Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன்

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்சியான சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் திட்டத்தையே அரசாங்கம் கொண்டிருப்பதாகவும், இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டு முஸ்லிம் மக்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாணத்தை இராணுவத்தினர் முழுமையாக மீட்டுள்ள நிலையில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மூன்றாம் கட்டை கல்லுமலைப் பகுதியில் இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்குத் தூபம் இடப்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பகுதிக மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர தலைமையிலான பிக்குமார் குழுவொன்று கல்லுமலைப் பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இந்தக் கல்லுமலைப் பகுதியில் கல்லுடைக்கும் தொழிலை தமது தொழிலாகக் கொண்டவர்கள் இனிமேல் அதனைக் கைவிட வேண்டுமென ஜயந்த தலைமையிலான குழுவினர் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் கல்லுடைப்பதை ஜீவனோ பாயத் தொழிலாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் பலர் வேலையை இழந்திருப்பதாகப் பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கண்டித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

- சங்கதி

மூதூர் கிழக்கினை சிங்களக் குடியேற்றமாக மாற்றும் முயற்சிகள் ஆரம்பம்

ஸ்ரீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூதூர் கிழக்கினை சிங்கள குடியேற்றமாக மாற்றும் முயற்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை அடுத்து மூதூர் கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டுளளனர்.

தற்போது அந்த பிரதேசத்தில் அதிகளவான பௌத்த விகாரகைளை நிர்மாணிக்கும் பணிகள் ஸ்ரீலங்கா படைத்தரப்பின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மூதூர் கிழக்கினை முற்றிலும் சிங்களவர்களுக்கு சொந்தமான குடியேற்றமாக மாற்றும் முயற்ச்சியே என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மூதூர் கிழக்கில் சம்பூர் சேனையூர் கட்டைப்பறிச்சான் சீனன் வெளி உட்பட பல பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தேவேளை குஞ்சம்பா வெளி மலையின் உச்சியில் அமைந்திருந்த இந்து கோவிலை உடைத்து எறிந்து விட்டு அங்கு மிகப்பெரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரையின் திறப்பு விழாவில் ஸ்ரீலங்காவின் முக்கிய அமைச்சர்களும் அரசாங்க தரப்பு பிரதிநிதிகளும கலந்து கொண்டமை அரசாங்க தரப்பின் ஆக்கிரமிப்பு முயற்ச்சியை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: நீங்கள் எல்லாரும் நல்லா இருங்கோ :o:o:o
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நடக்கட்டும் :angry:

மட்டக்களப்பு வடக்கே கடந்த சில தினங்களாக தமிழ் பிரதேசங்களில் பெருமளவில் அத்துமீறிக் குடியேற்றம்.

