Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலினை சந்தித்தார் மிலிந்த!

June 4, 2022
 

spacer.png

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தமிழ் தத்துவவியலாளரும் புலவருமான திருவள்ளுவரின் சிலையொன்றை இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை மிலிந்த மொரகொட ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டிருந்த நிகழ்வொன்றில் அண்மையில் கூறிய பின்புலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 

https://globaltamilnews.net/2022/177379

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்திப்பின் மூலம், ஈழத்தமிழர்களின் மனதை புண்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், அவர்களின் அபிலாசைகளையும் மலினப்படுத்தி விட்டார் முதல்வர்.

இந்த சந்திப்பு வேண்டுதலை, பகிரங்கமாக கண்டன தொனியில் முதல்வர் மறுத்து இருக்க வேண்டும்.

மலிந்த 13 அதிகார பபரவலாக்கத்தையே வெறுப்பவர், 13 ஐ  ஒழிக்க வேண்டும் என்று திட்டம் இட்டு செயலாற்றி வருகிறார்.

இப்படி வரம் ஒரு முறை ஏதாவது ஓர்  செய்வது, 13 ஐ முற்றாக மழுங்கடித்து ஒழித்துவடுவது, மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சியில் உள்ள முக்கிய நபர்களின் ஆசியுடன். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு கூடுதல் உதவி அளிக்க மு.க. ஸ்டாலின் உறுதி

43 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கைக்கு கூடுதல் உதவி அளிப்பதாக ஸ்டாலின் உறுதி

பட மூலாதாரம்,SRI LANKA IN INDIA/TWITTER

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (04/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகோடாவிடம் இந்த உறுதியை அவர் அளித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு மத்திய அரசு மூலமாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே உதவி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தூதர் மிலிந்த மொரகோடா சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் ,மிலிந்தா மொரகோடா வெளியிட்ட பதிவில், 'முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருந்தது.

சந்திப்பின்போது, இலங்கைக்கு கூடுதல் உதவிகளை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைக்குத் தேவைப்படும் கூடுதலான அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து அந்த நாட்டுக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்து பொருள்களை தமிழக அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இந்தக் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு 45 கோடி.

இதைத் தொடர்ந்து மேலும் நிவாரணப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான உறுதியை தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த இலங்கைத் தூதரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

"இலங்கையில் சர்வதேச பிரச்னையாக ரஷ்ய விமான பிரச்னை மாற்றப்பட்டுள்ளது" - சஜித் பிரேமதாச

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேறத் தடை விதித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

 

சஜித் பிரேமதாச

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதுகுறித்த செய்தியில், "நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதோடு, ராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்னை தற்போது பாரிய அளவில் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இல்லாமலாக்கிக் கொள்ளவும் நாட்டின் தேயிலையை விற்பனை செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளவுமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்த அபாய நிலையைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஜனாதிபதி அல்லது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் காணப்படுவது ஏன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61694062

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினை இனி முடிஞ்சுது...இனி அடிக்கடி மொரகொட இசுடாலினை சந்திப்பார்..தோசை சாப்பிடவே தமிழ்நாடு வருவர்..கனிமொழி சால்வைத் துண்டுடன் ரணிலைச் சந்திக்க விரைவில்போவா....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்சின் உறவினர். இதன் மூலம் அமெரிக்க உதவி பெற்று புலிகளை அழித்தது. கருணா பிழவுக்கு மூலகர்த்தா மிலிந்த மொறகொட .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.