Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

spacer.png

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை மருந்து உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசியப்பொருட்களிற்கு மோசமான பற்றாக்குறை நிலவுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளார் என அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.(15)

spacer.png

 

http://www.samakalam.com/இந்தியாவிடம்-இருந்து-இலங/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பில்லியன் கடன் என்பது சிங்கள அரசுக்கு தூக்கு கயிறு .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

ஒரு பில்லியன் கடன் என்பது சிங்கள அரசுக்கு தூக்கு கயிறு .

அதிலை அரை பில்லியன் அமெரிக்காவுக்கு வந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் செந்தில் தொண்டமான்!

பாரத பிரதமருக்கு.... நன்றி தெரிவித்தார், செந்தில் தொண்டமான்!

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகள் ஓரளவு குறையும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதன் பிரகாரம் அதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான், “இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நட்புறவின் காரணமாக இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது.

எரிபொருள் கொள்வனவு, ஏனைய அத்தியாவசிய பொருளாதார தேவைகளுக்கு இந்த நிதியை அரசாங்கம் பயன்படுத்தும்.

கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தத் தருணத்தில் இலங்கைக்கு கைகொடுத்தமைக்காக இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1272282

###########    ############   ##############

தம்பி தொண்டைமான்.... இந்தக் காசுக்கு, வட்டியை... நீங்க கட்டி விடுங்க. 😜

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வந்துடாதீங்கப்பா .. 👍 அங்கேயே கிந்தியனிடம் சொல்லி ரூம் போடுங்க.. 👌நாளைக்கு நாளை கழித்து புதிய கடன் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டி வரலாம்..☺️

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஓடு தூக்கும் வரைக்கும் இவர்கள் அங்கே கூடாரம் அடித்து சுரண்டுவார்கள் போலுள்ளதே! கொடுத்துக் கெட்டான் ஆண்டி  இந்தியா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.