Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள், தங்கள் குடிமக்கள் விரைவில் யுக்ரேனில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

ரஷ்யாவும் அமெரிக்காவும் யுக்ரேன் தலைநகர் கீவில் இருந்து தங்கள் தூதரக ஊழியர்களை அழைத்து கொள்கின்றன.

அமெரிக்க தூதரக ஊழியர்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள நாட்டின் மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்வார்கள் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி, ரஷ்ய தூதரக அதிகாரிகள் யுக்ரேனில் உள்ள தங்கள் தூதரகத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கிறது.

ஆனால் இந்த செய்தி குறித்து இரு நாடுகளும் உறுதிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், யுக்ரேனுக்கான பிரிட்டன் தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், தானும், ஒரு முக்கிய குழுவும் கீவில் தங்கியிருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

யுக்ரேன் எல்லைப் பகுதிகளில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒருவேளை யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் அங்குள்ள அமெரிக்கர்களை மீட்க தாயக படைகளை அனுப்ப இயலாது என்று பைடன் கூறியிருக்கிறார். அந்த பிராந்தியத்தில் "நிலைமை விரைவாக மோசமாகக் கூடும்" என்றும் அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

எல்லைக்கு அருகே ஒரு லட்சம் படையினரை குவித்துள்ள போதிலும், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் தன்னிடம் இல்லை என்று ரஷ்யா திரும்பத்திரும்ப மறுத்து வருகிறது. ஆனால் தமது அண்டை நாடான பெலாரஸுடன் மிகப்பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், உலக தலைவர்கள் பலரும் யுக்ரேன் மீதான தற்போதைய நெருக்கடியைத் தணிக்க தங்களுடைய ராஜீய முயற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு யுக்ரேனில் பிரிவினைவாத மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தலைவர்களுடன் நடந்த ஒன்பது மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை என்று ரஷ்யாவும் யுக்ரேனும் கடந்த வியாழன் தாமதமாக அறிவித்தன.

தற்போது ரஷ்யாவின் கடற்படை, போர் ஒத்திகைக்கு தயாராகி வரும் நிலையில், தமது படையினர் கடலுக்கு செல்வதை ரஷ்யா தடுத்து வருவதாக யுக்ரேன் குற்றம்சாட்டியது.

இது குறித்து யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ``அசோஃப் கடல் முற்றிலும் முடக்கப்பட்டு விட்டது. கருங்கடல் பாதையை ரஷ்ய படையினர் கிட்டத்தட்ட முழுமையாக துண்டித்து விட்டனர்`` என்று கூறினார்.

யுக்ரேனின் தெற்கே உள்ள கருங்கடல், அசோஃப் கடல் ஆகிய இரு கடல்களில் அடுத்த வாரம் ரஷ்யாவின் கடற்படை போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அசோஃப் கடலை முடக்கும் முடிவை ரஷ்யா திரும்பப் பெற்றுக் கொண்டதாக யுக்ரேனிய ஊடக தகவல்கள் கூறுகின்றன. அதே சமயம், கருங்கடலின் இரண்டு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிரைமியாவில் ரஷ்ய கடற்படை கப்பல்கள் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கி விட்டன. யுக்ரேனின் வடக்கே பெலாரூஸிலும் 10 நாட்களுக்கான ராணுவ பயிற்சிகள் தொடர்ந்தன.

 

சிப்பாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யா யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பை முயற்சித்தால், தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படையினரை விரைவாக யுக்ரேன் தலைநகரான கீஃபுக்கு அனுப்பி வைத்து அந்நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா எளிதாக்கும் என்ற அச்சம் உள்ளது.

ஆனால், எல்லையில் நடக்கும் போர் ஒத்திகை முடிந்த பிறகு அந்த படையினர் நிரந்தர தளங்களுக்குத் திரும்பும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தங்களுடன் ஆழ்ந்த சமூக மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட முன்னாள் சோவியத் குடியரசான யுக்ரேன், ஒரு நாள் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவில் இணையலாம் என்பதை ரஷ்யா ஏற்கவில்லை. அத்தகைய யோசனையை கூட நிராகரிக்க வேண்டும் என்கிறது ரஷ்யா.

