Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம்

Featured Replies

மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம்

ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும்.

மணலாற்றுப்பகுதியில் படையினர் தம்மை பலப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னர் இரு மாதங்களாக மணலாற்றில் உள்ள எதவெடுநுவெவ கிராமம் விடுததலைப் புலிகளின் தொடர்ச்சியான மோட்டார் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.

இதனிடையே விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதியான கேணல் சொர்ணம் தனது இரு பிரிக்கேட்டுகளுடன் மணலாறு நோக்கி நகர்ந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அவரது படையணி அவசர தேவைகளின் போது உதவும் நோக்குடன் அங்கு நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள்இ ஒரு பெரும் இராணுவ வெற்றியை அடைய முயன்று வருகின்றனர். பெரும்பாலும் அது மணலாற்றில் உள்ள படை முகாம்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம். எனினும் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகள் மீதான தாக்குதலையும் மறுக்க முடியாது. ஏனெனில் அங்கும் விடுதலைப் புலிகள் தமது கனரக ஆயுதங்களை நகர்த்தியுள்ளனர். மன்னாரில் உள்ள நீலாச்சேனை காவல் நிலைகள் மீதும் அண்மையில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான பாணுஇ பால்ராஜ்இ கோபால் மாஸ்ரர்இ நிசாந்தன் மாஸ்ரர் ஆகியோர் மன்னாரின் மடுப்பகுதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் படையினரின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான எயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேராஇ இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரும் வன்னிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள செட்டிக்குளத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினருக்கு பலத்த உயிரிழப்பை சந்தித்திருந்தனர். இராணுவத்தினருக்கு சந்தேகம் வராதபடி கிளைமோர் உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்தது. உந்துருளி ஒன்றில் பொருத்தப்பட்ட கிளைமோர் மூலம் காவல்துறையினரின் வாகனத்தை இலக்கு வைத்த ஒரு மாதத்தின் பின்னர் இது நிகழ்ந்துள்ளது.

இந்த கிளைமோர் தாக்குதல் கொழும்பிற்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதே அதுவாகும். இது தற்போது நடைபெற்று வரும் இராணுவத்தினருக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை நிறுத்தும் முயற்சியாகும்.

ஜூலை 29 ஆம் நாள் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தும் சாத்தியங்கள் அதிகமுள்ளா நாளாகும். இந்தியப் படைகள் சிறிலங்காவை விட்டு வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் திருமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் நடத்திய தாக்குதலில் 31 இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

அதே நாள் இயக்கச்சி மற்றும் ஆணையிறவுப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன்இ 4 பேர் காயமடைந்திருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர் ஜூலை 29 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு மணலாற்றில் உள்ள படைமுகாம்களின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியிருந்தனர். எனினும் அது வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கான கணக்குகளை பின்னர் முல்லைத்தீவு படைத்தளம் மீது நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் தீர்த்துக்கொண்டனர்.

தற்போது இந்தப் பகுதியை அவர்கள் வான்தாக்குதல் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து காத்து வருகின்றனர்.

வன்னிப்பகுதி முக்கிய களமுனையாக இருக்கும் போதும் யாழ். குடாநாட்டில் இருந்து படையினரை வெளியேற்றும் தமது பிரதான திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. மேலும் கிழக்கில் உள்ள பேராறுஇ கும்புறுப்பிட்டிஇ மணிராசகுளம்இ திரியாய் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

புலிகள் மன்னாரை நோக்கி படையை நகர்த்தி இருக்கிறார்கள், எண்டார்கள் பின்னர் இப்போ மணலாறு நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள் என்கிற்றார்கள்... இனி வவுனியா நோக்கியதக இன்னுமொரு பத்திரிக்கை எழுதும்... அடுத்து கிளிநொச்சி (பூநகரி) இந்த செய்தி தமிழ் மக்களை குழப்புதோ இல்லையோ சிங்கள ஊரில் வந்து இருப்பதால் இராணுவ வீரர்களை குழப்பும்...

முன்னணியில் காவலில் நிக்கும் இராணுவ வீரன் எல்லா இடத்திலும் உசாராக இருந்து சோந்து போய் ஒருநாள் இராணுவத்தில் இருந்து ஓடுவதுதுக்கு இப்படியான செய்திகளே போதும்

இவர்கள் இப்படி ஆய்வுகள் எழுதி எழுதி புலிகளின் தாக்குதல் திட்டங்கள் எங்களுக்கு தெரியும் என்று காட்டி கொள்ள முயற்சிக்கிறார்கள் ஆனால் உண்மை???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குள்ள ஒரு சிங்களவனின் நரித்தந்திரம் இருக்கு.. இவ்வாறு மாறி மாறி சும்மா சொல்வதன் ஊடாக இராணவத்தை உசார் நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள்.. இவ்வாறு மக்களையும் ஏமாற்றுவதற்கு வெடிகுண்டுகளை அங்கே கண்டுபிடித்தோம், இங்கே கண்டு பிடித்தோம் சும்மா அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள்.

