Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க... அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த, வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க... அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த, வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை!

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், அன்றைய தினம் நாட்டில் நிலவும் மோசமான நிலைமைகள் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் முன்னிலையாகப் போவதில்லை என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285292

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்றும் ஏமாற்றமில்லை எல்லாம் எதிர்பார்த்ததுதான். அவர்களே வழக்கு தாக்கல் செய்வதும் பின் விடுவிப்பதும் வழமையாகி விட்டது நாட்டில். ஆனால் காணியை கொள்வனவு செய்து, ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க பணம் எங்கிருந்து வந்தது? என்பதை வெளிக்கொணர வேண்டிய கடமையுண்டு விடுதலையை அறிவிக்கும் தரப்புக்கு. அப்போதான் அந்த தீர்ப்பின்  உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படும். நாட்டின் நிதி நெருக்கடி உணர்ந்து, அரசாங்க ஊழியர் தங்கள் ஒருமாத சம்பளத்தை வழங்க வேண்டும், மக்கள் ஒருநேரம் மட்டும் சாப்பிடவேண்டும், மிதிவண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குபவர்கள்; இந்த ஆடம்பர செலவு செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்காதது ஏன்? நாட்டுக்காக, மக்களுக்காக சேவை செய்ய வந்தோம் என்று அலப்பறை செய்பவர்கள் இதை உணராதது ஏன்? ஏழை மக்களை  சுரண்டி அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்த, மக்களின் வயிறு காய வேண்டுமா? கால்கள் கடுக்க பயணிக்க வேண்டுமா? இதற்காகத்தான் மக்கள் இவர்களை தெரித்தெடுத்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனுக்கு நீதி அமைச்சு.....என்னவென்று ..ராசபக்சவின் கூட்ட வழக்குத் தோல்வியடையும்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் ஒரு காலமுண்டு. எல்லாம் சுயமாக இயங்குகிறது என்பதை காண்பிப்பதற்காக ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டவரின் உத்தரவை ரத்துச் செய்ததோ நீதிமன்றம்? பரவாயில்லை.... நாளை ஆட்சி மாறியவுடன் தீர்ப்புகளும் மாறும். மீண்டும் வழக்கு தாக்கல் செய்து தமக்கு சாதகமாக தீர்ப்புகளை மாற்றி அமைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

சகோதரனுக்கு நீதி அமைச்சு.....என்னவென்று ..ராசபக்சவின் கூட்ட வழக்குத் தோல்வியடையும்..

அவர் சகோதரர் அல்ல..... இன்றைய நிலையில், கோத்தா பதவி விலக தயார். ஆனால் அவருக்கு பின், பாருமன்றம் தேர்வு செய்ய கூடியவர், மொட்டுக் கட்சியின் தலைவர் பசில். ஆகவே.... விஜயதாச ராஜபக்ச..... இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள், எம்பியாக கூட இருக்க முடியாது என்று சட்டம் மாத்த முணைகிறார். பசில் ஆதரவாளர் சம்மதிக்கவில்லை. கோத்தா.... மாத்த ஆதரவு குடுக்கிறார்.

மகிந்த அமைதியாகி விட்டார்....

சவேந்திரா எதுக்கு.... சில உறுதிமொழிகள் தந்தால், நானே... ஒத்துழைப்பு தந்து விலகுகிறேன் என்று சகோதர ஆதரை இழந்து விட்ட கோத்தா டீல் போட்டிருக்கக் கூடும்.

கேய்க், யுத்தக்குற்ற விசாரணை என்று வயசு போன காலத்தில் இழுபடுவதிலும், அமெரிக்கா போய் மணைவி, மகன், பேத்தியோட இருக்கலாம்.

ஆக..... ரணிலை ஜனாதிபதி ஆக்கும் நோக்கத்தில் ஏதோ அழுத்தம்..... பின்னால்.....

நமக்கெதுக்கு பொல்லாப்பு..... நாலு தேவாரம் பாடப்போறன்.... இருங்கோ வாறன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.