2014ஆம் ஆண்டு முதல் யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. அப்போது முதல் எல்லையில் நடந்த மோதல்களில் 14,000 பேர் இறந்தனர். அதில் பலரும் பொதுமக்கள்.

கிழக்கு யுக்ரேனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் உடன்படிக்கை மீது புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட்டால், அது நெருக்கடியைத் தணிக்க ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படலாம் என்று சில கருத்துக்கள் உள்ளன.

https://www.bbc.com/tamil/global-60360024

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் பதற்றம்: பல நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்து

உக்ரைன் பதற்றம்: பல நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்து

ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தூதரக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் தூதரகத்தை விட்டு வெளியேற அமெரிக்கா உத்தர பிறப்பித்துள்ளது.

உக்ரைனின் எல்லையில் 100,000 துருப்புகளைக் குவித்துள்ள ரஸ்யா, படையெடுப்பதற்கான எச்சரிக்கைகளை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

இதேநேரம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக, யுத்த செலவுகளை சுட்டிக்காட்டி அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் எச்சரிகை விடுத்திருந்தார்.

உக்ரேனிய ஜனாதிபதியும் அவரது பங்கிற்கு சவாலுக்கு தயார் என்று கூறியுள்ள நிலையில், படையெடுப்பு எந்த நேரத்திலும் நிகழலாம் என்றும், வானிலிருந்து குண்டு மழை பொழியலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

https://athavannews.com/2022/1266728

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு அடித்து கொள்ளனும்.. 👍இல்ல விட்டுபோட்டு அடுத்த வேலைய பார்க்கணும்..👌

நிமிடத்திற்கு ஒரு முறை பிளாஷ் நியூஸ் போட்டு நம்மள விசரனாக்குகினம்..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரேன் - அமெரிக்க ஆதரவை மீண்டும் தெரிவித்த ஜோ பைடன்

48 நிமிடங்களுக்கு முன்னர்
 

யுக்ரேனிய வீரர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யுக்ரேன் பாதுகாப்பு படையினர் சமீப நாட்களில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை யுக்ரேன் அழைத்துள்ளது.

எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்துவிட்டதாக, யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் திட்டத்தில் 'வெளிப்படைத்தன்மைக்காக' அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே "அடுத்த நடவடிக்கை" என அவர் தெரிவித்தார்.

யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.

ஆனால், ரஷ்யா ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக, சில மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

யுக்ரேனிலிருந்து வெளியேற வேண்டும் என டஜனுக்கும் மேலான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. சில நாடுகள், தங்கள் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளன.

யுக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அனைத்து வீரர்களையும் தலைநகர் கீவ்வில் இருந்து திருப்பி அழைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக, மூன்று ஆதாரங்களை மேற்கோளிட்டு சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தமான வியன்னா உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்து அந்நாட்டிடம் வெள்ளிக்கிழமை தாங்கள் பதில்களை கோரியதாக, டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

"மற்ற நாட்டை அச்சுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடாது என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறை குறித்து ரஷ்யா அக்கறை கொள்ளுமானால், நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்காகவும், அனைவருக்குமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ராணுவ வெளிப்படைத்தன்மை குறித்த தன் கடமையை அந்நாடு நிறைவேற்ற வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

ரஷ்யா வரும் நாட்களில் படையெடுப்பை நடத்த தயாராகி வருகிறது என்பதற்கான எவ்வித ஆதாரத்தையும் தான் பார்க்கவில்லை என கூறியுள்ள யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இதுகுறித்து பெரும் அச்சத்தைப் பரப்பும் வகையிலான செய்திகளை விமர்சித்துள்ளார்.

 

யுக்ரேன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகள்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

யுக்ரேன் எல்லையில் இருக்கும் ரஷ்ய படைகள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் யுக்ரேன் அதிபர் உரையாடினார்.

யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், "வெவ்வேறு நாடுகளுக்கிடையேயான உறவுகளைக் கையாளுதல் மற்றும் குற்றங்களை தடுத்துநிறுத்துவதை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் முக்கியத்துவம்" குறித்து இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தொலைபேசி உரையாடல் குறித்து யுக்ரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு அதிபர் "நிலையான ஆதரவுக்காக" அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்க அதிபரை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இதற்கு ஒருநாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவருக்கும் இடையிலான சுமார் ஒரு மணிநேர தொலைபேசி உரையாடல், எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது.

