Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத தடைச்சட்டத்தில்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பயங்கரவாத தடைச்சட்டத்தில்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரன் அன்ரூசுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
269732635_452781142882205_61500141992998
பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ் என்னிடம் தெரிவித்தார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக திருமதி அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு அவுஸ்திரேலியா வழங்கியதை அவரிடம் நான் நினைவு கூர்ந்தேன். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பாதுகாப்புச் செயலாளராக நான் இருந்தபோதுஇ மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு எனது மகிழ்ச்சியையும் நான் தெரிவித்துக்கொண்டதுடன்
போதைப்பொருள் வியாபாரம் கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதனையும் தெரிவித்தேன். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
269740047_452781132882206_86714130208614
இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் திருமதி ஆண்ட்ரூஸ் கூறினார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருவதனை அவரிடம் நான் தெரிவித்தேன்.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

https://thinakkural.lk/article/156368

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருவதனை அவரிடம் நான் தெரிவித்தேன்.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

புலம்பெயர் அமைப்புகள் டசின்  கணக்கில் உள்ளன அதில் எது வாயிருக்க கூடும் ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருவதனை அவரிடம் நான் தெரிவித்தேன்.என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

பயங்கரவாதச்சட்டத்தால் குரல்வளை நசுக்கப்படுபவர்கள் புலத்திலுள்ளவர்கள். புலம்பெயர்ந்தவர்களுடன் ஏன் புரிந்துணர்வு? தலையில் நோய் இருக்க காலுக்கு மருந்து போட முயற்சிக்கிறேன்  என்கிறார். எல்லாமே விசித்திரம். புலம்பெயர்ந்தவரின் உதவி அவசரமாக தேவைப்படுகிறது. அங்கேயும் அவருக்குரிய ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 03:37, satan said:

பயங்கரவாதச்சட்டத்தால் குரல்வளை நசுக்கப்படுபவர்கள் புலத்திலுள்ளவர்கள். புலம்பெயர்ந்தவர்களுடன் ஏன் புரிந்துணர்வு? தலையில் நோய் இருக்க காலுக்கு மருந்து போட முயற்சிக்கிறேன்  என்கிறார். எல்லாமே விசித்திரம். புலம்பெயர்ந்தவரின் உதவி அவசரமாக தேவைப்படுகிறது. அங்கேயும் அவருக்குரிய ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.


இது ஒரு பரப்புரைக்கான உத்தியேயன்றி செயல்வடிவமாகச் செய்யமாட்டார்கள். வெளிநாடுகள் முதலில் நிதிவழங்குவதை நிறுத்தினாலே பாதிவிடயம் சிங்கள அரசு திருந்தவாய்ப்புண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

சொறி லங்கா வால் தாங்களால்  உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்பாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சொறி லங்கா வால் தாங்களால்  உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்பாக இருக்கும் .

அதேதான்! புலம்பெயர்ந்த புலிகளின் விருப்புக்கேற்ப அரசியல் செய்ய முடியாது என கரிச்சுக்கொட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போ புலம்பெயர்ந்த அமைப்புகள் என்று மூச்சுக்கு மூச்சு உச்சரிப்பதைப்பார்த்தால் பார்த்தால் அங்கேயும்  திட்டமிட்டு ஏதோ 
குழப்பி வேலை  நடக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவும் கையோடு நம்ம சட்டாம்பியும் சுற்றிவந்து காக்கும் அமைதி நல்லதற்கில்லை.

5 hours ago, nochchi said:

வெளிநாடுகள் முதலில் நிதிவழங்குவதை நிறுத்தினாலே பாதிவிடயம் சிங்கள அரசு திருந்தவாய்ப்புண்டு. 

வெளிநாடுகள் வேண்டிய  நேரத்தில் வேண்டாததை செய்து பிரச்சனையை ஊக்குவித்து கொண்டே இருக்கும். கேட்டால் மனிதாபிமானம் என்று சொல்லும், மனிதர்கள் கொல்லப்படும் போது மட்டும் அவர்களது மனிதாபிமானம் உறங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

வெளிநாடுகள் வேண்டிய  நேரத்தில் வேண்டாததை செய்து பிரச்சனையை ஊக்குவித்து கொண்டே இருக்கும். கேட்டால் மனிதாபிமானம் என்று சொல்லும், மனிதர்கள் கொல்லப்படும் போது மட்டும் அவர்களது மனிதாபிமானம் உறங்கிவிடும்.

மேற்கினதோ அல்லது கிழக்கின் அதிகார பலமுடைய நாடுகளினதோ அளவுகோல் ஒரேமாதிரியிருப்பதில்லை என்பதை உலகில் பரவலாகப் பதிவாகியுள்ளது. இஸ்ரேல், உக்ரேன்,பெலருஸ், இலங்கை , ஆப்கான்........என பெரியதொரு பட்டியலைக் காணலாம். இந்த உலகா சமத்துவமான நீதியைத்தமிழருக்கு வழங்கவேண்டுமென ஒரு பேச்சுக்காகச் சொல்வதாகவே நகர்கிறது.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.