Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உணவு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் "மானிட பேரழிவை" சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்களின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், மில்லியன்கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என, டேவிட் மால்பஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலையில் "கடும் ஏற்றமாக" 37% அளவுக்கு விலை உயர்வு ஏற்படும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

இது ஏழைகளை பெருமளவு பாதிக்கும் என தெரிவித்துள்ள உலக வங்கி, "இந்நெருக்கடியால் அவர்கள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், மேலும் பள்ளிப்படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அவர்களிடம் குறைவான பணமே இருக்கும்" என தெரிவித்துள்ளது.

உலகளாவிய வறுமை ஒழிப்பு நிறுவனமான உலக வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரான மால்பஸ், பிபிசி பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம் உடனான நேர்காணலில் பேசுகையில், ஏழைகள் மீதான இந்த தாக்கம் "இதனை நியாயமற்ற நெருக்கடியாக மாற்றியுள்ளது" எனவும், "கோவிட் தொற்று விஷயத்திலும் இதுதான் உண்மை" எனவும் அவர் தெரிவித்தார்.

"இது மானிட பேரழிவு, அதாவது இந்த நெருக்கடியால் மக்கள் குறை ஊட்டச்சத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். ஆனால், இதுகுறித்து எதுவும் செய்ய முடியாத, இந்நெருக்கடிக்கு தாங்கள் காரணம் இல்லாத அரசுகளுக்கு இது அரசியல் சவாலாகவும் மாறும். உணவுப்பொருட்களின் விலை உயர்வதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்" என, வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் - உலக வங்கி கூட்டத்தில் மால்பஸ் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு ஆழமான மற்றும் விரிவான தாக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், "அனைத்துவிதமான எண்ணெய் மற்றும் தானியங்களின் விலைகளையும் இந்த நெருக்கடி பாதித்துள்ளது. மேலும், சோளப்பயிர் உள்ளிட்ட மற்ற பயிர்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏனெனில், கோதுமை விலை உயரும்போது இவற்றின் விலையும் உயரும்" என கூறினார்.

அனைவருக்கும் தேவையான உணவு இந்த உலகில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உணவுப்பொருட்களின் உலகளாவிய கையிருப்பு அதிகளவில் இருப்பதாகவும் ஆனால், உணவு எங்கு தேவையோ அங்கு அவற்றை கொண்டு செல்வதற்கான பகிர்ந்தளிக்கும் அல்லது விற்பனை நடைமுறைகள் தேவை என தெரிவித்தார்.

 

உணவு நெருக்கடி

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

மேலும், உற்பத்திக்கு மானியம் வழங்குவது அல்லது விலைகளை கட்டுப்படுத்துவது போன்றவ வழிமுறைகளை அவர் ஊக்கப்படுத்தவில்லை.

மாறாக, உலகளவில் உரங்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கான உதவிகளும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வளரும் நாடுகள், கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள தங்கள் பெரியளவிலான கடன்களைச் செலுத்த இயலாமையால் எழும் "நெருக்கடிக்கு உள்ளே ஒரு நெருக்கடி" குறித்து உலக வங்கித் தலைவர் எச்சரித்தார்.

"இதற்கான வாய்ப்பு உள்ளது. இது சில நாடுகளில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, எதுவரை இந்த நெருக்கடி செல்லும் என்பது தெரியவில்லை. 60 சதவீதத்திற்கும் அதிகமான ஏழை நாடுகள் தற்போது ஒன்று கடன் நெருக்கடியிலோ அல்லது கடன் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அதிக ஆபத்திலோ உள்ளன" என அவர் தெரிவித்தார்.

"கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும். கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளை மிக விரைவில் நாடுகள் தொடங்குவதுதான் சிறந்தது. எந்தளவுக்கு கடன் குறித்து செயலாற்றாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதன் விளைவுகளும் மோசமானதாக இருக்கும்," என தெரிவித்தார்.

