Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் - முஸ்லிம் எல்லை பிரச்சினை ; சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் - பிள்ளையானுக்கு இடையில் தர்க்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக கட்டமைப்பில் கோரளைப்பற்று மத்தி, பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக  பிரிவுகளில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் விஸ்தீரணங்களில் திட்டமிட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. நஸிர் அஹமட்டினால் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையின் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எம்.பி. க்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யுமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் (பிள்ளையான்) தர்க்கம் ஏற்பட்டது.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் என்பன தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ஹரிஸ் எம்.பி. ஆகியோரும் உரையாற்றியிருந்தனர். 

திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணிகள், நிலங்கள், ஆளுகை எல்லைகள் கபளீகரம் செய்யப்படுவதாக இவர்கள் சபையில் சுட்டிக்காட்டியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்களாக  இருந்தவர்கள் மீதும் மாவட்ட செயலகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த பிரேரணை மீது விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உரையாற்றும்போதே  தர்க்கம் ஏற்பட்டது. 

சந்திரகாந்தன் எம்.பி. பேசுகையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாழைச்சேனை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணை அப்பட்டமாக இனவாத ரீதியானது. 

இந்த பிரேரணையை கொண்டு வந்த எம்.பி.க்கள் எவரும் வாளைச்சேனையை சேர்ந்தவர்கள் அல்ல. நான் அங்கு பிறந்து வளர்ந்து அரசியல் செய்பவன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எல்லைப்பிரச்சினைகள் உள்ளன. இங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு யானைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், மாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், 500 க்கும் அதிகமான குளங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், காடுகள், மலைகள், எல்லாவற்றையும் சேர்த்து தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் போல் கூறுகிறார்கள். இதனை நீண்டகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ரவூப் ஹக்கீமும் குறிப்பிட்டது வேதனையளிக்கின்றது.

அங்குள்ள பிரச்சினையை  நிர்வாக ரீதியான பிரச்சினையாக பார்க்கப்பட்டு தீர்க்கப்படவேண்டும். குறிப்பாக எமது வாழைச்சேனையில் என்னுடைய பகுதியில் நகரங்களே  இல்லாமல் போய்விட்டன. நீங்கள் சொன்ன ஓட்டமாவடி பிரதேச சபை தமிழர்களின் புதைகுழி மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சந்தைக்கட்டிடம் ஒரு இந்து ஆலயத்தை இடித்தே அமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல விடயங்கள் உள்ளன.

இது தொடர்பில் பேசினால் முரண்பாடுகளையே  வளர்த்து கொள்ள முடியும் .இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் மட்டக்களப்பில் உள்ள கேபிசி மத்தியையும் கே.பி.சி மேற்கையும் சேர்த்து முஸ்லிம்கள் ஒரு பிரதேசமாக உருவாக்கினால் எல்லாப்பிரச்சினைக்கும் முடிவு வரும் என்பதே எமது  நிலைப்பாடு. 

நீங்கள் இங்கு குறிப்பிட்ட  அறிக்கை மிகப்பிழையான அறிக்கை. நீங்கள் அரசியலில் மிகப்பலமாக  இருந்த போது விடுதலைப்புலிகளின் போராட்டம் கடுமையையே இருந்தபோது மிக மோசமாக உங்கள் அரசியல் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை. வாகரைப்பிரதேசம் வரலாற்று ரீதியாக தனியான பிரதேசம். 

அங்குள்ள மாங்கேணி தெற்கு, புனானை கிழக்கை எப்படி உங்களின் மத்தியுடன் இணைக்க முடியும்? சாத்தியம் இல்லாத விடயங்களைக்கொண்டு வந்து பழைய ஆணைக்குழு அறிக்கைகளை நீங்கள் இங்கு முற்படுத்தாமல் இப்போது அரசு கொண்டுவந்துள்ள ஆணைக்குழுவில் முற்படுத்தி நிர்வாக ரீதியான பிரச்சினைகளை சரியாக செய்ய வேண்டும்.

குறிப்பாக இலங்கையில் எங்கும் இல்லாத பிரச்சினையாக  அளவுக்கதியாகமான கிராமசேவகர் பிரிவுகள் எந்தவித வர்த்தமானி அறிவித்தல்களும்  இல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன. வாழைச்சேனை தமிழ் கிராமம். எமது நகரங்கள் அழிக்கப்படாமல். 

