Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 9 தாக்குதலுக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன : பிரசன்ன ரணதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 9 தாக்குதலுக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன : பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மே மாதம் இடம்பெற்ற கலவரத்துக்குப்  பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்துள்ளன. இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனமில்லை. ஏனெனில் எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொண்வர்  தேரர் ஒருவராவார்  என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனம் இல்லை. ஏனெனில் கடந்த மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறை, மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கியது கிராமங்களில் இருக்கும் எமது தேரர்களாகும்.

இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொள்ளவந்ததும் பேராசிரியர் தேரர் ஒருவராவார் . தீ வைத்ததும் தேரர் ஒருவராவார் .

தேரர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதன் மூலம் இந்த நாட்டில் ஒழுக்கம் ஏற்படுமா என்பது சந்தேகமாகும். இந்த நிலை தொடர்ந்தால்தேரர்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

பண்டாரநாயக்கவின் கொலைக்குப் பின்னரே  அரசியல் வாதிகள் கொலை செய்யப்படும் நிலை நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அமரகீர்த்தி அத்துகோரலவை கொலை செய்தது சாதாரண மனிதர்கள் அல்ல.

அவர்கள் போதை பயன்படுத்துபவர்கள். அவர்களுக்கு வாழ்க்கை ஒன்று இல்லை. இதனுடன் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிட்டு  கொலை செய்யவேண்டும் என நிட்டம்புவ பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று இந்த சம்பவ தினம் சாேபித்த தேரர், கார்தினால் ஆகியோர் அங்கி இருந்து கொண்டு இவர்களுக்கு அடியுங்கள் என்றே தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் இதனை தெரிவிக்கவில்லையா? இந்த சம்பவம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் அல்ல.

31ஆம் திகதி ஜனாதிபதியின் வீட்டுக்கு அடித்தார்கள். அங்கு தீ வைத்தார்கள். அப்பாவிகளின் வீடுகளுக்கு தீ வைத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு சென்று வீரர்கள் போலே அவர்களை வெளியில் எடுத்தனர். 

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும்போது பொலிஸார் என்ன செய்தார்கள். சில சட்டத்தரணிகள் இதனை நியாயப்படுத்தியிருந்தனர். சட்டத்தரணிகளின் ஆதரவு இருப்பதாலே 9ஆம் திகதி அவர்கள் சட்டத்தை கையில் எடுத்தனர்.

மேலும் சில கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கச்செய்து, மக்களை ஒன்று திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கர்தினால் விசாரணை நடத்தவேண்டும்.

அதனால் இந்த தாக்குதலின் பின்னணியில் விகாரைகள் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ ஆலயங்களும் இருக்கின்றன. நான் இவ்வாறு தெரிவிப்பதால் எனக்கு எதிராக செயற்படுவார்கள்.

அதுதொடர்பில் நான் அச்சப்படவில்லை. ஏனெனில் நான் இழக்கவேண்டிய அனைத்தையும் இழந்துள்ளேன். இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
 

https://www.virakesari.lk/article/129252

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

எமது நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனம் இல்லை. ஏனெனில் கடந்த மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறை, மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கியது கிராமங்களில் இருக்கும் எமது தேரர்களாகும்.

 தேரர்கள் தமிழருக்கெதிராக செயற்பட்டபோது, தமிழர் வகைதொகையின்றி கொல்லப்பட்டபோது  ஏற்படாத சந்தேகம் இப்போ எழக்காரணம்: இவர் சொத்துக்கள் தாக்கப்பட்டதே!

25 minutes ago, கிருபன் said:

ஏனெனில் நான் இழக்கவேண்டிய அனைத்தையும் இழந்துள்ளேன். இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

 இப்போ இழந்த சொத்துக்காக கொந்தளிக்கிறீர்கள், ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து, துரத்தப்பட்டபோது எங்களின் வலி உங்களுக்கு புரியவில்லை? பரவாயில்லை .... இப்போகூட புரிய மறுக்கிறீர்கள் பாருங்கள், அங்கே நிக்கிறீர்கள். நீங்கள் திருந்த வாய்ப்பேயில்லை! "தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குமாம்."

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மே மாதம் இடம்பெற்ற கலவரத்துக்குப்  பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்துள்ளன. இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனமில்லை. ஏனெனில் எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொண்வர்  தேரர் ஒருவராவார்  என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

 

43 minutes ago, satan said:

 தேரர்கள் தமிழருக்கெதிராக செயற்பட்டபோது, தமிழர் வகைதொகையின்றி கொல்லப்பட்டபோது  ஏற்படாத சந்தேகம் இப்போ எழக்காரணம்: இவர் சொத்துக்கள் தாக்கப்பட்டதே!

 இப்போ இழந்த சொத்துக்காக கொந்தளிக்கிறீர்கள், ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து, துரத்தப்பட்டபோது எங்களின் வலி உங்களுக்கு புரியவில்லை? பரவாயில்லை .... இப்போகூட புரிய மறுக்கிறீர்கள் பாருங்கள், அங்கே நிக்கிறீர்கள். நீங்கள் திருந்த வாய்ப்பேயில்லை! "தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குமாம்."

