Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் !

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

Image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

Image

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Image

அதற்கமைய நேற்று சனிக்கிழமை (9) காலை 8.30 மணிமுதல் கொழும்பு - காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவோடு இரவாக இடம்பெற்று வருகின்றது.

Image

 'பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்' என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Image

அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டனர். 

 

https://www.virakesari.lk/article/125581

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கொழும்பில்... கடும் மழைக்கு மத்தியிலும், தொடரும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம்!

கொழும்பில் இன்று காலை கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

278223550_1603690426679964_5606646349626460412_n.jpg

 

ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இளைஞர்கள் யுவதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1276029

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, barbe et texte qui dit ’சிங்களவனுகள் GAS பால் PETROL இல்ல என்டுதான் நம்மளோட சேந்து போராடுரானுகள் TROLL EASTERN அத பாத்துத்து நமக்கு சம உரிமை சுயாட்சி தருவானுகள் னு நினைச்சா அது நம்ம முட்டாள்தனம்’

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய செயலகத்திற்கு முன்னால்... 
கற்பூரம் கொழுத்தி, தேங்காய் உடைத்து... நூதன முறையில் போராட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்

மயூரபதி காளி ஆத்தாவுக்கு...தலை வெடித்திருக்கும்... இந்த தேங்கா அடி மயூரபதியில்..தினமும் ரசித்தது..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாய செயலகத்திற்கு முன்னால்... 
கற்பூரம் கொழுத்தி, தேங்காய் உடைத்து... நூதன முறையில் போராட்டம். 

மந்திரம் சொல்லி, சபதம் செய்து உடைக்கிறாப்ல ..... கண்டிப்பாய் கிடைச்சிடுமில்ல! அதென்ன? ஒருவர் கோத்தாவின்  மரண அறிவித்தல் மாதிரி ஒன்றை காண்பிக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, satan said:

மந்திரம் சொல்லி, சபதம் செய்து உடைக்கிறாப்ல ..... கண்டிப்பாய் கிடைச்சிடுமில்ல! அதென்ன? ஒருவர் கோத்தாவின்  மரண அறிவித்தல் மாதிரி ஒன்றை காண்பிக்கிறார்.

இண்டுவரைக்கும் புத்தர்/பௌத்தம் எண்டொரு வசனங்களை பாவிக்கேல்லை கண்டியளோ.
வலு அவதானமாய்த்தான் சோத்து பஞ்சத்துக்கான போராட்டத்தை கொண்டு போறாங்கள்.

இதுக்குள்ளை எங்கடை பரதேசியள் ஏன் தலைய குடுக்குதுகள் எண்டு தெரியேல்லை.ஈழதமிழர் பிரச்சனை எண்டால் எங்கடையள் தனிய நிண்டு மல்லுக்கட்ட வேணும். ஆனால் சிங்களவன்ரை பாண் பருப்பு  பிரச்சனையெண்டால் தமிழனும் சேர்ந்து முறிய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கள்! சிங்களம் பிரித்தாளும், அப்போது தமிழர் தனித்து தாக்கப்படுவார்கள். பட்டும் உறைக்காது நமக்கு, உதவிக்கு போய் வேண்டிக்கட்டுவதும் நாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.