Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார்.

அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த CCTV காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

காணொளியில் கொலை சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் தப்பி செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தி இருந்த பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து கொலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1268806

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் – யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் – யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.” என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை   யாழ்ப்பாணம்  சோமசுந்தரம் அவனியூ  உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப்ப் பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவர் இன்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் கொலைச் சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில்,

வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.

மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார்.

எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.

அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன்” என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

சந்தேக நபரை  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

https://athavannews.com/2022/1268980

##############   ##############   ##############

உனக்கு... வேலை வாய்ப்பை தந்த, 
அந்த மூதாட்டியை, எப்படியடா... கொல்ல  மனம் வந்தது. 

அறம்  என்பது, யாழ். மண்ணில் அற்றுப் போய் விட்டதா?  🙁 😢

4 hours ago, தமிழ் சிறி said:

 

உனக்கு... வேலை வாய்ப்பை தந்த, 
அந்த மூதாட்டியை, எப்படியடா... கொல்ல  மனம் வந்தது. 

அறம்  என்பது, யாழ். மண்ணில் அற்றுப் போய் விட்டதா?  🙁 😢

இந்த மூதாட்டி சோபாவில் இருந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது பின்னால் மண்டையில் தாக்கியுள்ளார். கையில் ஜெபம் செய்யும் புத்தகத்துடனேயே இறந்து கிடந்தார்.... ஒரு சங்கிலிக்காக கொலை செய்யும் அளவுக்கு மனிதர்கள் மாறி விட்டனர் அங்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இந்த மூதாட்டி சோபாவில் இருந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது பின்னால் மண்டையில் தாக்கியுள்ளார். கையில் ஜெபம் செய்யும் புத்தகத்துடனேயே இறந்து கிடந்தார்.... ஒரு சங்கிலிக்காக கொலை செய்யும் அளவுக்கு மனிதர்கள் மாறி விட்டனர் அங்கு.

முன் பின் அறியாத ஆட்களை… வீட்டு வேலைக்கு எடுக்கும் போது, அவதானமாக இருக்க வேண்டும்.
அவரது மனைவியின் மோட்டார் சைக்கிள் ஆசை, ஒரு மூதாட்டியை பலி வாங்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பரிதாபமாகத்தான் இருக்கு........! கோடிக்கணக்கில் கரண்ட் காசு கட்டாமலே வெள்ளையும் சொள்ளையுமா ஞாயம் பிளந்து கொண்டு திரியிரத்துக்கு அவன் என்ன அமைச்சரா ......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 19:06, நிழலி said:

இந்த மூதாட்டி சோபாவில் இருந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது பின்னால் மண்டையில் தாக்கியுள்ளார். கையில் ஜெபம் செய்யும் புத்தகத்துடனேயே இறந்து கிடந்தார்.... ஒரு சங்கிலிக்காக கொலை செய்யும் அளவுக்கு மனிதர்கள் மாறி விட்டனர் அங்கு.

மட்டக்களப்பில இது போல ஒரு சம்பவம் ஒரு மாதம் முன்பு நடந்தது வேலைக்கார பெண் தனது தந்தையுடன் வந்து வீட்டுக்கார பெண்மணியை நகைக்காக கொலைசெய்தது. தற்போதய சூழலில் களவும், கொலைகளுமே அதிகமாக நடக்கிறது இங்கு.

கொலை செய்த கணமே ஆட்டோசாரதிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர் இருவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொலை செய்த கணமே ஆட்டோசாரதிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர் இருவரும்.

அந்த ஓட்டோ சாரதிகளுக்கு தேடி நன்றி சொல்லணும் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

அந்த ஓட்டோ சாரதிகளுக்கு தேடி நன்றி சொல்லணும் 

கைகளில்,ஆடையில் ரத்த கறை காணப்படவே அவர்கள் இருந்து வந்த வீட்டை பார்த்தபோது அந்த வீட்டுக்கார பெண்மணி இறந்து கிடக்கவே அவர்கள் இருவரையும் பிடித்தனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.