புலிகள் மன்னாரை நோக்கி படையை நகர்த்தி இருக்கிறார்கள், எண்டார்கள் பின்னர் இப்போ மணலாறு நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள் என்கிற்றார்கள்... இனி வவுனியா நோக்கியதக இன்னுமொரு பத்திரிக்கை எழுதும்... அடுத்து கிளிநொச்சி (பூநகரி) இந்த செய்தி தமிழ் மக்களை குழப்புதோ இல்லையோ சிங்கள ஊரில் வந்து இருப்பதால் இராணுவ வீரர்களை குழப்பும்...

முன்னணியில் காவலில் நிக்கும் இராணுவ வீரன் எல்லா இடத்திலும் உசாராக இருந்து சோந்து போய் ஒருநாள் இராணுவத்தில் இருந்து ஓடுவதுதுக்கு இப்படியான செய்திகளே போதும்

யார் வரை உசார் நிலையில் வைத்தாலும் யார் யாரை குழப்பினாலும் யாரும் எதிர்பார்காத நேரத்தில் யாதுமோரிடத்தில் சிங்களம் செய்த வினைக்கு பாவ விமோசனம் தேடும் நாள் அதிகதூரத்தில் இல்லை என்பதே நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தொடர்ந்து அமைதி காப்பதால் ஆய்வுப்பத்தி எழுதுவோர்க்கு தமது அறிவின்மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதுதான் வாராவாரம் ஏதோ பினாத்துகிறார்கள்.. அதையும் படித்து நாங்களும் விமர்சிக்கின்றோம். பொழுதுபோக இவை தேவைதானே. :lol:

புலிகள் தொடர்ந்து அமைதி காப்பதால் ஆய்வுப்பத்தி எழுதுவோர்க்கு தமது அறிவின்மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதுதான் வாராவாரம் ஏதோ பினாத்துகிறார்கள்.. அதையும் படித்து நாங்களும் விமர்சிக்கின்றோம். பொழுதுபோக இவை தேவைதானே. :D

இந்த ஆய்வுகளை எத்தனை சிங்களவர்கள் படித்தார்களோ தெரியா ஆனா நாம் படித்து விட்டு ஆக அங்கை அடி விழப்போகிறது இங்கை அடி விழப்போகிறது என்று இருக்காம நிலமையை புரிந்து காத்து இருப்போம்

எமக்கு தேவை தற்காலிக இராணுவ வெற்றி இல்லை தமிழர்களின் விடுதலை அதை பெற்றுத்தர கூடைய ஒரே ஒரு அமைப்பு எங்கள விடுதலை புலிகளும் அதன் இராணுவமும் தான் ஆகா ஒரு இராணுவ வெற்றிக்காக நாங்கள் ஆவலாக இருக்க தேவை இல்லை அதை வைத்து புலிகளோ தமிழர்களோ அரசியல் செய்ய போவதும் இல்லை............

குறைந்த செலவில் நல்ல ஒரு வீடு வசிப்பதுக்கு...............

முடிந்த அளவு குறைந்த இழப்புடன் தமிழீழம் காண்போம்...............

எந்த ஒரு விடுதலை அமைப்பும் கொடுக்காத விலைகளை விடுதலை புலிகள் கொடுத்து எமக்கு விடுதலை பெற்றுதருவார்கள் அந்த நம்பிக்கை மட்டும் வைத்து இருங்கள் . சிங்களவன் சொல்லுவது போல அங்கு

அடிப்பார்கள் இங்கு அடிப்பார்கள் என்று காத்த்து இருந்து சோர்வடையா வேண்டாம்........

அடி விழும் போது இந்த உலகமே திகைத்து பாக்க தான் போகிறது அப்போது சிங்கள் வெறியர்களின் உடல்களை அவர்களுக்கு அனுப்பி விட்டு எமது வெற்றியை நாம் இந்த உலகம் முழுவதும் கொண்டாடுவோம்

என்று யாழ் எமது கைக்கு வருகிறதோ அன்று மட்டக்களப்பில் இருந்து சிங்கள வெறியர்களுடன் கரிநாக கூட்டம் கருணாவும் தமிழீழத்தை விட்டு ஓடுவார்கள் (உயிர் துறந்த உடலாக)...........

எமது விடுதலைக்கு பின் எமது எட்டு மாவட்டத்திலும் பொருளாதார போட்டி ஒன்றே இருக்கும் அதுவும் எந்த மாவட்டம் தனது மாவட்ட மக்களை சந்தோசமாக வைத்து இருப்பது என்ற ஒரே ஓரே போட்டி தான் .