தாக்குதலை தலைமையேற்று நடத்திய அந்தத் தேரர் மீது, 
நடவடிக்கை எடுக்க... இவர் பொலிஸில்  முறையிடவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு துணிவில்லை அல்லது போலீசில் நம்பிக்கையில்லை இவருக்கு,  இங்கு வந்து புலம்புகிறார். தமிழருக்கெதிராக தேரர்கள், இராணுவம், போலீஸ் என முப்படைகளும் செயற்பட்டபோது இது சிங்கள பவுத்த நாடு என பெருமைப் பட்டவர்கள், அதே செயற்பாடு தனக்கு நடந்தபோது மனம் வெதும்புகிறார். இங்கு யாரில் தவறு? தேரரிலா?  இவரிலா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அதற்கு துணிவில்லை அல்லது போலீசில் நம்பிக்கையில்லை இவருக்கு,  இங்கு வந்து புலம்புகிறார். தமிழருக்கெதிராக தேரர்கள், இராணுவம், போலீஸ் என முப்படைகளும் செயற்பட்டபோது இது சிங்கள பவுத்த நாடு என பெருமைப் பட்டவர்கள், அதே செயற்பாடு தனக்கு நடந்தபோது மனம் வெதும்புகிறார். இங்கு யாரில் தவறு? தேரரிலா?  இவரிலா?

அம்பாறையில் முட்டை கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு – theeppori

கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா...?
என்ற மாதிரி இருக்கு உங்கள் கேள்வி. 😂
இதுக்கு... பதில் சொல்லுறது கஸ்ரம். 🤣   

  • கருத்துக்கள உறவுகள்

பவுத்த நாடு என்று சொல்ல மனமில்லையாம். வெட்கப்படுகிறேன் என்று சொல்ல பயப்படுகிறார் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உணர்வுகளை புரியாமல் அரசியல் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதற்கு துணிவில்லை அல்லது போலீசில் நம்பிக்கையில்லை இவருக்கு,  இங்கு வந்து புலம்புகிறார். தமிழருக்கெதிராக தேரர்கள், இராணுவம், போலீஸ் என முப்படைகளும் செயற்பட்டபோது இது சிங்கள பவுத்த நாடு என பெருமைப் பட்டவர்கள், அதே செயற்பாடு தனக்கு நடந்தபோது மனம் வெதும்புகிறார். இங்கு யாரில் தவறு? தேரரிலா?  இவரிலா?

சாத்தான்... நுணாவிலான் இணைத்த தலைப்பில்,
அரசை பற்றியும், தேரர்களைப் பற்றியும் பல தகவல்கள் உள்ளது.
அதனை கீழே இணைத்துள்ளேன்.
நிச்சயம் உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும். வாசித்து பாருங்கள்.
அதிலும்... 1946´ம் ஆண்டின் பின்தான்.. தேரர்கள் அரசியலில் இறங்கியவர்களாம்.

👇👇👇👇👇

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதிலும்... 1946´ம் ஆண்டின் பின்தான்.. தேரர்கள் அரசியலில் இறங்கியவர்களாம்.

தேரர்கள் நேரடியாக தேர்தல் அரசியலில் இறங்கியது முதன் முதலில் ஜாதிக ஹெல / சிஹல உறுமய 1990களின் நடுப்பகுதியில் உருவாகியதன் பின்பே என நினைக்கிறேன்.

ஆனால் இலங்கை தீவின் அரசியலை தேரர்கள் கட்டுப்படுத்துவது மகிந்த, மிகுந்தலையில் (மிகிந்தலே) தேவநம்பிய தீசனை சந்தித்த போதே ஆரம்பித்து விட்டது.

அண்மைய வன்முறை சார் பெளத்த சிங்கள அரசியல் கூட 1947 க்கு வெகு முன்னதாகவே, அநகாரிக தர்மபால என்ற பெளத்த துறவி, இனத்தூய்மையாளராலேயே தூபமிடப்பட்டது.

*தர்மபால பிக்கு அல்ல ஆனால் பெளத்த துறவி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்... நுணாவிலான் இணைத்த தலைப்பில்,
அரசை பற்றியும், தேரர்களைப் பற்றியும் பல தகவல்கள் உள்ளது.
அதனை கீழே இணைத்துள்ளேன்.
நிச்சயம் உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும். வாசித்து பாருங்கள்.
அதிலும்... 1946´ம் ஆண்டின் பின்தான்.. தேரர்கள் அரசியலில் இறங்கியவர்களாம்.

👇👇👇👇👇

 

தகவலை இணைத்த நுணா, அறியத்தந்த சிறியருக்கு நன்றிகள். இது காலம் கடந்த ஞானம், எனக்கு படுகிறது. எல்லாம் ஆட்டமும் நடத்திமுடித்த பின் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள புத்தத்தை கையிலெடுத்தான் அசோக சக்கரவர்த்தி. அதை பின் இலங்கைக்கும் கடத்தினான். அது வேலை செய்கிறது இங்கும். இது முப்பது ஆண்டுக்கு முன் பரப்பப்பட்டிருந்தால் இன்று பலர் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்திருப்பர். அன்று ஏன் இந்தக்குரல் எழுப்பப்படவில்லை? அன்று தடுக்கப்பட்டிருந்திருந்தால், இன்று எவ்வாறு வெளிவந்தது என்றொரு கேள்வி எழுகிறது? தோத்துப்போன சிங்களம், தமிழரை அரவணைத்து தனது தோல்வியை நிரப்ப பவுத்தத்தை ஆயுதமாக பாவிக்க முனைகிறதா எனும் சந்தேகம் வருகிறது. எல்லாம் நடந்து முடிந்தபின் விளக்குகள் எதற்கு? என்கிற விரக்தி மட்டுமே மிஞ்சுகிறது. பவுத்தத்தை தங்களுக்கு ஏற்றவாறு பாவிக்கிறார்கள். சமூக ஊடகங்களுக்கும் சமுதாயத்தின் மட்டில் பாரிய பொறுப்பு உண்டு. அவையும் இந்த அழிவுகளுக்கு காரணம். இருந்தாலும் இவரின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக ஊடகங்கள் உதவ வேண்டும். வரும் சந்ததியாவது அமைதியாக வாழவேண்டும் என்பதே எனது, எமது அவா.  நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.