Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜூலியன் அசாஞ்சேவை.... அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு, பிரித்தானியா ஒப்புதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானியா ஒப்புதல்!

ஜூலியன் அசாஞ்சேவை.... அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு, பிரித்தானியா ஒப்புதல்!

கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய உட்துறைச் செயலர் பிரித்தி படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

உளவு பார்த்தல் குற்றச்சாட்டு உட்பட 18 வழக்குகளில் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க அதிகாரிகளால் தேடப்படுகிறார்.

எவ்வாறாயினும், பல மேல்முறையீட்டு வழிகள் அசாஞ்சிற்கு திறந்தே உள்ளன. அந்த முடிவை எதிர்த்து முறையீட 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

‘நேற்று (வெள்ளிக்கிழமை) நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இரண்டின் பரிசீலனையைத் தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அசாஞ்சே மேல்முறையீடு செய்வதற்கான சாதாரண 14 நாட்கள் கால அவகாசத்தை கொண்டுள்ளார்.

இந்த வழக்கில், அசாஞ்சேவை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதி அல்லது முறைகேடு என்று பிரித்தானிய நீதிமன்றங்கள் கண்டறியவில்லை. ஒப்படைப்பு என்பது அவரது மனித உரிமைகளுடன் ஒத்துப்போகாது, நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் உட்பட, அமெரிக்காவில் இருக்கும் போது அவரது உடல்நிலை உட்பட அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்பதையும் அவர்கள் கண்டறியவில்லை’ என பிரித்தானிய உட்துறைச் செயலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ட்விட்டரில் கூறியுள்ள விக்கிலீக்ஸ், இது ‘பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிரித்தானிய ஜனநாயகத்திற்கான இருண்ட நாள்’ என்றும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த மோதல்களில் அமெரிக்காவின் தவறுகளை அவர் அம்பலப்படுத்தியதால் அவர் ஒரு ஸ்தாபன எதிர்ப்பு வீரன் என்றும், அவரது வழக்குப்பதிவு, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான அரசியல் உந்துதல் தாக்குதல் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.

https://athavannews.com/2022/1287505

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.

உண்மைக்கு பாதுகாப்பும் இல்லை.
உண்மைக்கு மதிப்பும் இல்லை.

இந்த லட்சணத்தில் உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உண்மைக்கு பாதுகாப்பும் இல்லை.
உண்மைக்கு மதிப்பும் இல்லை.

இந்த லட்சணத்தில் உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர்.

May be a cartoon

ஜூலியன் அசாஞ்சேயை... அமெரிக்காவுக்கு அனுப்பி, 
சமாதி கட்ட ஆயத்தப் படுத்துகிறார்கள்.
 😡

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.