வரலாற்றில் கூட எட்டப்பன் என்ற சொல் இருக்கா கூடாது அதுவும் இந்த

எட்டப்பன்கள்:

ஆனந்த சங்கரி

டக்கிளஸ் தேவானந்தா

கரிநாகம் கருணா

சித்தார்த்தன்

வரதராஜ பெருமாள்( இப்பவும் உயிரோடு இருக்கிறாரா?)

இவர்கள் பெயர்கள் எட்டப்பன் என்ற உதாரணத்துக்கு கூட வரலாற்றி இடம் பெற கூடாது.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தொடர்ந்து அமைதி காப்பதால் ஆய்வுப்பத்தி எழுதுவோர்க்கு தமது அறிவின்மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதுதான் வாராவாரம் ஏதோ பினாத்துகிறார்கள்.. அதையும் படித்து நாங்களும் விமர்சிக்கின்றோம். பொழுதுபோக இவை தேவைதானே. :D

நீங்க சொல்ரது சரியயண்னே ஆய்வுகள் பலரும் எழுதிராங்க நாங்க வாசிப்பம். எனக்கு வாசிக்கத்தான் நேரமிருக்கி எழுத நேரமில்லை(கையுழையிது) :D

சிங்களப் பத்திரிகைகள் கூறுவதெல்லாம் உண்மைதான். ஏனென்றால் புலிகள் அனைத்துப் பகுதிகளிலும் தமது படைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்போதே இவ்வாறான ஆய்வுகளை வெளியிட்டால்தானே பின்னர் அடி நடந்தபின்னர், நாங்கள் முதலிலேயே கூறினோம் என மார்தட்டிக்கொள்ள முடியும். அவர்களும் கொஞ்சம் புகழை அடைந்துவிட்டுப் போகட்டுமே. தங்களுக்கும் மூளை இருக்கிறதென்பதை அவர்கள் சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கத்தானே வேண்டும்.

சிங்களப் பத்திரிகைகள் கூறுவதெல்லாம் உண்மைதான். ஏனென்றால் புலிகள் அனைத்துப் பகுதிகளிலும் தமது படைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்போதே இவ்வாறான ஆய்வுகளை வெளியிட்டால்தானே பின்னர் அடி நடந்தபின்னர், நாங்கள் முதலிலேயே கூறினோம் என மார்தட்டிக்கொள்ள முடியும். அவர்களும் கொஞ்சம் புகழை அடைந்துவிட்டுப் போகட்டுமே. தங்களுக்கும் மூளை இருக்கிறதென்பதை அவர்கள் சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கத்தானே வேண்டும்.

படம் காட்டி விட்டு அடிப்பது புலிகளின் பழக்கம் இல்லை என நான் நினைகின்றேன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னன் ஓருவர் சொன்னது சரி, பரையடிச்சு செய்யிரத புலியில்ல B)

தற்போதைய சூழ்நிலையில் புலிகளால் மேற்கொள்ளப்படுவது இராஜதந்திரப் போரே. ஒரு நிலப் பகுதியைக் கைப்பற்றுவதோ அதனைத் தக்க வைப்பதோ இப்போதுள்ள புலிகளின் பலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புலிகளால் இயலக் கூடிய ஒரு காரியமே. இதை நாம் மட்டுமல்ல, சிங்களவர்கள் மட்டுமல்ல, இந்த உலகமே புரிந்து வைத்திருக்கின்றது. இதற்கான பதில்கள் புலிகளிடத்திலுண்டு. அவை இடியாக விழும்போது நான் சொன்னதுதான் உண்மை. இதுவே நடந்துள்ளது. என இந்தப் பத்திரிகை ஆய்வாளர்கள் சொல்வார்கள். இவர்களின் கற்பனையில் உதித்த இந்த விடயங்களும் நடக்கத்தான் போகின்றன. மணலாறு மட்டுமல்ல பாணமையிலிருக்கும் படைமுகாங்களும் அழிக்கப்படத்தான் போகின்றது.

போர் நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்து தற்போது வரைக்கும் புலிகள்

தற்பாதுகாப்பு தாக்குதல், ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தல், ஆக்கிரமித்த இடங்களை தாக்கி மீளுதல் போன்ற

மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளே நடத்துகிறார்கள்...

2002 ஒப்பந்தத்திற்கு முன் நிலைமைக்கு வரும்போது ஆக்கிரமிப்பு படையின் நிலைமை?

துண்டு, துணி காணம் என தொடர் காட்சிகள் காத்திருக்கு...............

அதுவரைக்கும் பார்வையாளர்களே பொறுமைகாக்க......

உங்கள் கடமைகள், உடன் பிறப்புகளை காப்பாற்றல் பிரச்சாரங்கள் என தொடருங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.