Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கும் வரை,அதிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்துடன் செயற்படும்  வரை நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது. நாடு முழுவதிலும் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற நிலை இல்லாவிட்டால் அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்களைப் பிரித்து இனவாதம் மூலம் வாக்குகளுக்காக செயற்படும் நிலை மாற வேண்டும். அரசாங்கம் தெரிவிக்கும் பொய் தொடர்பில் தற்போது சிங்கள மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன எனத் தெரியாத ஒருவரே தற்போது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கைகள் குறித்து வெட்கப்படுகின்றோம். அரசாங்கம் கடந்த எழுபத்தி நான்கு வருடங்கள் பயணித்த பாதையிலிருந்து மாற வேண்டும். அதே பாதையில் தொடர்ந்து பயணித்து பன்மை வாதத்தை உணராத வகையில் நாட்டை உருவாக்க முடியாது .

இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொலை செய்வது மாத்திரமல்ல. 4 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகி இருந்த நிலையில், 70 ஆயிரம் பேருக்கே  உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பினீர்கள். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 2009 மே 16ஆம் திகதி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள நானே அன்று மத்தியஸ்தராக இருந்து செயற்பட்டேன். யுத்தத்தை நிறுத்த பசில் ராஜபக்ஷ்விடன் நான் கதைத்தேன். ஆனால் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒன்றும் இடம்பெறவில்லை. விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஆயுதங்களை கீழே வைத்த பின்னரும் இராணுவத்தினர் தாக்குல் மேற்கொண்டனர்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் நாடு இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட பயன் இதுதான். 

எனவே நாம் சர்வதேச விசாரணை பற்றி பேசினால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும் என கேட்கின்றேன். தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்களது உரிமைகளையே அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் அதற்கான அருகதை உடையவர்கள். அதை அரசாங்கம் புரிந்து செயல்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.
 

https://www.virakesari.lk/article/118415

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

ரிஎன்ஏ இல் இருந்து இவர்களை வெளியேற்றி கூட்டணியை உடைத்ததே சம்பந்தர் தானே.

அப்புறம் இல்லாததொன்றை இவர்கள்களால் உடைக்கலாம்.

தம்பிக்கு இருந்தா போல் கூட்டணியில பாசமாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கபிதான் இலகுவாக உங்களது குற்றச்சாட்டைக் கடந்துபோக முடியாது அவர்களது எஜமானர்கள் யார் என்பதை உங்களால் நிரூபணத்துடன் கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரிஎன்ஏ இல் இருந்து இவர்களை வெளியேற்றி கூட்டணியை உடைத்ததே சம்பந்தர் தானே.

அப்புறம் இல்லாததொன்றை இவர்கள்களால் உடைக்கலாம்.

தம்பிக்கு இருந்தா போல் கூட்டணியில பாசமாயிருக்கு.

கூட்டணியில் பாசம் அல்ல.

அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிய வார்த்தைகள்  இவை.

"அடுத்த 10 வருடத்திற்குள் TNA யை இல்லாது ஒழிப்பேன்"

இப்போது எமக்குள் ஒற்றுமையே தேவை. ஆனால் நாங்கள் நம்பும் அல்லது எதிர்பாற்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் தத்தமெக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்து மிக இழிவான அரசியலைச் செய்கிறார்கள்.

இவர்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல். 

அவர்கள் தங்கள் இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

18 minutes ago, Elugnajiru said:

கபிதான் இலகுவாக உங்களது குற்றச்சாட்டைக் கடந்துபோக முடியாது அவர்களது எஜமானர்கள் யார் என்பதை உங்களால் நிரூபணத்துடன் கூறமுடியுமா?

மேலே கூறப்பட்ட பதில் உங்களுக்கும் பொருந்தும். 

நாடாளுமன்றத்தில் வைத்து கஜேந்திரகுமார் யாருக்கு  கூறினார் என்பதையும் என்னால் கூற முடியும். 

என்னுடைய இந்தத் தகவல் / குற்றச்சாட்டை நீங்களே விசாரித்து உறுதிப்படுத்த முடியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இப்போது எமக்குள் ஒற்றுமையே தேவை. ஆனால் நாங்கள் நம்பும் அல்லது எதிர்பாற்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் தத்தமெக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்து மிக இழிவான அரசியலைச் செய்கிறார்கள்.

இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது யாரையா?
மற்றையவர்கள் சொல்லாமல் செய்ததை செய்வதை கஜன் குழு சொல்லி செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

இதைத்தானே சுமந்திரன் கனகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்! பிறகென்னத்திற்கு வேற ஆக்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

இதைத்தானே சுமந்திரன் கனகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்! பிறகென்னத்திற்கு வேற ஆக்கள்??

என்னிடமும் அதே கேள்விதான்..🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டில் புல்லா அபிவிருத்தி அரசியலுக்க நுழைஞ்சு எப்படியாவது கிடைக்க கூடியவற்றை கஸ்ரப்பட்ட தமிழ்சனத்துக்கு பெற்றுகுடுத்து ஒருமாரி தமிழனை வள்த்துவிடோனும்..

இல்லை எண்டால் எப்படியாவது வெளிநாடுகளின் காலைப்பிடிச்சாவது ஒரு தீர்வு பெற்றுக்குட்த்திருக்கோனும்..

பன்னெண்டு பதின்மூண்டு வருசமாகுது நாங்கள் நம்பியவர்கள் இல்லாமல் போய்.. அண்டேல இருந்து இண்டு வரைக்கும் இதே பல்லவிதான் தமிழ்தேசிய அரசியல்வாதிகள்..

போறது பாளிமெண்ட் கன்ரில்ல தின்னுறது இப்பிடி ஏதும் அறிக்கைவிடுறது வந்து வடிவாவீட்டிலசமைச்சு தண்ணி அடிச்சு பிரெண்ட்ஸ் ஓட என்யாய் பண்றது.. பிளைட் டிக்கட் ஆரும் ஓசில போட்டு கூட்டத்துக்கு கூப்பிட்டா கனடா அவுஸ்திறேலியா எண்டு போறது.. இடையில ரான்சிற்ல லண்டனுக்கும் போறது… எம்பி பெனிபிற் எடுக்கிறது…

பேசாம தமிழர்களுக்கு சிங்கள பாளிமென்டில பதவி இல்லை எண்டு இலங்கை அரசு அறிவிச்சு விட்டுதெண்டா எங்களபுடிச்ச தொல்லைகள் ஒழிஞ்சுதெண்டு நிம்மதியா இருக்கலாம்..🤦🏻

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.