Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரட்டை வேடங்கள்

Featured Replies

முன் சிரித்து

உள்ளத்தில் ஒன்றை வைத்து

உண்மையில்லா வார்த்தைகளை

பேசுகின்ற மனிதர்களோ

நாமெல்லாம் ஓரே இனம் ஆனால்

என் குலம் தான் உயர்ந்தது

நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்

ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர்

அன்பென்றும்

பண்பென்றும் செல்லிக்கொண்டு

வேஷம் போடும் சுயநலவாதிகளோ

எது உண்மை ?

எது பொய்?

இதைவிட எது நன்மை

என்று பார்க்கும் மனிதர்களோ

துன்பங்களையும் ,

துரோகங்களையும்

அவமானங்களையும்

கண்டு வாடிப்போகாதே மனமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன் சிரித்து

உள்ளத்தில் ஒன்றை வைத்து

உண்மையில்லா வார்த்தைகளை

பேசுகின்ற மனிதர்களோ

இனி கவிதை அழகு. அதிலும் மேலே உள்ள வரிகள் எவ்வளவு உண்மை. நொத்து போயிருக்கிறீர்கள் போலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

எது உண்மை ?

எது பொய்?

இதைவிட எது நன்மை

என்று பார்க்கும் மனிதர்களோ

நல்ல வரிகள்....நான் இந்த வரிகளை நிஷமாகவே அனுபவித்து ரசிக்கின்றேன்..

எது உண்மை எது பொய் என்பது..தப்பு செய்பவனுக்கும்...

இறைவனுக்கும் மட்டும் தான் தெரியும்..நாம் எதையும் நாமாகவே தீர்மானிக்கக்கூடாது...

ஒருவனால் நான் ஏமாற்றப்படுகின்றேன் என்று எனது மனம் தீர்மானித்துவிட்டால்...என்னை

நான் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி..அதாவது ஒருவர் என்னை ஏன் ஏமாற்ற வேண்டும்?இப்படி எனது மனதில் ஒரு கேள்வி எழுந்தால் நிச்சியமாக எனது மனம் சந்தேகப்படுவது சரியா அல்லது பிழையா என்பதை நாமே கண்டுபிடித்து விடலாம்...இது எனது அனுபவ ரீதியான கருத்து...

இதே போன்ற கவிதைகள் சமுதாயத்திற்கு அவசிமானவை....மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

..

முன் சிரித்து

உள்ளத்தில் ஒன்றை வைத்து

உண்மையில்லா வார்த்தைகளை

பேசுகின்ற மனிதர்களோ

இனியின் கவிதை இனிமை...........அதில் கற்கவேண்டியது பல..............எந்த குழந்தையின் சிரிப்பில் மட்டு தான் உண்மையை காணலாம்............ :)

பி.கு -நானும் குழந்தை தான் :P

எது உண்மை ?

எது பொய்?

இதைவிட எது நன்மை

என்று பார்க்கும் மனிதர்களோ

நல்ல வரிகள்....நான் இந்த வரிகளை நிஷமாகவே அனுபவித்து ரசிக்கின்றேன்..

எது உண்மை எது பொய் என்பது..தப்பு செய்பவனுக்கும்...

இறைவனுக்கும் மட்டும் தான் தெரியும்..நாம் எதையும் நாமாகவே தீர்மானிக்கக்கூடாது...

ஒருவனால் நான் ஏமாற்றப்படுகின்றேன் என்று எனது மனம் தீர்மானித்துவிட்டால்...என்னை

நான் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி..அதாவது ஒருவர் என்னை ஏன் ஏமாற்ற வேண்டும்?இப்படி எனது மனதில் ஒரு கேள்வி எழுந்தால் நிச்சியமாக எனது மனம் சந்தேகப்படுவது சரியா அல்லது பிழையா என்பதை நாமே கண்டுபிடித்து விடலாம்...இது எனது அனுபவ ரீதியான கருத்து...

இதே போன்ற கவிதைகள் சமுதாயத்திற்கு அவசிமானவை....மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

..

முகமறியாத ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சித்தால் அவர் தன்னையே ஏமாற்றுவதாக கருதலாம்..

வல்வையண்ணா உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அதுதானே முகமறியா ஒருவரை

ஆனால் இனியவள் இக்கவிதையில் முகமறியா உறவுகள் என்று ஏதும் சொல்லவேயில்லையே,

:)

  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்களையும் ,

துரோகங்களையும்

அவமானங்களையும்

கண்டு வாடிப்போகாதே மனமே

மனதிற்கு அட்வைஸ் பண்ணுறதோட இருக்க கூடாது மனதை தாங்குகின்ற மனிதன் நடைமுறையில் செயற்படுத்த வேண்டும். :)

மனகுமுறல் போல் உங்கள் கவி தெரிகிறது நல்ல கவிதை.

நீங்கள் எழுதிய "இனியவனே நீ வாழ்க" என்ற கவிதையும் படித்தேன், இந்த "இரட்டை வேடங்கள்" கவிதையும் படித்தேன் நல்லா எழுதியிருக்கிறீங்க, தொடர்ந்து இப்படியான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்!!

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இனி கவிதை அழகு. அதிலும் மேலே உள்ள வரிகள் எவ்வளவு உண்மை. நொத்து போயிருக்கிறீர்கள் போலுள்ளது

நன்றி இன்னிசை!!

ஆமாம் அந்த வரிகளிள் எத்தை உண்மைகள்,

அதை இந்த சிரியவள் இன்று தான் அறிந்துகொண்டால்..........

