Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்!

October 16, 2021

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து வெளியாகிய தகவலில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு பதின்ம அகவை சிறுமிகள் தாயின் மூன்றாவது கணவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளகிவந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு காவற்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/167316

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படியான அரசியல் தலைமையற்ற நாதியற்ற இனமாகிவிட்டதால்..இப்படி ஈனத்தனங்கள் மலியத்தான் செய்கிறது.

ஒழுங்கான அரசன் இல்லா ஊர் இப்படித்தான் ஆகும்.. என்பதற்கு இன்று நம்ம இனமும் மண்ணும் ஒரு சாட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடையேயும்  பதின்ம வயசு பெண் பிள்ளைகளுடன் கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து பெற்று வாழும் பெண்கள்மேல் எம் கருணையே உருவான  வாலிபர்கள் குடும்பஸ்தர்கள் உட்பட  விரட்டி விரட்டி அன்பை பொழிவார்கள், ஓடி ஓடி உதவி செய்வார்கள் ,வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பேன் என்று சொல்லி வாக்குறுதிகள்கூட வழங்குவார்கள்.

அத்தனையும் தாய் மகள் உட்பட அனைவரையும் தப்பான ஒரு உறவுமுறை பொறிக்குள் விழுத்துவதற்கே என்பதை காலம் கடந்த பின்னரே புரிந்து கொள்கிறார்கள், சிலர் கொந்தளித்து காவல்துறைவரை போகிறார்கள், சிலர் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டுகிறார்கள்.

சில தாய்மார் பிரிவின் பின்னர் மிக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள், சிலர் ஒரு கட்டத்தின் பின்னர் தனிமை உடல் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் இன்னொரு துணையை தேடி ஒட்டுமொத்தமாக குடும்பத்தை சீர் குலைக்கிறார்கள்.

போர்க்கால சூழலினால் விபத்துக்களால் அகால மரணங்களால் துணையினை இழந்தவர்கள் இன்னொரு துணையை தேடுவது தப்பில்லை, ஆனால் சின்ன சின்ன குடும்ப தகராறுக்காக பிரிந்து சென்று தனியே வாழ்ந்து காமுகர்களிடம் சிக்கி பெற்ற மகள்களையும் அவர்களுக்கு இரையாக்கும் பலரை தாயகம் புலத்தில் எல்லாம் கண்டிருக்கிறோம்,

அதற்காக அனைத்து ஆண்களும் உத்தமர்கள் யோக்கியர்கள் என்றும் இல்லை, பல ஆண்களின் முழுநேர குடி, அடி உதை , , ஊர் சுற்றல் வேலை வெட்டிக்கு போகாமை , செயற்கை வறுமை ஏற்படுத்தல் எனும் பழக்க வழக்கங்களினால்  இப்படி ஒருவனோடு இனி வாழவே முடியாது என்ற நிலைமையும் பல பெண்களை பிரிந்து போய் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வழி வகுக்கிறது.

வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை பொறுத்தவரை   கல்யாணம் என்று வரும்போது  முன்பு என்ன நிலையில் வாழ்ந்திருந்தாலும் கடந்தகாலம் பற்றி கவலைபடாது நிகழ்காலம் பற்றியே சிந்தித்து இளைய தலைமுறை வாழ்வதால் பெரும்பாலும் இங்குள்ள தலைமுறைக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லாமல் போய்விட்டது.

தாயகத்தில் அப்படியல்ல திருமணம் என்று வரும்போது முதல் கேள்வியே அந்த பெண் பிள்ளைகளின் கடந்த காலம் பற்றியே இருக்கும். நல்ல ஒரு சம்மந்தம் அமைவது கண்டிப்பாக எட்டாக்கனியாகவே  இருக்கும்.

அதுவும்  பொருளாதாரத்திலும் அழகிலும் பெரிதாக சோபிக்காது இருந்தால் அதலபாதாளத்தில் விழுந்த நிலைதான்.

இந்த இழிநிலைக்கும் அவர்கள் குழந்தைகளின் கேள்விகுறியாகிவிட்ட எதிர்காலத்திற்கும் அவர்களின் பொறுப்பற்ற பெற்றோர்களே  பொறுப்பாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

இங்கு வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடையேயும்  பதின்ம வயசு பெண் பிள்ளைகளுடன் கணவரை பிரிந்து அல்லது விவாகரத்து பெற்று வாழும் பெண்கள்மேல் எம் கருணையே உருவான  வாலிபர்கள் குடும்பஸ்தர்கள் உட்பட  விரட்டி விரட்டி அன்பை பொழிவார்கள், ஓடி ஓடி உதவி செய்வார்கள் ,வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பேன் என்று சொல்லி வாக்குறுதிகள்கூட வழங்குவார்கள்.

