Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர்

SAM_8621_1080-750x375.jpg

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று  இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும்  எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகின்றேன்.

ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நாங்கள் செயற்படப் போவதில்லை நாங்கள் பாரத தேசத்தினுடைய உறவுகளாக தொப்புள்கொடி உறவுகளாக அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய ஒரு தரப்பாக நாங்கள் இந்த தேசத்தில் இருப்போம்.

எம்மைப் பொறுத்தவரை பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு நாம்  தந்தையர் நாடான  பாரத தேசத்தினை  பின்பற்றி செயற்படுகின்றோம் அதாவது தாய் தமிழகம் என்பது எமது தொப்புள்கொடி உறவுகளாக உள்ளனர்.

தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும் ஆகவே பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.

எங்களுடைய அரசியல் கலாச்சாரத்திலும் பாரத தேசத்தினுடைய அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றோம்

பாரத தேசத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தினை  பின்பற்றுகின்றவர்களை அங்கே  நினைவு கூருவதை போல இங்கேயும்   நினைவுகூரும்   பண்பாட்டை பின்பற்றி வருகின்றோம்

குறிப்பாக இன்றைய விஜயதசமி நாளில் அப்துல் கலாமினுடைய நினைவு தினத்தில் பாரத தேசத்திற்கு ஒரு கோரிக்கையையினை  முன்வைக்க விரும்புகின்றேன் எமது நீண்டகால உரிமை கோரிக்கையினை  பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்.

நாம்  தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல நாங்கள் மற்றய இனத்தை  அழிப்பதற்காக எமது உரிமையினை கோரவில்லை நாங்கள் எம்மை  பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மை  வளர்த்துக் கொள்ள எமக்கு  உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாக போராடி வருகின்றோம்

அந்த வகையில் பாரத தேசம் எமது கோரிக்கையினை  நியாயமாக புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்குத் தன்னுடைய முயற்சி, அழுத்தங்களையும் அதனுடைய ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

பாரத தேசம் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம் ஏற்கனவே 13வது திருத்தச் சட்டத்தினை பெற்றுத்தந்தது இந்த பாரத தேசமே அந்த நன்றிக் கடன் எமக்குள்ளது” என்றார்.

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர் – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் துணை நிற்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக்குளியலுக்கெல்லாம் உருகாது  உந்தபனிப்பாறை. உந்த உறவை வைத்தே யாரையும் எம்மண்டை அண்டவிடாமல்,  எம்மை சிதறிபோகாமல்  கூட்டிச்சேர்த்து அணைத்து, எதிரியிடம் வித்து வேடிக்கை பாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மூன்று மொழி தெரிந்தவர் என்கிறார்கள் ஆனால் இந்தியாவை பற்றி தெரியாமல் இருக்கிறார் ?

9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நிச்சயம் துணை நிற்பார்கள். 

கடந்த 50 வருடங்களில் எங்கு துணை நின்றனர் ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நிச்சயம் துணை நிற்பார்கள். 

கிண்டல் 😁

இவர் இந்தியாவை தந்தை நாடு என்கிறார் தாய் தமிழகம் என்கிறார் இரண்டும் ஒரு நாடு தானே

  • கருத்துக்கள உறவுகள்

பாரத தேசம் வந்து செய்த பாதகங்கள் காணும். இவர் மகாபாதகப் பாரதத்திற்கு காவடி எடுக்கிறதை விட்டிட்டு.. உருப்படியா எதுவும் மக்களுக்கு செய்ய மாட்டாரோ..?!

பாரதப்படைகளின் காலத்தில் கொல்லப்பட்ட யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நீதி எங்கே.. அதையாவது கேட்டுப் பெற்றுக் கொடுங்களன்.. முதலில்.

எல்லாரின் உண்மை முகங்களும் பதவியும் அதிகாரமும் வர வர தான் வெளிய வருது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.