  • தொடங்கியவர்

இனியின் கவிதை இனிமை...........அதில் கற்கவேண்டியது பல..............எந்த குழந்தையின் சிரிப்பில் மட்டு தான் உண்மையை காணலாம்............ :rolleyes:

பேபி நீங்கள் சொல்லுவதில் எத்தனை உண்மைகள்,

எனது அப்பா அடிக்கடி சொல்லுவது... கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு

உங்கள் வாழ்த்துக்கு நன்றி பேபி!!!

  • தொடங்கியவர்

ஆனால் இனியவள் இக்கவிதையில் முகமறியா உறவுகள் என்று ஏதும் சொல்லவேயில்லையே,

:o

என்ன சொல்ல வாரிங்கள் ??? :):rolleyes:

என்ன சொல்ல வாரிங்கள் ??? :):rolleyes:

நான் எதுவுமே சொல்ல வரவில்லை

முகமறியாத ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சித்தால் அவர் தன்னையே ஏமாற்றுவதாக கருதலாம்.. இப்படி சொன்ன வல்வை அண்ணாவுக்கு தான் சொன்னேன். இனியவளின் கவியில் முகமறியா ஒருவர் பற்றி சொல்லவில்லை என்று.

இனியவள் நான் எதுவுமே உங்களுக்கு சொல்லவில்லை :P

  • தொடங்கியவர்

முகமறியாத ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சித்தால் அவர் தன்னையே ஏமாற்றுவதாக கருதலாம்.. இப்படி சொன்ன வல்வை அண்ணாவுக்கு தான் சொன்னேன். இனியவளின் கவியில் முகமறியா ஒருவர் பற்றி சொல்லவில்லை என்று.

ஆமாம் நான் அப்படி ஒன்றும்

என் கவிதையில் சொல்லவில்லைத்தான்!!!

வல்வைமைந்தன் உங்கள் மனதில் பட்டதை இங்கு குறியதுக்கு நன்றிகள்!!! :rolleyes:

Edited by இனியவள்

கவிதை அருமை தங்கள் உள்ளக்குமுறலைக் காட்டி நிற்கின்றது

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் எலலோருமே இரட்டை வேடங்கள் தான்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் எலலோருமே இரட்டை வேடங்கள் தான்.

தங்களை மற்றவர்கள் முன்னிலையில் நல்லவர்களாக காட்டுவதற்காக நடிப்பதும் இரட்டை வேசம் தான். :rolleyes:

  • தொடங்கியவர்

உங்கள் கவிதை அழகு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் எலலோருமே இரட்டை வேடங்கள் தான்.

கறுப்பி அக்கா உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்,

எவன் எப்படியே நாங்கள் முதல் ஒரு நிலையில் நின்றால் ,இந்த இரட்டை வேடங்களை

கிழித்தேரியலாம்.................. :)

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் உங்களால் படைக்கப்படும் ஒவ்வொரு கவிதைகளும் வித்தியாசமானவை..இடைவிடாது தொடர்ந்து சமூகத்திற்கு பல நல்ல விடயங்களை கவிதை மூலம் தெரிவிக்கின்றீர்கள்..

இதைப்போல் மனிதர்களை மனிதர்களுடன் மோதவிடும் மனித ஜாதிகளுக்காக ஒரு கவிதையைப் படையுங்களேன்.

நாமெல்லாம் ஓரே இனம்

நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்

ஆகா என்ன அருமையான வார்த்தைகள்.

அற்புதமான வரிகள்.

நன்றி இனியவள்.

தொடர்ந்தும் கவி வரிகளோடு

வாருங்கள்.

  • தொடங்கியவர்

இனியவள் உங்களால் படைக்கப்படும் ஒவ்வொரு கவிதைகளும் வித்தியாசமானவை..இடைவிடாது தொடர்ந்து சமூகத்திற்கு பல நல்ல விடயங்களை கவிதை மூலம் தெரிவிக்கின்றீர்கள்..

இதைப்போல் மனிதர்களை மனிதர்களுடன் மோதவிடும் மனித ஜாதிகளுக்காக ஒரு கவிதையைப் படையுங்களேன்.

வல்வைமைந்தனுக்கு எனது நன்றிகள்

இந்த இனியவளின் படைப்புக்கள் என்றும் தொடரும்..............................

Edited by இனியவள்

நாமெல்லாம் ஓரே இனம் ஆனால்

என் குலம் தான் உயர்ந்தது

நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்

ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர்

--------------------------------------------------------------

இனத்தை சிதைக்கும் ஒரு ஆழமான முரண்பாட்டை இந்த வரிகள் அழகாக வெளிப்படுத்துகின்றது.

நன்றி

சுகன்

  • தொடங்கியவர்

நாமெல்லாம் ஓரே இனம் ஆனால்

என் குலம் தான் உயர்ந்தது

நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்

ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர்

--------------------------------------------------------------

இனத்தை சிதைக்கும் ஒரு ஆழமான முரண்பாட்டை இந்த வரிகள் அழகாக வெளிப்படுத்துகின்றது.

நன்றி

சுகன்

இந்த காலத்திலும்

எங்கள் தமிழர்கள் இப்படிப்பட உணர்வுகளேடு இருக்கின்றனர்

நினைக்கையில் வேதனையாக இருக்கின்றது!!!

எங்களை போன்ற இலைய சமுதாயம்

இப்படி பட்ட என்னங்களை வேறோடு அழிக்க முயற்ச்சி மண்ணுவேம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.