீன நகரங்களில் இருக்கும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்காகவே சீனா இந்த பசுமைத் தொழில்நுட்பங்களை நோக்கிச் சென்றது சீனா. 

ஆனால், இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் லட்சக்கணக்கான சீனர்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பும் இருப்பதாக சீன அரசு நம்புகிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணெய், எரிவாயு இவற்றை நம்பி இருப்பதையும் குறைக்கலாம் என்று நினைக்கிறது அரசாங்கம். 

உலக அளவில் ஆற்றல் துறையில் ஏற்பட்டுவரும் இத்தகைய மாற்றங்களில் சீனா முன்னிலையில் இருக்கிறது என்கிறார் ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த யூ கோ. "மேலும் மேலும் குறைந்த விலையில் பசுமை தொழில்நுட்பத்தை நாம் வழங்க முடிவதற்கான காரணங்களில் ஒன்று சீனா," என்கிறார் அவர். 

spacer.png

உலகில் எந்த நாட்டைவிடவும் அதிகமான சூரியவிசை மின்சாரத்தை தயாரிக்கிறது சீனா. அந்நாட்டின் மிக அதிகமான மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும்போது அது ஒன்றும் ஆச்சரியமான ஒன்று அல்ல. ஆனால், நாடு எதைநோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுவதற்கான குறியீடு அது. 

2020 ஆண்டு நிலவரப்படி உலகின் வேறு எந்த நாட்டைவிடவும் மூன்று மடங்குக்கும் அதிகமான காற்றாலைகளைக் கொண்டுள்ளது சீனா. 

2030ல் பெட்ரோலியம் முதலிய நிலப்படிவு எரிபொருள் அல்லாத ஆற்றல் மூலங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதம் இருக்கவேண்டும் என்கிறது சீனா. இந்த இலக்கினை முன்னதாகவே சீனா அடையும் என்று பல பார்வையாளர்களும் கூறுகிறார்கள். 

மின்சார வண்டி முனைப்பு

கார் விற்பனையில் மின்சார வண்டிகளின் விகிதம் எவ்வளவு உள்ளது என்ற அடிப்படையில் கணக்கிட்டால் உலகில் சீனா 7வது இடத்தில் உள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கையில் பார்த்தால், சீனாவில் உற்பத்தியாகிற, விற்பனையாகிற மின்சார கார்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டைவிடவும் மிகவும் அதிகம். 

தற்போது சீனாவில் விற்பனையாகும் 20 கார்களில் ஒன்று மின்சார கார். 

2035ம் ஆண்டில் சீனாவில் விற்பனையாகும் எல்லா கார்களும் முழுவதும் மின்சாரத்தில் இயங்குவதாகவோ அல்லது மின்சாரத்திலும், எண்ணெயிலும் இயங்குவதாகவோ இருக்கும் என தொழில்துறை பிரநிதிகளும், அரசு அதிகாரிகளும் கூறுகிறார்கள். 

spacer.png

கார்கள் மின்சாரத்தில் இயங்குவதாக மாறுவது எந்த அளவுக்கு கார்பன் உமிழ்வை குறைக்கும் என்பதை நேரடியாக சொல்லிவிட முடியாது. உற்பத்தி, கார்களை சார்ஜ் செய்வதற்கு எந்தவிதமான மின்சாரம் பயன்படுகிறது என்பதை எல்லாம்வைத்துதான் இதற்கான விடை இருக்கும். 

எப்படி இருந்தாலும், ஒரு மின்சார வண்டி தன் வாழ்நாளில் வெளியிடும் கார்பன் உமிழ்வின் அளவு பெட்ரோல், டீசல் வண்டிகளின் உமிழ்வு அளவைவிட குறைவுதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

மொத்த கார்பன் உமிழ்வு அளவில் கால் பங்குக்கு வண்டிகள் எண்ணெயை எரித்து வெளியிடும் புகையே காரணம் என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியமானது. அதிலும் சாலையில் செல்லும் வண்டிகளே பெரிய அளவில் உமிழ்கிறவை. 

மீதம் உள்ள உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்யும் பேட்டரி திறனைப் போல இரு மடங்கு மொத்த திறன் உள்ள பேட்டரிகளை 2025ல் சீனா உற்பத்தி செய்யும். 

இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை சேமித்துவைத்துப் பயன்படுத்த முடியும் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள். 

பசுமையாகும் சீனாவின் நிலம்

பசுமை இல்ல வாயுகளை உமிழும் நிகர அளவு பூஜ்ஜியத்தை அடையும் என்று கூறுவதன் மூலம் சீனா உமிழ்வுகளே செய்யாது என்று பொருள் அல்ல. 

தம்மால் முடிந்தவரை உமிழ்வுகளை சீனா கட்டுப்படுத்தும். மீதம் உள்ளவற்றை தாமே உறிஞ்சிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும். பல்வேறு அணுகுமுறைகளை இணைத்து இந்த இலக்கை சீனா அடையும்.

தாவரங்கள் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் என்பதால், செடிகொடிகள் சூழ்ந்த பசுமைப் பரப்பின் அளவை அதிகரிப்பது நிகர உமிழ்வு அளவை குறைப்பதில் உதவும். 

இந்த விஷயத்திலும் சீனாவில் இருந்து வரும் செய்தி உற்சாகம் தருகிறது. மற்ற எந்த நாட்டைவிடவும் சீனா அதிவேகமாக பசுமையாகி வருகிறது. மண் அரிப்பு, மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்கான பல்வேறு காடுவளர்ப்புத் திட்டங்களின் மூலம் இது பெருமளவு சாத்தியமாகியுள்ளது. 

spacer.png

வயல்களில் ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போகங்கள் விளைவிப்பதும் இதற்கு ஒரு காரணம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட போகம் விளைவதால் ஆண்டின் நீண்ட காலப்பகுதி நிலத்தில் பசுமை சூழ்ந்திருக்கும். 

அடுத்து என்ன?

இந்த முயற்சிகளில் சீனா வெற்றியடையவேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு. 

"சீனா கார்பன் அளவை குறைக்காவிட்டால் நம்மால் பருவநிலை மாற்றத்தை வெல்ல முடியாது," என்கிறார் லேன்செஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் டைஃபீல்டு. 

நீண்டகால உத்திகளை செயல்படுத்துவதிலும், பெரிய அளவு மூலதனத்தை திரட்டுவதிலும் சீனாவுக்கு சில பெரிய சாதகங்கள் உள்ளன. ஆனால், இவற்றை செயல்படுத்துவதில் சீன அதிகாரிகள் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

 

https://www.bbc.com/tamil/global-58913566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.