 

ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது பகுதிகள் குறித்த வரைபடம்

 

படக்குறிப்பு,

ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது பகுதிகள் குறித்த வரைபடம்

இது தொடர்பான வெளியுறவு ரீதியிலான முயற்சிகள் இன்று, திங்கள்கிழமையும் (பிப். 14) தொடரும். யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தலைநகர் கீவ்வில் இன்று ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் சந்திக்க உள்ளார். மேலும், அவர் நாளை, செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் புதினுடன் மாஸ்கோவில் சந்திப்பு நடத்த உள்ளார்.

ஏஞ்சலா மெர்கலிடமிருந்து ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஓலாஃப் ஸ்கால்ஸ், எவ்வித படையெடுப்பை நிகழ்த்தினாலும், ரஷ்யா தீவிரமான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இதன்மூலம், அவர் மற்ற மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோ ராணுவ கூட்டணியின் உறுப்பு நாடுகளின் கருத்துகளையே எதிரொலித்துள்ளார்.

ஆனால், இந்த மோதல் விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படுவதற்கான எவ்வித எதிர்பார்ப்பு குறித்தும் பெர்லின் அதிகாரிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில்,"போரின் விளிம்பிலிருந்து" ரஷ்யாவை திருப்பி அழைத்துவர ஐரோப்பா முழுவதும் புதிய ராஜரீக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை போரிஸ் ஜான்சன் அரசின் ராணுவ செயலாளர் கூறிய கருத்துகள், பிரிட்டனுக்கான யுக்ரேன் தூதுவர் வாடிம் பிரிஸ்டாய்கோவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பிரிட்டனின் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு பென் வாலஸ் அளித்த பேட்டியில், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் நாஜி ஜெர்மனி சரணடைந்ததுடன், தற்போதைய நிலையை ஒப்பிட்டுள்ளார்.

இதற்கு பிபிசியின் ரேடியோ நிகழ்ச்சி மூலம் பதில் தெரிவித்துள்ள யுக்ரேன் தூதுவர் வாடிம் பிரிஸ்டாய்கோ, "நம் உலக நாடுகளை அவமதிப்பதற்கான சிறந்த நேரம் இதுவல்ல. இந்த செயல், அமைதியை ஏற்படுத்தாது, மாறாக போரை கொண்டு வரும்," என்றார்.

தாங்கள் அச்சுறுத்தப்பட்டால், நேட்டோவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை கைவிடுவதற்கு தங்கள் நாடு நிர்ப்பந்திக்கப்படலாம் எனவும், அவர் பிபிசியிடம் பின்னர் ஒப்புக்கொண்டார்.

யுக்ரேன் நேட்டோ அமைப்பில் எப்போதும் சேர்க்கப்படக் கூடாது என்பது, ரஷ்யாவின் கோரிக்கைகளுள் ஒன்றாக உள்ளது.

யுக்ரேன் உள்ளிட்ட இறையாண்மை கொண்ட நாடுகள், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கூட்டணியின் உறுப்பு நாடாக இணைவதற்கு விண்ணப்பிப்பது உட்பட தங்களுக்கானதை தாங்களே முடிவெடுத்துக்கொள்ளும் சுதந்திரம் கொண்டவை என, நேட்டோ மற்றும் மேற்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

யுக்ரேன் எல்லையில் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது தங்களின் சொந்த எல்லைக்குள் நிகழ்வது என ரஷ்யா வாதிடுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி யூரி யுஷாகோவ், உடனடி படையெடுப்பு பற்றிய அமெரிக்க எச்சரிக்கைகள் குறித்து கூறுகையில், "அமெரிக்காவின் வெறி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-60372129

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!

ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது

ஆனால், மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று போலந்து அரசாங்கம் நம்புகிறது.

பிராந்தியம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் இராஜதந்திர பணிகளைக் குறைக்கும்போது, உக்ரேனியர்களின் பெரிய அளவிலான வெளியேற்றத்தை எளிதாக்குவதற்குத் தேவைப்படும் பட்சத்தில், அதன் இராஜதந்திர நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்வதாக போலந்து கூறுகிறது.