ஃபைசல் இஸ்லாம், பிபிசி பொருளாதார ஆசிரியர் - பகுப்பாய்வு

வளர்ந்துவரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும் என, உலக வங்கியின் தலைவர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட அதிகளவிலான கடன், உயர்ந்துவரும் வட்டி விகிதங்கள் மற்றும் விலை உயர்வு ஆகிய கூட்டு நெருக்கடிகள் உண்மையில் கொடுமை வாய்ந்ததாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில், தொற்றுநோயை எதிர்கொள்ள கடன் வாங்குவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பணக்கார நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கூறின.

ஆனால், தற்போது இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என வளர்ந்துவரும் நாடுகள் யோசிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-61178847

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி.

இங்கும்….. நினைக்க முடியாத அளவிற்கு, சகல பொருட்களும் விலை ஏறி உள்ளது.
சில பொருட்கள்… கடைகளிலேயே இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் "மானிட பேரழிவை" சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பால் உணவு பொருட்கள் விலையேற்றமாம்.ஏதோ உக்ரேன்  இந்த உலகத்துக்கு இவ்வளவுகாலமும் படியளந்த மாதிரி......

சவூதியிலை இருந்து வாற எண்ணை விலையேற்றத்துக்கும்
இந்தியாவிலை இருந்து வாற பசுமதி விலையேற்றத்துக்கும்
ஜேர்மனியிலை உற்பத்தியாகிற பால் விலையேற்றத்துக்கும்
ஏன் உலகம் முழுக்க எல்லா பொருட்களுக்குமான விலையேற்றத்துக்கும்

உக்ரேன் சண்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டதை யாரவது சொல்லுங்கோப்பா?
 

2 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பால் உணவு பொருட்கள் விலையேற்றமாம்.ஏதோ உக்ரேன்  இந்த உலகத்துக்கு இவ்வளவுகாலமும் படியளந்த மாதிரி......

சவூதியிலை இருந்து வாற எண்ணை விலையேற்றத்துக்கும்
இந்தியாவிலை இருந்து வாற பசுமதி விலையேற்றத்துக்கும்
ஜேர்மனியிலை உற்பத்தியாகிற பால் விலையேற்றத்துக்கும்
ஏன் உலகம் முழுக்க எல்லா பொருட்களுக்குமான விலையேற்றத்துக்கும்

உக்ரேன் சண்டைக்கும் என்ன சம்பந்தம் எண்டதை யாரவது சொல்லுங்கோப்பா?
 

உலகளாவிய விலையேற்றத்துக்கு உக்ரெய்ன் போரினால் பங்குச் சந்தையில் ஏற்படும் பதட்ட நிலையும் ஒரு காரணம் என்று நம்புகிறேன்.

போர் ஆரம்பித்த முதல் நாள் அமெரிக்க ஐரோப்பிய பங்குகள் (NASDAQ, CAC40, DAX40 போன்றவை) பாரிய வீழ்ச்சியை அடைந்தன. பின்னர் ஒவ்வொரு நாளும் உயர முயற்சித்தாலும் சண்டையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் சம்பவங்களினால் மறுபடி திடீர் சரிவைச் சந்தித்தன. உதாரணமாக ரஸ்ய படைகள் சேர்னோபில் அணு நிலையத்தைச் சுற்றி வளைத்தபோது மீண்டுமொரு பாரிய சரிவு ஏற்பட்டது.

அதேவேளை மூலப்பொருட்கள் வரலாறு காணாத அளவில் ஏறியது. இதற்கான காரணம் ஒருவேளை பங்குச் சந்தை முதலீடுகளை மூலப் பொருட்களில் நகர்த்தப்பட்டதாக இருக்கலாம். மூலப் பொருட்களில் தங்கம் வெள்ளி பல்லாடியம் பிளட்டினம் போன்றவற்றுடன் கோதுமை பெற்றோல் போன்றனவும் அடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

இங்கும்….. நினைக்க முடியாத அளவிற்கு, சகல பொருட்களும் விலை ஏறி உள்ளது.
சில பொருட்கள்… கடைகளிலேயே இல்லை.

