Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் - இத்தாலியில் பயங்கரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர்  தனது சாபதி (11 வயது) மற்றும்  சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். 

வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில்,  நேற்று காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

போர்டோ சான் பான்கிராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் பெண்கள் காப்பகத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் பிள்ளைகளான சாபதி மற்றும் சாந்தனி அவர்களின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என விசாரணைகளின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது. 

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனை, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த இன்று நடைபெறவுள்ளது. 

குறித்த இரு பெண் பிள்ளைகளின் மரணமும் அந்ந  நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் - இத்தாலியில் பயங்கரம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசிக்கும் பொழுது The Trials of Gabriel Fernandez நினைவிற்கு வருகிறது.. என்னை இன்றுவரை வேதனைப்படுத்தும் ஒரு சம்பவம்.. 

Gaberiel கூட ஒரு 7 வயது சிறுவன், அரச உதவிப்பணத்தை பெறுவதற்காக தாயின் பெற்றோர்களினால் பாராமரிக்கப்பட்ட Gabriel தன்னுடன் கூட்டிச்சென்று, பின் தாயினாலும் தாயின் partnerனினாலும் தொடர்ச்சியாக 7 மாதங்கள்(சாகும் வரை) கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குழந்தை. இந்த வழக்கு Los Angels County children’s welfare systemத்தையே கேள்விக்கு உட்படுத்திய வழக்கு.. 

அதே போல இந்த பெண் கூட தனது குழந்தைகளை கொல்லும் அளவிற்கு தூண்டியது என்ன? அதுவும் பெண்கள் காப்பகத்தில் வாழ்ந்து வருகையில்.. 

பிள்ளைகளை பாராமரிக்க முடியாவிட்டால் பெறக்கூடாது என நம்புவதற்கு இவையும் ஒரு காரணம்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் இத்தாலி வெரோன் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. 

34 வயதான சசித்ரா நிசன்ஸலா என்ற பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த பாதக செயலை செய்த நிலையில் நேற்று முன் தினம் ஆற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசி மற்றும் தனிபடப்ட தகவல்கள் ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே அவரது சடலம் அடையாளம் காணப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 13:46, பிழம்பு said:

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சிங்களவர் செய்தால் இலங்கையர் அதே வேலையை தமிழர்கள் செய்தால் தமிழர் என்று போட்டு எம்மினத்தை சிதைப்பது வீரகேசரி போன்றவற்றுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.