Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன்.

சிறிலங்கா அரசினால் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு தமிழீழ தேசியத்தலைவர் ஒருதொகைப்பணத்தை வழங்கியிருக்கிறார். தேசியத்தலைவரால் எனது எதிர்கால வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கல்விகற்று தேசத்தில் முன்னுதாரணமானவனாக வரவேண்டும்

இதுவே மருத்துவமனையால் வெளியேறியவுடன் நான் செய்யப்போகும் முதல் வேலை. இவ்வாறு கடந்த 11.07.2007 அன்று அளம்பில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிபிர் விமானத்தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சிகிச்சைபெற்று வரும் பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு கால்களையும் இழந்து 14 வயது நிரம்பிய அந்தச் சிறுவன் தனக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட பயங்கரம்பற்றி மேலும் தெரிவிக்கையில்.

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். எனது சொந்த இடமே யாழ்ப்பாணம்தான். எங்கள் சொந்த நிலத்திற்கு நான் ஒருநாளும் சென்றதே இல்லை மயிலட்டி சிங்களப்படைகளின் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கிறது. அதனால் நாங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக அலைந்து திரிகிறோம். எந்த இடமும் எங்களிற்கு நிரந்தரமாக இல்லை. இடம்பெயர்ந்து அலைபவர்களாக நாங்கள் இருப்பதால் மிகவும் கஷ்ரப்பட்டவர்களாக இருக்கிறோம்.

எங்கள் வீட்டில் நான்தான் மூத்தபிள்ளை. எனக்கு இன்னும் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அப்பா மாத்திரமே கடற்தொழில் செய்து எங்களைப் படிப்பித்து வந்தார். அவர்தனியாக உழைத்து எங்கள் வீட்டைக் கவனிக்க முடியாது. கடுமையான கஸ்ரமாக இருந்தாலும் அவர் எங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பி படிப்பதில் அக்கறையாக இருந்தார். இந்நிலையில் எனது சகோதரர்களிள் எதிர்கால நன்மைக்காக நானும் இடையிடையே அப்பாவிற்கு உதவியாக கடற்கரைக்குச் சென்று சிறிய உதவிகளைச் செய்து கொடுப்பேன்.

அப்போதெல்லாம் அப்பா கூறுவார் தம்பி படித்து முன்னுக்கு வராவிட்டில் என்னை மாதிரி கஸ்ரப்பட வேணும். நீ என்னை மாதிரி வராமல் படிச்சுக்கெட்டிக்காரனாய் வந்திடவேணும். அதுக்காகத்தான் நான் இப்படிக் கஷ்ரப்பட்டுக்கொண்டிருக்கிற

சோகமான சம்பவம் அந்த சிறுவணின் மன உறுதி பாராட்டத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்புடைய செய்தி

குண்டு வீச்சில் கால்களை இழந்த சிறுவனுக்கு தேசியத்தலைவர் நிதியிலிருந்து நிதியுதவி.

சிறிலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்த சிறுவனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் நிதியத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முல்லைத்தீவு அளம்பில் பகுதிக் குடியிருப்புக்கள் மீது கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இந்தக் குண்டுவீச்சுத் தாக்குதலில் அளம்பில் சுனாமி இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த பி.பிறேம்குமார் (14) என்ற பாடசாலைச் சிறுவன் தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தார். இந்தச் சிறவனின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தமிழீழ தேசியத்தலைவர் நிதியத்திலிருந்து குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசவங்கியில் வைப்பிலிடப்பட்டு சிறுவனின் பெற்றோரிடம் வங்கிப் புத்தகம் கையளிக்கப்பட்டுள்ளது.

- சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகுழந்தையைக் கொலை செய்த ஒரு முஸ்லீம் பெண்ணுக்குக் கண்ணீர் வடித்தவை எங்கே? அபலைக் குழந்தை என்று பட்டம் சூட்டிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு இத்தமிழ் சிறுவனின் கண்ணீர் தெரிவதில்லையோ?

அதுவும் 10 டொலர்(1000 ருபா) அனுப்புகின்றேன் எங்க முகவரி என்று கோட்டவை, இச்சிறுவனுக்கு ஒரு 10 ரூபா ஆகவது அனுப்புவினமோ?

