Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி

8 நவம்பர் 2021
இலங்கையிலும் கனமழை: 6 பேர் பலி

பட மூலாதாரம்,KRISHANTHAN

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4300ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடர்களால் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 250ற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மேலும், காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமொன்று உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது

இந்த தாழமுக்கம் (காற்றழுத்த தாழ்வு நிலை) மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடை காற்று வீசுவதுடன், சில சந்தர்ப்பங்களில் கடும் மழையுடனான வானிலையும் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) பிற்பகல் முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடற்ல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடல் தொழிலாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-59207997

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி

இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க (காற்றழுத்த தாழ்வு நிலை) நிலைமை காரணமாக, 15 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கேகாலை - ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்ததாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான தந்தை, கேகாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கேகாலை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, பாரிய மண்மேடொன்று சரிந்து வீழ்ந்திருந்தது.

மக்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை?

இந்த பகுதியில் மண்சரியும் ஆபத்து காணப்படுகின்ற நிலையில், அங்கிருந்து மக்களை ஏன் வெளியேற்றவில்லை என மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரியவிடம் பிபிசி தமிழ் வினவியது.

குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றமையினால், அந்த பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு நேற்றைய தினமே தாம் அறிவித்தல் பிறப்பித்திருந்ததாக அவர் கூறினார்.

இலங்கையில் மழையால் மண்சரிவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதியில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

தமது அதிகாரிகள் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும், குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முடியாது என கூறியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியிலேயே, இன்றைய தினம் மண்மேடு சரிந்து குறித்த வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

மற்றுமொரு மண்சரிவு

குருநாகல் - நாரம்மல பகுதியில் இன்று மற்றுமொரு வீட்டின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

கடும் மழையுடனான வானிலை நிலவிய தருணத்திலேயே, வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்மேடு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் வீட்டில் தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், சம்பவத்தில் தாயும், மகனும் உயிர் தப்பியுள்ளதுடன், மகள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மழையால் மண்சரிவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

சம்பவத்தில் காயமடைந்த யுவதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதிகள் குறித்து ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அது குறித்து அக்கறை கொள்வதில்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் மழையால் மண்சரிவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்கள் அது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதற்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவுகள்

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதியில் 2016ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டிருந்தது.

இந்த மண்சரிவில் சுமார் 30 பேரில் சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்ட போதிலும், 150திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

நூற்றுக்கணக்கானோரின் சடலங்களை மீட்காது, மீட்புப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்த பகுதியில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருந்த நிலையில், சிலரது சடலங்கள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டிருந்தன.

ஏனைய நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் கோர தாண்டவத்தால் 15 பேர் பலி; 28,263 பேர் பாதிப்பு

image_69651c505f.jpg

நாட்டில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 மாவட்டங்களிலுள்ள 7,529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கி 9 பேரும் மண்சரிவு காரணமாக 4 பேரும் மின்னல் தாக்கத்தால் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த 470 குடும்பங்களைச் சேர்ந்த 1,688 பேர் பாதுகாப்பான தங்குமிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடக) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டங்களில் 13 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மஹா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும், களுகங்கை மில்லகந்த பகுதியிலும், ஜின் கங்கை பத்தேகம பகுதியிலும், நில்வள கங்கை தல்கஹகொட பகுதியிலும், அத்தனகல ஓயா துனமலை பகுதியிலும் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக கற்பிட்டி, பாலாவி பிரதேசத்தில் நள்ளிரவு வேளையில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கிரியுல்ல நகர் மூழ்கியது

மஹாஓயா பெருக்கெடுத்து கிரியுல்ல நகரமும் மூழ்கியுள்ளதால், கொழும்பு - குருநாகல் வழித்தட இலக்கம் 5 இன் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வீதியூடாகப் பயணிப்போர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 இன்றும் கடும் மழை பெய்யும்

இன்றையதினமும், வடக்கு, வட மத்தி, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட மகாணங்களுடன், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ள திணைக்களம், மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதால், இன்று  இரவில் இருந்து மறு அறிவித்தல் வரை நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொண்டுள்ள திணைக்களம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அறிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ரம்புக்கனையில் மூவர் பலி

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, உடகலதெனிய பகுதியில் இன்று (09) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரான சுரங்கனி லக்ஷிகா (36), மகள் கசுனி மாரசிங்க (08) மற்றும் உறவினரான மதுஷிகா (13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், படையினரும் நிவாரணக் குழுக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

மண்சரிவில் தாதி மரணம்
 
குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, வென்னெருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.

கடும் மழை காரணமாக இன்று (09) அதிகாலை 1.00 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

மண்சரிவுக்குள் சிக்கி காயமடைந்த மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், வீட்டிலிருந்த அவரின் தாய், சகோதரி ஆகிய இருவரும் சிறு காயங்களுடன், உயிர் தப்பியுள்ளனர்.

பல இடங்களில் மின் தடை

சீரற்ற வானிநிலை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கான பணிக்குழுக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். அரச பாடசாலைகளுக்கு பூட்டு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படும் என யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்ததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பாடசாலைகளுக்கும் பூட்டு

தற்போது நிலவுகின்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடுமையாக மழை பெய்து வருவதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற வானிலையை  பொறுத்தே விடுமுறையை நீடிப்பதா இல்லை என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

 

Tamilmirror Online || இயற்கையின் கோர தாண்டவத்தால் 15 பேர் பலி; 28,263 பேர் பாதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மனம் வலிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம் – ஐவர் காயம்!

நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து 481 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 498 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 23 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 3 ஆயிரத்து 537 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2021/1249042

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.