இதுகுறித்து போலந்து துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரசிடா கூறுகையில், ‘சமீப ஆண்டுகளில், குறிப்பாக 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவிய பிறகு, அதிக எண்ணிக்கையிலான உக்ரேனிய பொருளாதார குடியேறிகளை வரவேற்ற போலந்து, அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கான திட்டங்களை பல வாரங்களாக செய்து வருகிறது.

உட்துறை அமைச்சகம், பல வாரங்களாக உள்கட்டமைப்பு மற்றும் திட்டங்களை தயாரித்து வருகின்றது. இந்த திட்டங்களில் அகதிகளுக்கு தங்கும் விடுதிகள், தங்குமிடங்கள், விளையாட்டு வசதிகள் மற்றும் பிற இடங்கள் ஆகியவை அடங்கும்’ என கூறினார்.

உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நகரமான சிச்சனோவின் மேயரும், போலந்து நகரங்களின் சங்கத்தின் செயலாளருமான கிரிஸ்டோஃப் கோசின்ஸ்கியின் கூற்றுப்படி, டவுன் மேயர்கள் உட்பட உள்ளூர் அதிகாரிகள், அவர்கள் என்ன வசதிகளைச் செய்யலாம் என்பது பற்றிய அறிக்கைகளை வரையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கில் பெலாரஸ் மற்றும் கிழக்கில் ரஷ்யாவின் எல்லையில் உள்ள உக்ரைன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மால்டோவாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஆர்பன், சனிக்கிழமையன்று உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நூறாயிரக்கணக்கான உக்ரேனிய அகதிகளை எல்லையைத் தாண்டி தனது நாட்டிற்கு அனுப்பக்கூடும் என்று எச்சரித்தார்.

இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவும் அகதிகளின் வருகையை ஏற்க தயாராகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று அரசாங்கம் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. ஆனால் அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

‘தற்போதுள்ள ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளின்படி, உக்ரைன் பிரதேசத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட ரஷ்ய இராணுவ தாக்குதல் கூட பல்லாயிரக்கணக்கான அகதிகள் நமது எல்லையை கடக்கும் என்று நான் கூற முடியும்’ என்று ஸ்லோவாக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஜரோஸ்லாவ் நாட் கூறினார்.

போரினால் தப்பிச் செல்பவர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுவார்கள் என்றும் ஐரோப்பிய கண்டத்தின் கண்ணோட்டத்தில், தற்போதைய நிலைமை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் ஆபத்தானது என்றும் நாட் கூறினார்.

செக் குடியரசின் உட்துறை அமைச்சர் விட் ரகுசன், ஸ்லோவாக்கியாவில் இதுபோன்ற மோதல் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப முன்வந்துள்ளார்.

https://athavannews.com/2022/1267052

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க இன்னும் வாய்ப்பு உள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜோ பைடன்

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.யுக்ரேன் எல்லையில் ரஷ்யா 1,50,000 படையினரை குவித்திருப்பதாக ஜோ பைடன் கூறுகிறார். கொஞ்சம் படையினரை தற்போது வாபஸ் பெற்றிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார் ஜோ பைடன். "(ரஷ்யப் படைகள்) உண்மையில் வெளியேறுவது நல்லது. ஆனால் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஷ்ய ராணுவப் பிரிவுகள் தங்கள் தளங்களுக்குத் திரும்பும் தகவலை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை" என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

"உண்மையில், ரஷ்ய படைகள் தற்போதுவரை அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாகத்தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்."ரஷ்யாவின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறிய சில மணி நேரங்களில் ஜோ பைடன் இவ்வாறு பேசியுள்ளார். ரஷ்யா ஊடுருவ முயல்வதாக கூறும் தகவலை விளாதிமிர் புதின் எப்போதுமே மறுத்து வந்துள்ளார். ஐரோப்பாவில் இன்னொரு போரை ரஷ்யா விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், நவம்பர் முதல் பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

யுக்ரேனை ரஷ்யா

சோவியத் ஒன்றியத்தில் யுக்ரேன் இருந்த காலத்தில் இருந்தே, ரஷ்யா - யுக்ரேன் இடையே ஆழமான கலாசார, வரலாற்று உறவுகள் இருந்துவருகின்றன. மேற்கத்திய நேட்டோ கூட்டணியில் யுக்ரேன் சேரப்போவதில்லை என்ற உத்தரவாதம் வேண்டும் எனவும், ஏனென்றால் நேட்டோ ராணுவ விரிவாக்கம் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக‌ உள்ளது எனவும் ரஷ்யா கருதுகிறது. ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் நேட்டோ ராணுவம் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று அது கூறுகிறது.