அண்ணன் புட்டின் இன்னும் மனிதாபிமானத்துடன் இருக்கின்றார்.ஐரோப்பா பக்கம் வாற எரிவாயுவை நிப்பாடினால் தெரியும் கூத்து.
பாசமோ நேசமோ கோபமோ இடக்கை வலக்கை போல ஒருத்தரை ஒருத்தர் நம்பி வாழுறதுதான் உலக யதார்த்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@இணையவன்

இதனால் தான் மனிதநேயமற்ற மேற்குலகை வெறுக்க வேண்டிவருகின்றது. என்ன செய்வது உலகம் அவர்கள் கையில்.......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அண்ணன் புட்டின் இன்னும் மனிதாபிமானத்துடன் இருக்கின்றார்.ஐரோப்பா பக்கம் வாற எரிவாயுவை நிப்பாடினால் தெரியும் கூத்து.
பாசமோ நேசமோ கோபமோ இடக்கை வலக்கை போல ஒருத்தரை ஒருத்தர் நம்பி வாழுறதுதான் உலக யதார்த்தம்.

மேற்கு நாடுகளுக்கு… கருனை உள்ளம் கொண்ட,
புட்டினைப் போன்ற எண்ணம்  இல்லவே இல்லை.
உண்மையில்…. மேற்கு உலகம் இரட்டை வேடமும், மனிதாபிமானமும் அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

மேற்கு நாடுகளுக்கு… கருனை உள்ளம் கொண்ட,
புட்டினைப் போன்ற எண்ணம்  இல்லவே இல்லை.
உண்மையில்…. மேற்கு உலகம் இரட்டை வேடமும், மனிதாபிமானமும் அற்றவர்கள்.

எல்லாம் கலிகாலம் சிறித்தம்பி.
ஒருசில கண்களுக்கு நல்லவன் கெட்டவனாய் தெரிகிறான் கெட்டவன் நல்லவனாய் தெரிகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் கலிகாலம் சிறித்தம்பி.
ஒருசில கண்களுக்கு நல்லவன் கெட்டவனாய் தெரிகிறான் கெட்டவன் நல்லவனாய் தெரிகிறான்.

குமாரசாமி அண்ணை....
தமிழ்நாட்டில்... சில ஆட்கள்,  நாங்கள் பரம்பரை பரம்பரையாக..
காங்கிரசுக்கோ, தி.மு.க. விற்கோ, அ.தி.மு.க.விற்கோ... 
வாக்கு போட்ட குடும்பம் என்றும்.... இந்த முறையும் 
அதுக்குத்தான்  வாக்கு போடுவோம் என்று சொல்வார்கள்.  😂

அதிலை... 🐃 எருமை 🐃 நின்றாலும், அவர்கள் அந்தக் கட்சிக்கு  போடுற குணம் இருக்கு.
அதே... மாதிரி, இங்கையும் சிலருக்கு... வெள்ளைக்காரன் என்றால்...
ஏதோ.... கடவுள் மாதிரி, அவன் செய்யிறதெல்லாம் சரி என்று,
நினைக்கிறார்கள் போலுள்ளது.
அவர்களின்... அறியாமையை நினைத்து, பரிதாபப்  படுவதைத் தவிர வேறு வழி இல்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை....
தமிழ்நாட்டில்... சில ஆட்கள்,  நாங்கள் பரம்பரை பரம்பரையாக..
காங்கிரசுக்கோ, தி.மு.க. விற்கோ, அ.தி.மு.க.விற்கோ... 
வாக்கு போட்ட குடும்பம் என்றும்.... இந்த முறையும் 
அதுக்குத்தான்  வாக்கு போடுவோம் என்று சொல்வார்கள்.  😂

அதிலை... 🐃 எருமை 🐃 நின்றாலும், அவர்கள் அந்தக் கட்சிக்கு  போடுற குணம் இருக்கு.
அதே... மாதிரி, இங்கையும் சிலருக்கு... வெள்ளைக்காரன் என்றால்...
ஏதோ.... கடவுள் மாதிரி, அவன் செய்யிறதெல்லாம் சரி என்று,
நினைக்கிறார்கள் போலுள்ளது.
அவர்களின்... அறியாமையை நினைத்து, பரிதாபப்  படுவதைத் தவிர வேறு வழி இல்லை. 🤣

சிறித்தம்பி அது அறியாமை இல்லை  வெள்ளை /மேட்டுக்குடி மோகம் ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.