Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

வயிறு எரிந்து கொண்டிருக்கிறது 
வாழ்வு தொலைந்து கொண்டிருக்கிறது 
மிஞ்சி இருப்பதற்கு இனி என்ன இருக்கிறது.

அப்போது தமிழ்க் குழந்தை பாடினான் இப்போது சிங்களக் குழந்தை பாடுகிறான். இதை என்னவென்பது கர்மம் என்பதா இல்லை காலம் என்பதா. இன்று அரசு மேல் ஆத்திரமாக இருக்கிறீர்கள் ஆளுக்கு ஆள் திட்டியும் தீர்க்கிறீர்கள். அடுத்த நாள் சோத்துக்கே என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்கள். யுத்தம் இல்லாத போதும் இன்று நித்தம் சோதனை. ஏன் இந்த நிலைமை என்று உங்களை நீங்களே கேளுங்கள் எம் சிங்கள இன சகோதரரே. 

ஒருவரை ஒருவர் வெறுத்தீர்கள் உங்களை போல் இன்னும் ஒரு இனம் வாழ விடாமல் தடுத்தீர்கள். இனவாதம் என்ற பெயரில் எல்லா பொய்களையும் சொல்லி இனத்தை எல்லாம் பிரித்தீர்கள். பௌத்த நாடு என்ற பெயரில் மதம் என்ற மதத்தால் மனிதத்தை கொன்றீர்கள். சிறு பான்மை தமிழ் இனத்தின் ஒரு மறக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வை யுத்த வெற்றி என்று கொண்டாடி மகிழ்ந்தீர்கள். தொலைந்து போன மகனை தேடி அலையும் ஒரு தாயின் கண்ணீரின் வலி தெரியாது இருந்தீர்கள். 

எதிர் காலத்தில் எமக்காய் என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர் எம் இளம் சமுதாயத்துக்காக எப்படி என்ன செய்யப் போகிறீர் என்று ஆட்சிக்கு வருபவரை எதுகுமே கேட்காமல் முழுக்க முழுக்க இனவாதம் கக்கிய பொய்களை நம்பி ஆட்சி அதிகாரம் ஏற வைத்து விட்டு இனி அழுது என்ன பயன். இலங்கை இப்படி ஒரு துன்பவியல் வரலாற்றை சந்திப்பது இதுவே முதல் தடைவை . இனியாவது இந்த நாடு மாற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் மாற வேண்டும் அனைத்து இனமும் ஒற்றுமையாய் இருக்கும் வழியை தேட வேண்டும். அவர் அவர் உரிமையை பகிர்ந்து அளிக்க வேண்டும். நீண்டகால பொருளாதார திட்டங்களை சரியான முறையில் எதிர்காலத்தை எண்ணி மாற்றவேண்டும். 

சகோதரத்துவம் சகிப்புத்தன்மை ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற அறம் சார்ந்த கொள்கையோடு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுகும் தப்பினால்  உங்கள் பசியை யாராலும் போக்கி விட முடியாது. இன்னும் நாடுகளிடம் கை ஏந்தும் நிலைமை தான் தொடரும். எத்தனை காலம் தான் இந்த நிலைமையில் இருப்பது. எல்லா இலங்கையின் பொது மகனும் இவ்வளவு கடனை எப்படி தன் தலையில் சுமப்பது. குடுப்பத்தை எப்படி சுமப்பது. 

நாம் தமிழர்கள் தர்மத்தின் வழி நின்று தர்மம் செய்த நாகரீக வாழ்வில் இருந்தது வந்தவர்கள். தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியின் சொந்தங்கள். ஆதலால் இந்த துன்பம் கடந்து போக வேண்டும். அன்று தமிழரின் பரிதாப நிலை கண்டு தமிழ் தலைவர் தந்தை செல்வா சொன்னார் இறைவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். 

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2022 at 02:50, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆக்கம் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

கருத்துக்கு நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் இனி அவ்வளவு தான் 😭

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமார் அவர்களே! உங்கள் ஆக்கம் ஆக்கபூர்வமானது. ஆனாலும் அது சிங்கள அரசுகள் என்ற எருமைமாடுகளின்மேல் பொழியும் மழை போன்றது என்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.🤔  

  • கருத்துக்கள உறவுகள்

 எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் நாங்கள் வாழ்கிறோம்.....முதலில் விகாரைகளுக்குள் இருந்து அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளையும் மக்களையும் மூளைச்சலவை செய்து   இனவாதம் கக்கி நாட்டை சாக்கடையாக்கும் போலிப் பிக்குகளை களை எடுத்து விட்டால் போதும் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2022 at 11:27, விளங்க நினைப்பவன் said:

இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் இனி அவ்வளவு தான் 😭

 

On 19/3/2022 at 11:44, Paanch said:

உதயகுமார் அவர்களே! உங்கள் ஆக்கம் ஆக்கபூர்வமானது. ஆனாலும் அது சிங்கள அரசுகள் என்ற எருமைமாடுகளின்மேல் பொழியும் மழை போன்றது என்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.🤔  

 

On 19/3/2022 at 12:21, suvy said:

எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் நாங்கள் வாழ்கிறோம்.....முதலில் விகாரைகளுக்குள் இருந்து அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதிகளையும் மக்களையும் மூளைச்சலவை செய்து   இனவாதம் கக்கி நாட்டை சாக்கடையாக்கும் போலிப் பிக்குகளை களை எடுத்து விட்டால் போதும் நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.......! 

கருத்துக்களுக்கு நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.