பாரம்பரிய வைத்தியசாலைகள் இல்லாமல் ஆக்கப்படாமல் தேவநாயகம் காலப்பகுதியில் செய்யப்பட்ட சில விடயங்கள் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தது என்பதற்காக வரலாற்றில் அதனை நீங்கள் காட்ட முற்படக்கூடாது. 

நியாயமானவற்றை நியாயமாக கேட்டால் மட்டுமே அங்கு இன ஐக்கியம் ஏற்படும் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதன்போது இடையில் எழுந்த நசீர் எம்.பி. நானும் மட்டக்களப்பை சேர்ந்தவன் தான் எனக்கூறி மேலும் ஏதோ  கூற முற்பட சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்க வில்லை. 

இதேபோன்று ஹரீஸ்,ஹக்கீம் எம்.பி.க்களும் இடையிடையில் சில கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர். இறுதியில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்றார்.  

தமிழ் - முஸ்லிம் எல்லை பிரச்சினை ; சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் - பிள்ளையானுக்கு இடையில் தர்க்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓட்டமாவடியில் 17 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அங்கு தமிழருக்குச் சொந்தமான வீடுகள். பெரும் காணிகள். சில வியாபார நிலையங்கள் எனப் பல இருந்தன. இன்று அங்கு ஒரு தமிழரும் இல்லை, தமிழருக்குச் சொந்தமாக இருந்த வீடுகள், காணிகள், வியாபார நிலையங்கள் எதுவுமே அங்கு இல்லை. தமிழர்களைத் துரத்திவிட்டதோடு இல்லாமல் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளையும் அவர்களுடைய அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அங்குள்ள முசுலீம்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.  

நான் புலம்பெயர்ந்து வந்தபின்பு ஒருமுறை நாட்டிற்குச் சென்றசமயம், என்னுடன் வேலைசெய்த முசுலீம் நண்பர்களையும் சந்திக்க ஓட்டமாவடிக்கும் சென்றிருந்தேன். என்னை வரவேற்று உபசரிக்க அவர்கள் தவறவில்லை. பல விடயங்களை நாங்கள் கதைத்து அளவளாவியபோது, அங்கு ஒருவர் "இங்கு இப்போது ஒரு தமிழ்....." என்று வாயைத் திறந்தபோது பக்கத்தில் இருந்தவர் தட்டவும், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொல்லவந்ததைச் சொல்லாமல் வாயைத் திரும்ப மூடிக்கொண்டார். ஆனாலும் அவர் என்ன செல்லவந்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நான் ஓட்டமாவடியில் 17 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அங்கு தமிழருக்குச் சொந்தமான வீடுகள். பெரும் காணிகள். சில வியாபார நிலையங்கள் எனப் பல இருந்தன. இன்று அங்கு ஒரு தமிழரும் இல்லை, தமிழருக்குச் சொந்தமாக இருந்த வீடுகள், காணிகள், வியாபார நிலையங்கள் எதுவுமே அங்கு இல்லை. தமிழர்களைத் துரத்திவிட்டதோடு இல்லாமல் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளையும் அவர்களுடைய அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அங்குள்ள முசுலீம்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.  

நான் புலம்பெயர்ந்து வந்தபின்பு ஒருமுறை நாட்டிற்குச் சென்றசமயம், என்னுடன் வேலைசெய்த முசுலீம் நண்பர்களையும் சந்திக்க ஓட்டமாவடிக்கும் சென்றிருந்தேன். என்னை வரவேற்று உபசரிக்க அவர்கள் தவறவில்லை. பல விடயங்களை நாங்கள் கதைத்து அளவளாவியபோது, அங்கு ஒருவர் "இங்கு இப்போது ஒரு தமிழ்....." என்று வாயைத் திறந்தபோது பக்கத்தில் இருந்தவர் தட்டவும், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொல்லவந்ததைச் சொல்லாமல் வாயைத் திரும்ப மூடிக்கொண்டார். ஆனாலும் அவர் என்ன செல்லவந்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 

இதைபற்றியெல்லாம் எங்கள் ஐடியா ஆசாமிகள் கதைக்கவே மாட்டார்கள். சுமந்திரன் யாழில் நடந்த முஸ்லீம் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு என்றால் அதுக்கு முட்டுக்கொடுக்க வரிசையா வெவ்வேறு ஐடியோடை வந்து நிப்பினம். ஏனென்றால் எங்கடை சில சனத்தின்ரை டிசைன் அப்பிடி!!🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.