அத்தனையும் தாய் மகள் உட்பட அனைவரையும் தப்பான ஒரு உறவுமுறை பொறிக்குள் விழுத்துவதற்கே என்பதை காலம் கடந்த பின்னரே புரிந்து கொள்கிறார்கள், சிலர் கொந்தளித்து காவல்துறைவரை போகிறார்கள், சிலர் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டுகிறார்கள்.

சில தாய்மார் பிரிவின் பின்னர் மிக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள், சிலர் ஒரு கட்டத்தின் பின்னர் தனிமை உடல் உணர்வு சம்பந்தபட்ட பிரச்சனைகளால் இன்னொரு துணையை தேடி ஒட்டுமொத்தமாக குடும்பத்தை சீர் குலைக்கிறார்கள்.

போர்க்கால சூழலினால் விபத்துக்களால் அகால மரணங்களால் துணையினை இழந்தவர்கள் இன்னொரு துணையை தேடுவது தப்பில்லை, ஆனால் சின்ன சின்ன குடும்ப தகராறுக்காக பிரிந்து சென்று தனியே வாழ்ந்து காமுகர்களிடம் சிக்கி பெற்ற மகள்களையும் அவர்களுக்கு இரையாக்கும் பலரை தாயகம் புலத்தில் எல்லாம் கண்டிருக்கிறோம்,

அதற்காக அனைத்து ஆண்களும் உத்தமர்கள் யோக்கியர்கள் என்றும் இல்லை, பல ஆண்களின் முழுநேர குடி, அடி உதை , , ஊர் சுற்றல் வேலை வெட்டிக்கு போகாமை , செயற்கை வறுமை ஏற்படுத்தல் எனும் பழக்க வழக்கங்களினால்  இப்படி ஒருவனோடு இனி வாழவே முடியாது என்ற நிலைமையும் பல பெண்களை பிரிந்து போய் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வழி வகுக்கிறது.

வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை பொறுத்தவரை   கல்யாணம் என்று வரும்போது  முன்பு என்ன நிலையில் வாழ்ந்திருந்தாலும் கடந்தகாலம் பற்றி கவலைபடாது நிகழ்காலம் பற்றியே சிந்தித்து இளைய தலைமுறை வாழ்வதால் பெரும்பாலும் இங்குள்ள தலைமுறைக்கு அது ஒரு பிரச்சனையாக இல்லாமல் போய்விட்டது.

தாயகத்தில் அப்படியல்ல திருமணம் என்று வரும்போது முதல் கேள்வியே அந்த பெண் பிள்ளைகளின் கடந்த காலம் பற்றியே இருக்கும். நல்ல ஒரு சம்மந்தம் அமைவது கண்டிப்பாக எட்டாக்கனியாகவே  இருக்கும்.

அதுவும்  பொருளாதாரத்திலும் அழகிலும் பெரிதாக சோபிக்காது இருந்தால் அதலபாதாளத்தில் விழுந்த நிலைதான்.

இந்த இழிநிலைக்கும் அவர்கள் குழந்தைகளின் கேள்விகுறியாகிவிட்ட எதிர்காலத்திற்கும் அவர்களின் பொறுப்பற்ற பெற்றோர்களே  பொறுப்பாகவேண்டும்.


உண்மை. சிறப்பானதொரு குமுகாய நோக்கு. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

தாயின் கணவரையும் சிறுமிகளின் தாயினையும் கைதுசெய்த முல்லைத்தீவு காவற்துறையினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

தாய் மூன்றாவது கணவருடன் வாழ்க்கை நடத்துகின்றார் எனும் போது.......
அந்த பிள்ளைகளை பார்த்து பரிதாபப்பட முடியுமே தவிர வேறொன்றுமில்லை.

இதே பிரச்சனை வெளிநாடுகளாய் இருந்தால் (இந்தியா அல்ல) அந்த பிள்ளைகளை அரசு தத்தெடுத்துக்கொள்ளும்.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.