Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏறுமா வேதாளம் மீண்டும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்க நாடு கிடக்கிற பாடு 
எப்படிச் சொல்லுவம் நாங்க 
பாணுக்கும் பாலுக்கும் நாம
படுகிற துன்பத்தைப் பாரும் 

சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க 
தூங்கிறம் றோட்டில பாரும் 
எண்ணைக்கும் காஸ்சுக்குமாக 
எத்தனை சண்டைகள் இங்கு 

ஊழலும் லஞ்சமுமாக 
பாழ்பட்டுக் கிடக்குது நாடு 
ஆளுக்கு ஒரு பங்காய் 
அரசியல் வாதிகள் எல்லாம் 
அறுத்து தின்றனர் நாட்டை 
அந்த பெரிய பெரிச்சாளிகள் போல

எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி 
அந்த பூசுவா கூட்டங்கள் போலே 
பொல்லாத திருடர்கள் இவர்கள்
சிலர் போலி சோஷலிசக்காரர் 

இனவாதம் எல்லாம் பேசி 
இருந்ததை எல்லாம் குழப்பி 
இனத்துக்க குரோதத்தை வளர்த்து 
இப்போ இருக்குது நாடு கவுண்டு 

வீழ்த்தினோம் தமிழனை என்றும் 
வெற்றி விழாக்களோட எல்லாம்
தேனும் பாலும் ஓடும் என்று 
தெரிந்து விட்டோம் எம் பி மாரை 
தெரியாமல் போச்சுது இவர்கள் 
திருடர்கள் தான் என்று அப்போ 
இன்னும் திருந்துவாரா திருடர் என்று 
எமக்குள்ளே சந்தேகம் இன்னும்

அமைச்சர்மார் எல்லாம் இங்கு
அரண்மனை போல வீடுகள் கட்டி
கொள்ளை அடித்து நாட்டை 
கொழுத்து இப்போ திரியிறாங்கள் 
நாங்கள் குடிசையில் கிடக்கிறம் இன்னும்

ஒரு வேளை உணவோட நாளும்
எத்தனை குடும்பங்கள் காணும் 
படுகிற துன்பங்கள் போதும் 
பஞ்சத்தில் கிடக்கிறம் நாமும்

எத்தனை காலமாய் கை ஏந்தி 
இரந்து உண்ணுவம் நாங்கள்
இந்தியக் கடனும் முடிந்தால் 
என்னதான் தீர்வு சொல்லும் 
ஐ ம் எப் காரன் கூட 
சும்மாவா தருவான் கடனை 

வச்சான் ஆப்பு என்ற போலே 
வந்தான் ரணில் ஐயா நைசா 
நரித் தந்திர வேலை எல்லாம்
நடிப்பதில் திறமை சாலி 
கதைப்பதில் மட்டும் விண்ணன் 
காரியம் நடக்குமா பார்ப்போம் 

இனங்களின் பிரச்சினை தீர்த்து 
எப்பவும் நாட்டுக்காய் நல்ல திட்டங்கள் தீட்டி 
எதிர் காலம் நல்லதாய் இருக்க
நீங்க இனி மேலும் சிந்திக்கா விட்டால் 
இலங்கைக்கு விமோசனம் இல்லை 
இதை இனியும் உணர்வாரா இங்கு
இல்லை ஏறுமா வேதாளம் மீண்டும்.

பா.உதயன் ✍️

Learn From Your Mistakes!
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, uthayakumar said:

 

எங்க நாடு கிடக்கிற பாடு 
எப்படிச் சொல்லுவம் நாங்க 
பாணுக்கும் பாலுக்கும் நாம
படுகிற துன்பத்தைப் பாரும் 

சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க 
தூங்கிறம் றோட்டில பாரும் 
எண்ணைக்கும் காஸ்சுக்குமாக 
எத்தனை சண்டைகள் இங்கு 

ஊழலும் லஞ்சமுமாக 
பாழ்பட்டுக் கிடக்குது நாடு 
ஆளுக்கு ஒரு பங்காய் 
அரசியல் வாதிகள் எல்லாம் 
அறுத்து தின்றனர் நாட்டை 
அந்த பெரிய பெரிச்சாளிகள் போல

எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி 
அந்த பூசுவா கூட்டங்கள் போலே 
பொல்லாத திருடர்கள் இவர்கள்
சிலர் போலி சோஷலிசக்காரர் 

இனவாதம் எல்லாம் பேசி 
இருந்ததை எல்லாம் குழப்பி 
இனத்துக்க குரோதத்தை வளர்த்து 
இப்போ இருக்குது நாடு கவுண்டு 

வீழ்த்தினோம் தமிழனை என்றும் 
வெற்றி விழாக்களோட எல்லாம்
தேனும் பாலும் ஓடும் என்று 
தெரிந்து விட்டோம் எம் பி மாரை 
தெரியாமல் போச்சுது இவர்கள் 
திருடர்கள் தான் என்று அப்போ 
இன்னும் திருந்துவாரா திருடர் என்று 
எமக்குள்ளே சந்தேகம் இன்னும்

அமைச்சர்மார் எல்லாம் இங்கு
அரண்மனை போல வீடுகள் கட்டி
கொள்ளை அடித்து நாட்டை 
கொழுத்து இப்போ திரியிறாங்கள் 
நாங்கள் குடிசையில் கிடக்கிறம் இன்னும்

ஒரு வேளை உணவோட நாளும்
எத்தனை குடும்பங்கள் காணும் 
படுகிற துன்பங்கள் போதும் 
பஞ்சத்தில் கிடக்கிறம் நாமும்

எத்தனை காலமாய் கை ஏந்தி 
இரந்து உண்ணுவம் நாங்கள்
இந்தியக் கடனும் முடிந்தால் 
என்னதான் தீர்வு சொல்லும் 
ஐ ம் எப் காரன் கூட 
சும்மாவா தருவான் கடனை 

வச்சான் ஆப்பு என்ற போலே 
வந்தான் ரணில் ஐயா நைசா 
நரித் தந்திர வேலை எல்லாம்
நடிப்பதில் திறமை சாலி 
கதைப்பதில் மட்டும் விண்ணன் 
காரியம் நடக்குமா பார்ப்போம் 

இனங்களின் பிரச்சினை தீர்த்து 
எப்பவும் நாட்டுக்காய் நல்ல திட்டங்கள் தீட்டி 
எதிர் காலம் நல்லதாய் இருக்க
நீங்க இனி மேலும் சிந்திக்கா விட்டால் 
இலங்கைக்கு விமோசனம் இல்லை 
இதை இனியும் உணர்வாரா இங்கு
இல்லை ஏறுமா வேதாளம் மீண்டும்.

பா.உதயன் ✍️

Learn From Your Mistakes!
 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாட்டின் பஞ்சத்தையும் அதை செய்த பஞ்சமாபாதகர்களையும் நன்றாக சாடியிருக்கின்றீர்கள்......இதுபோன்ற கவிதைகள் எதிர்காலத்தில் இன்றைய இறந்தகாலத்தை தாங்கி நிக்கும் பதிவுகளாகும்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 17:58, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

 

On 17/6/2022 at 18:21, suvy said:

இன்றைய நாட்டின் பஞ்சத்தையும் அதை செய்த பஞ்சமாபாதகர்களையும் நன்றாக சாடியிருக்கின்றீர்கள்......இதுபோன்ற கவிதைகள் எதிர்காலத்தில் இன்றைய இறந்தகாலத்தை தாங்கி நிக்கும் பதிவுகளாகும்.......!  👍

உறவுகள் தமிழ் தேசியனுக்கும் சுவேக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் !

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 08:35, uthayakumar said:

இனங்களின் பிரச்சினை தீர்த்து 
எப்பவும் நாட்டுக்காய் நல்ல திட்டங்கள் தீட்டி 
எதிர் காலம் நல்லதாய் இருக்க
நீங்க இனி மேலும் சிந்திக்கா விட்டால் 
இலங்கைக்கு விமோசனம் இல்லை 
இதை இனியும் உணர்வாரா இங்கு
இல்லை ஏறுமா வேதாளம் மீண்டும்.

பா.உதயன் ✍️

Learn From Your Mistakes!
 

முக்கிய செய்தியை... சொன்ன, கவிதைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.