Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை " - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 ஜனவரி 2022, 06:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரெயேசூஸ் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார்.

சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரான்சில் செவ்வாய்க் கிழமையன்று கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியதாக தரவுகள் காட்டுகின்றன.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது, டாக்டர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம், ஒமிக்ரான் திரிபு கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் 1.8 கோடி பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட வழிவகுத்தது.

சராசரியாக, இந்தத் திரிபு குறைந்த தீவிர்த் தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும், "இதுவொரு லேசான நோய் என்ற விவரிப்பு தவறாக வழிநடத்துகிறது," என்று அவர் கூறினார்.

"ஒமிக்ரான் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. மேலும், கடுமை குறைவாகவுள்ள பாதிப்புகளும்கூட சுகாதார வசதிகளை மூழ்கடிக்கின்றன.

உலகளவில் ஒமிக்ரானின் தொற்றுகளின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவு அதிகரித்து வருகிறது. மேலும் புதிய கொரோனா திரிபுகள் உண்டாகவாய்ப்புள்ளது. அதனால்தான் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முக்கியமானதாக உள்ளது," என்று அவர் உலக தலைவர்களை எச்சரித்தார்.

மேலும், "தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம் குறைவாக உள்ள பல நாடுகளைப் பற்றி நான் குறிப்பாகக் கவலைப்படுகிறேன். ஏனெனில், மக்கள் தடுப்பூசி போடாததால், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயம், பல மடங்கு அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கான பிரிவின் இயக்குநர் டாக்டர் மைக் ரயான், ''ஒமிக்ரானின் பரவல் அதிகரிப்பது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் இது அதிகமாக இருக்கும்,'' என்று எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா

புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

 

ஒமிக்ரான் திரிபு பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டென்மார்க்கில், செவ்வாய்க்கிழமை அன்று 33,493 பேர் கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் இத்தாலியில் சுகாதார அதிகாரிகள் 228,179 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை, 83,403 ஆக இருந்தது.

இதற்கிடையில், ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதைப் பதிவு செய்தது. திங்கள் கிழமையன்று, 102,144 பேருக்கு கோவிட் இருந்தது. ஒரே நாளில் நான்கு மடங்கு அதிகமாகத் தொற்றுப் பரவல் நிகழ்ந்துள்ளது. நோய்த்தொற்றுகள் இப்போது வாராந்திர சராசரியாக ஒரு நாளைக்கு 3,00,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளன.

சமீபத்திய எழுச்சி மிகுந்த பரவலுக்கு மத்தியில், பிரெஞ்சு அமைச்சர்கள் ஆசிரியர் சங்கங்களோடு ஒரு சச்சரவை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அரசின் கோவிட் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை எதிர்த்து இந்த வாரம் இரண்டவது பெரிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நெறிமுறைகள் வகுப்புகளைக் கடுமையாக சீர்குலைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் பாதி ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருந்த, கடந்த வாரத்தின் ஒரு நாள் வெளிநடப்பைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பு இடையூறுகள் சமாளிக்க முடியாததாகிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிரமப்படுகின்றனர் மற்றும் மாணவர்கள் சோதனைகளுக்ககக் காத்திருக்கும்போது, பெற்றோர் மருந்தகங்களுக்கு வெளியெ நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகப் பதிவு செய்தது.

பட மூலாதாரம்,கோவிட் 19 பரவல்

 

படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாகப் பதிவு செய்தது.

ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம்

சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை ஏற்கெனவே உச்சத்தை எட்டியிருக்கலாம் என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் உள்ளன.

அயர்லாந்தில் சமீபத்திய நாட்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் டோனெல்லி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மாத இறுதிக்குள் தளர்த்தப்படலாம் என்று மாநில ஒளிபரப்பாளரான ஆர்.டி.இ-யிடம் கூறினார்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயின் அரசின் தகவல்கள் காட்டுகின்றன. இருப்பினும் வல்லுநர்கள் தரவை அதிகமாகப் படிப்பது குறித்து எச்சரித்தனர்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஓமிக்ரான் அலை தொடங்கியதில் இருந்து புதிய நோய்த்தொற்றுகள் முதன்முறையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன என்று ஸ்பெயினின் அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன - இருப்பினும் தரவுகளுக்கு உள்ளேயே அதிகமாகக் கவனம் செலுத்துவது குறித்து வல்லுநர்கள் எச்சரித்தனர்.

பிரிட்டனில், தினசரி நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதால், அரசாங்க அமைச்சர்கள் புதன்கிழமை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-60049032

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்துக்குள் கொரோனா முடிவுக்கு வருகிறது என சில கிழமைக்கு முன் அறிக்கை விட்ட டெட்றோஸ்  நீங்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

பிரான்சிலும்  இதே  கதைதான்

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு  இனி  ஆபத்தில்லை  என்றநிலைக்கு  வருகிறார்கள்  போலும்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nunavilan said:

இந்த வருடத்துக்குள் கொரோனா முடிவுக்கு வருகிறது என சில கிழமைக்கு முன் அறிக்கை விட்ட டெட்றோஸ்  நீங்கள் தானே?

 

8 hours ago, பெருமாள் said:

எல்லா நாடும் அலறுது இங்கு UK யில் முகக்கவசம் கட்டயாமில்லை கொரோநோக்கு முந்திய காலம் போல் சினிமா பப் எங்கும் போகலாம் கட்டுப்பாடுகளை எடுக்கிறார்கள் ஆனால் நாள் ஒன்றுக்கு தொத்து பரவல் 1 லட்சம் 😀போரிஸ் க்கு மண்டை கழண்டு போச்சுது போல் இருக்கு .

 

8 hours ago, விசுகு said:

பிரான்சிலும்  இதே  கதைதான்

ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு  இனி  ஆபத்தில்லை  என்றநிலைக்கு  வருகிறார்கள்  போலும்???

 

கொரோனா இமிக்கிரான் எல்லாம் ஒருவித வியாபார யுக்திகள் என்கிறார்கள்.

நான் மூன்று ஊசிகள் போட்ட பின்னரும் நான்காவது தடுப்பூசிக்கு தவணை தந்து விட்டார்கள்.


கொரோனா சட்டங்களுக்கெதிரான ஆர்ப்பாட்டகாரர்களை மதிக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.