Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி!

எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன சாரதிகள் தோட்டங்களுக்கு சென்று காய்கறிகளை கொள்வனவு செய்யவோ அல்லது சந்தைக்கு கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1271150

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு உணவு உண்போர் தொகையைக் குறைத்துவிட்டால் தட்டுப்பாடும் குறைந்துவிடும். தற்போதுள்ள உலக நாட்டுத் தலைவர்கள் ஐ.நா விலும் வந்து பாராட்டி மகிழ்ச்சியூட்டுவார்கள். 🤗

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் மக்களுக்கு அங்கு விளையும் மரக்கறியை உண்ண அனுமதி இல்லை அந்த மரக்கறிகள் விமானம்கள் மூலம் புலம்பெயர் தேசங்களை வந்தடைகிறது அதிலும் எந்தவித விலையேற்றமும் இன்றி கேட்ப்பதுக்கு ஆச்சரியமான விடயம் சிங்கள அரசின் டொலர் தட்டுப்பாடு சொந்த மக்களை பட்டினி போட்டாலும் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி டொலரை  சம்பாதிக்கினம் . இந்த விடயத்தை தம்புள்ள மரக்கறி சந்தையில் மரக்கறி வாங்க முடியாமல் திரும்பி செல்லும் சாதரண சிங்களவருக்கு தெரியவரும் போது அப்ப  தொடங்கும் பிடுங்குப்பாடு .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இலங்கையில் வாழும் மக்களுக்கு அங்கு விளையும் மரக்கறியை உண்ண அனுமதி இல்லை அந்த மரக்கறிகள் விமானம்கள் மூலம் புலம்பெயர் தேசங்களை வந்தடைகிறது அதிலும் எந்தவித விலையேற்றமும் இன்றி கேட்ப்பதுக்கு ஆச்சரியமான விடயம் சிங்கள அரசின் டொலர் தட்டுப்பாடு சொந்த மக்களை பட்டினி போட்டாலும் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி டொலரை  சம்பாதிக்கினம் . இந்த விடயத்தை தம்புள்ள மரக்கறி சந்தையில் மரக்கறி வாங்க முடியாமல் திரும்பி செல்லும் சாதரண சிங்களவருக்கு தெரியவரும் போது அப்ப  தொடங்கும் பிடுங்குப்பாடு .

 

13 hours ago, Paanch said:

முள்ளி வாய்க்காலில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு உணவு உண்போர் தொகையைக் குறைத்துவிட்டால் தட்டுப்பாடும் குறைந்துவிடும். தற்போதுள்ள உலக நாட்டுத் தலைவர்கள் ஐ.நா விலும் வந்து பாராட்டி மகிழ்ச்சியூட்டுவார்கள். 🤗

அதுதான் மிக உன்னதமான திட்டம்: எல்லா துறையிலும் புலிகளை இல்லாதொழித்த, கொரோனாவை விரட்டியடித்த இராணுவப்படை பதவியில் அமர்த்தப்பட்டிருக்கு! மற்றவர்களும் அனுபவித்து மகிழட்டுமேன்  அதன் பணியை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் புளி குழம்பு , வெந்தய குழம்பு வைக்க வேண்டியதுதான் . அந்த 7 நாட்கள் படத்தில் பாக்கிய ராசு செய்வது போல வயிற்றில் ஈர துண்டும் கட்டலாம் .👌

அதற்கும் மேலாக ஆட்சியாளர்கள் "30 ஆண்டுகளா முடிக்க முடியாத போரை முடித்தம் "  என்ட மந்திரத்தை உச்சாடனம் செய்தால் சாதாரண சிங்கள மக்களின் மனது நிறைவதோடு , வயிறும் துர்வாச முனிவர் போல பிதுங்கலாம் ..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.