Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் ..

Featured Replies

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இறம்பொடை நீர்வீழ்ச்சி இலங்கையில் இருக்கும் அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. ஆனால் மழைக்காலங்களில் மிக மிக அபாயகரமானது. அதுவும் அரச வானிலை நிலையம் கடும் மழை வீழ்ச்சியையும் வெள்ள அபாயத்தையும் அறிவித்து இருந்த நேரத்தில், இப்படி பேரிசைச்சலுடன் நீர்வீழ்ச்சி விழுந்து கொண்டு இருக்கும் போது அதன் கரையில் இருக்கும் குன்றில் நின்று செல்பி எடுக்க போய் வீணாக இந்த மூன்று தமிழ் இளையவர்களும் இறந்துள்ளார்கள். வீடியோவில் ஒரு பெண் அப்படி போய் நிற்க வேண்டாம் என்று வேறு அறிவுடை சொல்லியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமான சாவுகள்.......ஆழ்ந்தஇரங்கல்கள்.....!  😢

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கன்று பயமறியாது. வேறென்னத்தைச் சொல்ல? செய்யாதே என்று சொன்னால்; செய்துதான் பார்ப்போமே என்று எண்ணத்தோன்றும் வயது.  போர்ச்  சூழலில்  எல்லோரும் தங்கள் சொந்த இடங்களை விட்டு பாதுகாப்புத் தேடி ஒதுங்கிய வேளையில், இளைஞர்,  யுவதிகள் பெற்றோரின் சொல்லை மீறி யதார்த்தத்தை உணராமல் எந்த இராணுவத்தை கண்டு கையில் சிக்கக்கூடாது என்று ஓடினார்களோ, அந்த இராணுவத்தை  தேடிச் சென்று மீண்டு வராமல் போனவர்களும், பிணமாக கண்டெடுக்கப்பட்டவர்களும், கண்ணி வெடியில் கால்களை இழந்தவர்களும் உண்டு. ஒரு வினாடி சிந்திக்காமல் எடுக்கும் முடிவு எவ்வளவு விபரீதத்தை கொண்டு வருகிறது. இளமைத்துடிப்பு; அதற்க்கு அவ்வளவு வேகம், பெற்றவர்கள் எவ்வளவு துடிப்பார்கள் என்பதை நினைத்துப்பார்க்க மறந்து சாதித்து விடுவோம் என எண்ணுகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (வியாழக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றைய தினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம் வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.

மேலும் சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1276569

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.