தேசியத்தலைவரோடு .ணைந்து நாங்களும் இச்சிறுவனுக்கு பணவுதவி செய்திட வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: ஈழத்தமிழர்களின் கண்ணீர்

உலக வல்லரசுகளை

எனறோ ஓர் நாள்

சுட்டெரிக்கும் :angry:

சிறுகுழந்தையைக் கொலை செய்த ஒரு முஸ்லீம் பெண்ணுக்குக் கண்ணீர் வடித்தவை எங்கே? அபலைக் குழந்தை என்று பட்டம் சூட்டிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு இத்தமிழ் சிறுவனின் கண்ணீர் தெரிவதில்லையோ?

அதுவும் 10 டொலர்(1000 ருபா) அனுப்புகின்றேன் எங்க முகவரி என்று கோட்டவை, இச்சிறுவனுக்கு ஒரு 10 ரூபா ஆகவது அனுப்புவினமோ?

தேசியத்தலைவரோடு .ணைந்து நாங்களும் இச்சிறுவனுக்கு பணவுதவி செய்திட வேணும்.

iஇது கேள்வி கேட்டால் மனிதாபிமானம் இல்லாதவன் என ஆக்கி புடுவாங்கள் கவனம் :o

மிகவும் சோகமான செய்து. வேதனைக்குரியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகுழந்தையைக் கொலை செய்த ஒரு முஸ்லீம் பெண்ணுக்குக் கண்ணீர் வடித்தவை எங்கே? அபலைக் குழந்தை என்று பட்டம் சூட்டிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு இத்தமிழ் சிறுவனின் கண்ணீர் தெரிவதில்லையோ?

அதுவும் 10 டொலர்(1000 ருபா) அனுப்புகின்றேன் எங்க முகவரி என்று கோட்டவை, இச்சிறுவனுக்கு ஒரு 10 ரூபா ஆகவது அனுப்புவினமோ?

தேசியத்தலைவரோடு .ணைந்து நாங்களும் இச்சிறுவனுக்கு பணவுதவி செய்திட வேணும்.

இப்படி கேட்பது முறை போன்று எனக்கு படவில்லை.. எங்களுடைய மக்களுக்கும் துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களுக்கு நாங்கள் மனிதாபிமானம் காட்டக்கூடாது என்று சொல்வது சரியல்ல.. எல்லோரும் மனிதர்கள் தானே..

இச் சிறுவனுக்கு உதவிசெய்ய தலைவர் இருந்திருக்கிறார்.. அச் சிறுமிக்கு உதவிசெய்ய அவர்களின் சமூகத்தில் ஒரு தலைவர்கள்கூட முன்வரவில்லையே..

எங்கள் முன் அநியாயம் நடக்கிறபொழுது அதை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டு எங்களுடைய தாயத்திலும் இவ்வாறு நடக்கிறது இதை ஏன் நான் கண்டுகொள்ளவேண்டும் என்று புறக்கணிப்து சரியா?

வேதனைக்குரியது செய்து

எவ்வளவு துன்பகரமானது, இப்படி எத்தனை ஆயிரம் சிறுவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது, இதற்கெல்லாம் சிங்களம் அனுபவிப்பினம் :angry: :angry:

சிறுகுழந்தையைக் கொலை செய்த ஒரு முஸ்லீம் பெண்ணுக்குக் கண்ணீர் வடித்தவை எங்கே? அபலைக் குழந்தை என்று பட்டம் சூட்டிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு இத்தமிழ் சிறுவனின் கண்ணீர் தெரிவதில்லையோ?

அதுவும் 10 டொலர்(1000 ருபா) அனுப்புகின்றேன் எங்க முகவரி என்று கோட்டவை, இச்சிறுவனுக்கு ஒரு 10 ரூபா ஆகவது அனுப்புவினமோ?

தேசியத்தலைவரோடு .ணைந்து நாங்களும் இச்சிறுவனுக்கு பணவுதவி செய்திட வேணும்.

அது முஸ்லீம் குழந்தை... அதை நீங்கள் மனிதாபத்தோடை அணுக்க வேணும்... ஆனால் தமிழன் பெத்ததுகளுக்கு எல்லாம் மனிதாபிமானம் தேவை இல்லை... ஏனெண்டா உதுவும் புலிதானே... சிறுவர் படையை அழிச்சம் எண்டு அரசாங்கம் சொல்லேக்கை அதுக்கு தாளம் போடுறவை இதை கண்டு கொள்ளுவினமோ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.