ஜ செவ்வாய்கிழமைஇ 7 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீராவோடை, கறுவாக்கேணி, கொண்டையன் கேணி ஆகிய தமிழ் கிராமங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான காணியிலும் அரச காணியிலும் தொடர்ச்சியான அத்துமீறிய குடியேற்றம் நடைபெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் கவனத்திற்கு கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், ஹமட்டக்களப்பு நகருக்கு வடக்காக சுமார் 30 கிலோ மீற்றரில் மேற்படி தமிழ் எல்லைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இவை கல்குடா தொகுதியிலுள்ள கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் (வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவு) அமைந்துள்ள பழைமை மிக்க தமிழ் கிராமங்களாகும். இந்தக் கிராமங்களுக்கு எல்லையாக கோறளைப்பற்று மேற்கு முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள (ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவு) மீராவோடை முஸ்லிம் பிரிவு, மாஞ்சோலை, மாவடிச்சேனை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 1995 ஆம் ஆண்டு வரை பல தடவைகளில் இத்தமிழ் கிராமங்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முஸ்லிம் மக்களினாலும் தாக்கப்பட்டன. இதனால், பல தமிழர்கள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதனால், அக்குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாழைச்சேனை, விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்தன. இதையடுத்து, அக்கிராமங்களில் பல காணிகள் மக்கள் இல்லாத இடங்களாக இருந்தன. எனினும், 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமுலுக்கு வந்ததை அடுத்துபல குடும்பங்கள் இக்கிராமங்களில் மீளக்குடியமர்ந்துள்ளன. இருப்பினும், தற்போது முஸ்லிம்களினால் அத்துமீறிக்குடியேறியுள்ள பகுதிகளில் அச்சம் காரணமாக மக்கள் குடியமர முடியாமலும் வீடுகள் அமைக்கப்பட்டாலும் பகல் வேளையில் தங்குபவர்களாகவும் இருந்தனர். கடந்த ஒரு சில வருடங்களாக இப்பகுதியில் முஸ்லிம்கள் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்யாமல் இருந்தபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மிக வேகமான அத்துமீறிய குடியேற்றங்களை தமிழர் பகுதிகளை நோக்கி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு உடந்தையாக அரசில் அங்கம் வகிக்கும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பின்னணியில் இருந்து செயற்படுவதுடன் தற்போது புதிதாக ஆயுதக்குழுவொன்றும் உருவாகி செயற்பட்டு வருகின்றது. இந்த ஆயுதக் குழுவின் பாதுகாப்புடனும் அமைச்சரின் ஒத்துழைப்புடனும் மேற்படி தமிழ் பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. கடந்தவாரம் இப்பகுதியில் இக்குடியேற்றம் ஆரம்பமானபோது அதனைத் தடுத்து நிறுத்துமாறு அரச அதிபர் எஸ். அருமைநாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கிரீகலவினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பொலிஸாரின் தலையீட்டினால் இக்குடியேற்றம் தடைப்பட்டிருந்தபோதிலும் கடந்த 4 ஆம் திகதி முதல் இக்குடியேற்றம் மிகத்தீவிரமாக இருக்கின்றது.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர வேலிகளை அமைத்தும் கொட்டில்களை அமைத்தும் இடங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால், தமிழ் கிராமங்களான கறுவாக்கேணிக்கு மேற்காக உள்ள பல ஏக்கர் காணிகளும் மீராவோடை கிராமத்திற்கு வடக்காக உள்ள பல காணிகளும் கொண்டையன்கேணி கிராமத்திற்கு மேற்காகவுள்ள பல காணிகளுமாக தமிழர்களுக்குச் சொந்தமான, உறுதிப்பத்திரம் மற்றும் அனுமதிப் பத்திரத்தையுடைய காணிகளும் தமிழ் பகுதிகளுக்குச் சொந்தமான அரச காணியுமாக பல ஏக்கர் காணிகள் அத்துமீறிய குடியேற்றத்தினால் முஸ்லிம்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. தற்போதைய, கிழக்கின் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் எவரும் தட்டிக்கேட்க முடியாது என்ற நிலையில் இத்தகைய குடியேற்றங்களும் தமிழர் நில அபகரிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஏ. அமீர் அலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றார். இது அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தி கலவரங்களை தோற்றுவிக்க வழிவகுத்து விடுமென்றும் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்றி

நிதர்சனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படவேண்டும்

கிழக்கு மாகாணத்தை இராணுவப் பலத்தின் மூலமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலமாக அரசாங்கம் தனது படைபலம் உயர்ந்ததாக இருக்கின்றது என்று வெளிப்படுத்தி நிற்கின்றது. கிழக்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள போதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முழுமையாக ஒழித்து விட்டதாக இப்போதைக்கு கூறமுடியாது.

கிழக்கை தொடர்ந்தும் அரசாங்கம் வைத்துக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தபட்சம் இன்னும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை நிறைவு செய்து கொள்வதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதன் மூலமாக அங்குவாழும் மக்களின் சுபீட்சத்திற்கு வழி பிறந்துள்ளதாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, “கிழக்கின் உதயம்” எனும் திட்டத்தின் மூலமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால், தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணம் சிங்கள மொழி பேசும் மக்களினை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக மாறிப்போய்விடுமா என்று சிறுபான்மையினரும், அவர்களின் அரசியல் கட்சிகளும் சிந்தித்துக்கொண்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.