அமெரிக்க மக்களுக்கு பைடன் கூறியது என்ன?

யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், அதனால், அமெரிக்காவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

"ஜனநாயகத்துக்கும், விடுதலைக்கும் பாதுகாப்பாக நிற்கும்போது அதற்கு ஒரு விலை தரவேண்டியிருக்கும் என்பதை அமெரிக்க மக்கள் உணராதவர்கள் அல்ல. இது வலியில்லாமல் நடக்கும் என்று நான் பாசாங்கு செய்யமாட்டேன்," என்றும் பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க நிர்வாகம் தற்போது, விநியோக பிரச்னை வராமல் இருக்க, ஆற்றல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் உடன் வருங்கால திட்டத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது, என்று கூறினார்.மேலும் பைடன் கூறுகையில், யுக்ரேன் ஆக்கிரமிப்பு நடந்தால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் நோர்ட்ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் நடக்காது என்றும் அவர் கூறினார்."ரஷ்ய குடிமக்களுக்கு நான் கூற விரும்புவது: நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல, அதே சமயத்தில் ஒரு அழிவு நிறைந்த போரை நீங்கள் யுக்ரேனில் நிகழ்த்த விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்", என்று தெரிவித்துள்ளார் பைடன்.

நேட்டோ என்ன சொன்னது?

தங்கள் படைகளில் ஒரு பகுதியை திரும்ப அழைத்துக் கொண்டதாக செவ்வாய்க்கிழமை ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்தியிருந்தது நேட்டோ.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் பேசியபோது, "போர்ப்பதற்றம் தனிவது என்பது சரிபார்க்கும் வகையில், நம்பகமான வகையில், பொருளுள்ள வகையில் நிகழவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்வீட்டில், "ரஷ்யாவிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் கலவையாக உள்ளன. ஏனெனில், யுக்ரேன் எல்லை அருகே ரஷ்யா கள மருத்துவமனைகளை அமைத்து வருவதாக பிரிட்டன் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. இதை ஆக்கிரமிப்பிற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்க முடியும்," என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-60398186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் தாக்குதலில் முதலில் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும்: அமெரிக்கா கணிப்பு!

ரஷ்யாவின் தாக்குதலில் முதலில் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும்: அமெரிக்கா கணிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த தாக்குதலில் முதலாவதாக உக்ரைன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.

மேலும், ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000 பேர் உக்ரைனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளில் ரஷ்ய ஆதரவு போராளிகளை உள்ளடக்கியது என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டொனெட்ஸ்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு சேவை கூறியது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல், என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1267752

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் தாக்குதலில் முதலில் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும்: அமெரிக்கா கணிப்பு!

அமெரிக்காவுக்கு இரண்டு சாத்து சாத்த உலகத்திலை கன பிரச்சனையள் தீரும்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் பதற்றம்: ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு - அடுத்தடுத்த திருப்பங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

புதின்

பட மூலாதாரம்,REUTERS

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாக புதின் தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டார்.

யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புடின் அறிவித்தார்.

தொலைபேசி உரை முடிந்த சிறிது நேரத்தில் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப் பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன பொருள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இது யுக்ரேனின் எல்லைக்கும் படைகளை அனுப்புவதற்கான அறிவிப்பு என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனினும் தங்களது எல்லையில் எந்த மாற்றமும் இல்லை என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

 

யுக்ரேன் அதிபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி

பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து யுக்ரேனுக்குச் செல்லும் விமானங்களை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

யுக்ரேன் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை இன்று கூடுகிறது. எனினும் வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் ரஷ்யாவிடம் இருப்பதால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படுவது சந்தேகம் எனக் கருதப்படுகிறது.

பிரச்சனை என்ன?

1990கள் வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.

இப்போதும் யுக்ரேன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள க்ரைமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.

பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

2015ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-60473459

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.