Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை பொருட்கள் விலை

பட மூலாதாரம்,PMM

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது.

இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.

அரிசி வகைகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அரிசி வகைகளை களஞ்சியப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், பொருட்களுக்கான விலைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

உலக நாடுகளே பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி, ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் ரசாயன உர பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் தடை விதித்திருந்தமையினால், உள்நாட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் போகத்தில் விவசாயத்தை உரிய முறையில் செய்வதற்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிடமிருந்து விசேட கடன் திட்டம்

 

இலங்கை பொருட்கள் விலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் ஒரு கட்டமாக இந்தியாவிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை இன்று (10) கைச்சாத்திட்டது.

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியிருந்தது.

சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கடன் வசதி கோரப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர கடனை வழங்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பொருட்களின் விலைகள் கடந்த ஓரிரு மாதங்களுக்குள் மேலும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள விதத்தை பட்டியலில் காணலாம்.

 

பொருட்களின் விலை பட்டியல்

 

படக்குறிப்பு,

பொருட்களின் விலை பட்டியல்

இந்த நிலையில், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், பலரும் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், சிலர் தாம் கொள்வனவு செய்யும் பொருட்களின் அளவை குறைத்துக்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

அரிசி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறிய போதிலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவ்வாறான தட்டுப்பாடு வராது என உறுதியளித்துள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் அச்சம் கொள்ள தேலையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், மேலும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61763096

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.

 எவ்வளவு காலத்திற்கு இது சாத்தியமாகும்? இலங்கை எப்போது பிரச்சனையிலிருந்து மீளும்? இப்போதைக்கு மீளக்கூடிய ஒளிக்கீற்று எதுவும் தெரியவில்லையே? போர்க்காலத்தில்  இலங்கை வானொலி  செய்தியை  கேட்டு சாமான்களை வாங்கி சேகரித்ததும், எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிய நிகழ்வுகள் வந்து போகிறது மனதில். அன்று விட்டு ஓடிய உறவுகளில் சிலரை மீள காணும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது வாழ்வில்.

8 hours ago, ஏராளன் said:

ஒரு கட்டமாக இந்தியாவிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை இன்று (10) கைச்சாத்திட்டது.

 

8 hours ago, ஏராளன் said:

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியிருந்தது.

 எதற்கு கோரிக்கை, உடன்படிக்கை, கைச்சாத்து என்று நேரத்தை செலவிட்டுக்கொண்டு? பேசாமல் அவர்களிடமே நாட்டைக்கொடுத்துவிட வேண்டியதுதான். இவர்களால் மீள முடியுமா வேண்டிய கடனிலிருந்து? மீண்டும் மீண்டும் வேறுநாடுகளை தேடிக்கொண்டே இருப்பார்கள் கடன் வாங்குவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எதற்கு கோரிக்கை, உடன்படிக்கை, கைச்சாத்து என்று நேரத்தை செலவிட்டுக்கொண்டு? பேசாமல் அவர்களிடமே நாட்டைக்கொடுத்துவிட வேண்டியதுதான்.

உழுகிற மாடானால் உள்ளூரிலேயே விலை போகும். 

இலங்கைத்தீவில் இருக்கிற மக்களில்... அந்தத் தீவைப் பாதுகாக்கக் கூடிய மக்கள் வாழும் நாடு ஒன்று இலங்கைக்கு உள்ளேயே உள்ளபோது, அதனை அங்கீகரித்து அதனிடம் செல்லாமல், எதற்காக வேறு நாடுகளை நாடவேண்டும்...???🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி மூட்டை திருட்டு!

அரிசிக்கான... அதிகபட்ச சில்லறை விலை – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியில் சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1286538

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

அந்தத் தீவைப் பாதுகாக்கக் கூடிய மக்கள் வாழும் நாடு ஒன்று இலங்கைக்கு உள்ளேயே உள்ளபோது,

அந்த மக்களின் முள்ளெலும்பை முறிச்சு வெற்றி கொண்டாடியபின் மீண்டும் அவர்களிடம் நாட்டைக் கொடுக்க வரட்டுகவுரவம் இல்லையில்லை ..... தனக்கு நாடு இல்லாமல்  போனாலும் பரவாயில்லை தமிழருக்கு உரிமை கிடைக்காமல் செய்வதில் சிங்களம் குறியாய் இருக்கு. புலம்பெயர் தமிழர் நாடைத்தாங்க தாங்கள் தயார் என்று சொல்வதாக கேள்விப்பட்டேன்? ஆனால் இவர்களின் எண்ணம்; காசை அவர்களாய் தங்களிடம் தந்துவிட்டு, கைகட்டி தங்களுக்கு கீழேயே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சம்பிக்க; தான் தமிழரை அணைத்து பயணிக்க தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளார். மங்கள போல் முடிவை நெருங்குகிறாரோ தெரியவில்லை. சுடலை ஞானமாய் இருக்குமோ? இதற்கு ஆதாரம் கேட்டு சில கேள்விகள் வரும். அறிந்ததை சொல்கிறேன் வேறொன்றும் எனக்கு தெரியாது.

இல்லாத பொருளுக்கு விலையேற்றமும், நிர்ணயமும். விசித்திரமான அரசு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.