Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

 

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

IMG_3771.JPG

 

கப்பம் பெறும் நோக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டில் கடற்படை அதிகாரிகளால் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்கான நீதிநிலைநாட்டப்படவில்லை.

மேற்படி 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளடங்கலாக கடற்படை அதிகாரிகள் 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் முன்னாள் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

 

IMG_3698.JPG

இருப்பினும் அதற்கு மாறாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்குத் தற்போதைய சட்டமா அதிபர் தீர்மானித்த நிலையில், அதற்கெதிராக குறித்த வழக்கின் வாதிகள் தரப்பினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன் அம்மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG_3694.JPG 

அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துவெளியிட்ட காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறியதாவது,

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பலவருடங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனூடாகத் திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத்தளபதி உள்ளடங்கலாக 14 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னாள் சட்டமா அதிபரினால் தீர்மானிக்கப்பட்டது. 

அதேவேளை தான் குற்றமிழைக்கவில்லை என்று கூறுவதற்கும் அதற்காக சட்டரீதியாகப் போராடுவதற்குமான உரிமை வசந்த கரன்னாகொடவிற்கு இருக்கின்றது.

ஆனால் கடந்த மேமாதம் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம், ஆகஸ்ட் மாதமளவில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்கின்றார்.

IMG_3681.JPG

இவ்விடயம் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன்மூலம் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய சட்டமா அதிபரினால் எதனடிப்படையில் அந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது? சட்டமா அதிபர் மக்களை முன்னிறுத்தி செயற்படவேண்டுமே தவிர, அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

அரசாங்கத்தின் அரசியல் ரீதியான தேவைகளுக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் அடிபணிந்திருக்கின்றார். அதன் காரணமாகவே கடந்த காலத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த பலர், அவற்றிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது சட்டமா அதிபர் எதுவும் பேசவில்லை. 

ஆனால் இது 11 பேரின் உயிருடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனைகளை வழங்கவேண்டும் என்று நாம் கோரவில்லை. மாறாக உரியவாறு விசாரணைகளை மேற்கொண்டு, சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். 

அதேவேளை சட்டமா அதிபரின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர்மீது எமக்கு நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்துவதற்குமே நாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்று குறிப்பிட்டார். 

காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

42 minutes ago, பிழம்பு said:

(நா.தனுஜா)

 

 

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தினத்தின்

அதிகாரத்தில் அமர்த்தப்பட்டா தமிழர் ஒருவரிடம் இருந்து எதை எதிர் பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம், ஆகஸ்ட் மாதமளவில் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்கின்றார்.

 

5 hours ago, பிழம்பு said:

அரசாங்கத்தின் அரசியல் ரீதியான தேவைகளுக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் அடிபணிந்திருக்கின்றார்.

 

5 hours ago, பிழம்பு said:

சட்டமா அதிபர் மக்களை முன்னிறுத்தி செயற்படவேண்டுமே தவிர, அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

தமிழர் பதவிகளை ஏற்பதாலோ, தவிர்ப்பதாலோ எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தமிழரும் சமமாக நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு நீதிச்சேவையில் அதிகாரம் அளித்திருக்கிறோம், அவர்களே நீதிமன்றத்திற்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்  என்கிற மாயையையும், சர்வதேசத்தின்  பாராட்டையும் பெறும் அதே நேரம் உள்நாட்டு மக்களின் வெறுப்பையும் பெறுவதற்கே இந்தபதவிகள் தமிழருக்கு வழங்கப்படுகின்றன.  ஆகவே தமிழர் நாம் எப்படி நடத்தப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்று இவர்களோடு எப்படி நாம் சேர்ந்து வாழ முடியும்? எப்படி சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும்? என்கிற எமது நிஞாயமான கோரிக்கையை ஏற்கச் செய்வதற்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். ஒப்பாரி வைப்பதாலோ, சேர்ந்து வாழலாம் என்கிற கனவிலோ எதுவும் மாறாது.  சிங்களவன் ஒரு துரும்பையும் எம்மை அழிப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் பயன்படுத்துவது போல, நாமும் அவனது ஏமாற்றுக்களையும், தந்திரங்களையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கையிலேயே நடத்தப்படலாம் என்கிற ஒரு நிலை உருவாவதற்கு இது ஓர் திறவுகோலாக அமைந்துவிடும்.   நம்ம அரசியவாதிகள் பாராளுமன்றத்தில் ஊளையிட்டுவிட்டு கூடிகொண்டாடுவார்கள். நாமே நம்மை அழிவிலிருந்து பாதுகாக்க எம்மாலியன்ற நடவடிக்கைகளை எடுத்து அவனது முயற்சிகளை முறியடிப்போம். புலம் பெயர்ந்தோரை வளைத்துப்பிடிக்க நம்ம தமிழ் முகவர்களை பயன்படுத்த அரசு முனையும்போது கூடுதல் எச்சரிக்கை எடுக்க வேண்டும். நம்ம சட்டாம்பி இப்பவே ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்திருப்பார், எப்படி புலம் பெயர்ந்தவர்களை சிங்களத்தின் வலையில் வீழ்த்துவது என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.