Jump to content

பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

_bc41bfd8-ae5e-11e7-9bc1-6ddb500cf946.jpg
 

 

 

நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப் போல் நடிக்கிறோம். ஆனால் அப்படி நடிக்காமல் இதை வைத்து என்ன கற்றுக் கொள்வது என நாம் யோசிக்க வேண்டும்.

 தமிழ் தெரியாத என்னுடைய மாணவர்கள் நிறைய பேர் அவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள். அனேகமாக என் மாணவர்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. நிறைய பேர் அவருடைய எழுத்துக்களைப் பற்றி ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். இத்தனைக்கும் பெருமாள் முருகன் தொல்காப்பியம் கூறும் காலம், நிலம் குறித்த விதியை துல்லியமாக தன் கிராமிய புனைவுகளில் பின்பற்றுபவர். அந்தளவுக்கு தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய எழுத்து அவருடையது. ஆனால் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ தெரியாதவர்களால் அவரை சுலபமாக ரசித்துப் படிக்க முடிகிறது. ஆங்கில, ஐரோப்பிய, ஜப்பானிய மொழியினராலும் நமது தமிழ் நிலத்தை, அதன் பிரச்சனைகளை, பாத்திரங்களை உள்வாங்க முடிகிறது. இது அவரது புனைவுகளின் வலிமையாலே. சர்ச்சையாலும், அந்த விளம்பரம் தந்த புகழினாலும் மட்டும் அவர் இந்த இடத்தை அடையவில்லை. ஆம், ஒரு வரலாற்று தருணம் அவரை இந்த பெரும் வெளிச்சத்தையும் இடத்தையும் நோக்கித் தள்ளியது, அதற்கான தகுதி இருந்ததால் அவர் அதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அது அவரை ஒத்த திறமையான தகுதியான மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு உடனே அமையப் போவதில்லை. ஆனால் இங்கு பேச வேண்டிய விசயம் அது அல்ல.

 

இது மற்றொரு உண்மையையும் காட்டுகிறது: இந்நாள் வரை இப்படி ஒரு சந்தையே மொழியாக்கத்துக்கும் பிராந்திய எழுத்துக்கும் இல்லை; சந்தையை கவர ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அல்லது அகில இந்திய மனப்பான்மையை (pan Indian approach) கொண்டிருக்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அது தேவையில்லை என பெருமாள் முருகனும் அவருடைய பதிப்பாளரான கண்ணனும் நிரூபித்திருக்கிறார்கள். எந்தளவுக்கு ஒரு படைப்பு பிராந்திய தன்மையுடன் இருக்குமோ அந்தளவுக்கு அது சர்வதேச தன்மை கொண்டதாகும் என்பது ஒரு பின்நவீனப் பார்வை. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்கள் அப்படியானவையே. அவற்றுக்கு நடந்தது ஏன் தமிழுக்கு நடக்கவில்லை என யோசித்துக் கொண்டிருந்தோம். இதோ நடந்தே விட்டது. இது ஒரு அசாதாரணமான சாதனை

நமது எழுத்தாளர்கள், அவர்கள் பேசும் விசயம், அவர்களுடைய மொழிநடை, அவர்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் எதுவுமே, யாருமே சர்வதேச வாசகர்களுக்கும், சந்தைக்கும் தடை அல்ல, மாறாக இவையே தனியான தகுதியாக இன்று மாறி இருக்கிறது. பெருமாள் முருகன் கண்டைந்த உலகுக்கும் தமிழுக்குமான இந்த பாதையை எப்போது பிற தமிழ் எழுத்தாளர்களும் கண்டையப் போகிறார்கள்? அதற்கு ஊடகங்களும் ஆங்கில, சர்வதேச பதிப்பாளர்களும் உதவுவார்கள் எனில் நாம் தமிழில் புத்தகங்களை எவனும் வாங்குவதில்லை என கவலை கொள்ளத் தேவையில்லை. நேரடியாக பிரித்தானிய, அமெரிக்க, ஜெர்மானிய, ரஷ்ய, ஜப்பானிய வாசகர்களுக்காக நாம் எழுதலாம். அப்படியான ஒரு நாளும் வரக் கூடும்

 

எஸ்.ராவிடம் பேசிய போது அவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று ஒரு பிரசித்தமான ஆங்கில பதிப்பகம் மூலமாக வர இருக்கிறது என்றார். அண்மையில் கீதாஞ்சலி ஸ்ரீ எனும் இந்தி நாவலாசிரியர் சர்வதேச புக்கர் பரிசை Tomb of Sand எனும் இந்தியில் எழுதப்பட்டு மொழியாக்கமான தனது பிராந்திய நாவலுக்காக வென்றார். எதிர்காலத்தில் இது தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவருக்கும் நடக்கக் கூடும்.

 

எப்போதும் உள்ளுக்குள்ளோ போர் புரிந்து கொண்டிராமல் நாம் நேர்மறையாக சிந்தித்து நம்பிக்கையோடு இருப்போம். தொடர்ந்து உழைப்போம். ஒருநாள் எல்லா கதவுகளும் திறக்கும்ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2022/06/blog-post_91.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் பெருமாள்முருகன்  அவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை........!  🌹

நன்றி ஏராளன் .........!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

எழுத்தாளர் பெருமாள்முருகன்  அவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை........!  🌹

நன்றி ஏராளன் .........!

அவற்றை ஒரு புத்தகம் வெளிவந்து பெரிய பிரச்சனையாகி எழுதக் கூடாது என்று வற்புறுத்தினவர்கள் எல்லோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அவற்றை ஒரு புத்தகம் வெளிவந்து பெரிய பிரச்சனையாகி எழுதக் கூடாது என்று வற்புறுத்தினவர்கள் எல்லோ!

ஓம் ..... அது ஒரு சமுதாயத்தை குறைகூறுவதாக கூறி பெரிய பிரச்சினை பண்ணினார்கள்......அதனால் அவர் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்றதாகவும் நினைக்கிறேன்.......!

நான் அந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன்.......அதன் பெயர் மறந்து விட்டது.......இனி உணவில் கொஞ்சம் வல்லாரை சேர்க்க வேண்டும்......!  😁 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஓம் ..... அது ஒரு சமுதாயத்தை குறைகூறுவதாக கூறி பெரிய பிரச்சினை பண்ணினார்கள்......அதனால் அவர் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்றதாகவும் நினைக்கிறேன்.......!

நான் அந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன்.......அதன் பெயர் மறந்து விட்டது.......இனி உணவில் கொஞ்சம் வல்லாரை சேர்க்க வேண்டும்......!  😁 

அடுத்து எது குறித்து எழுத போகிறார்? - மனம் திறக்கும் பெருமாள் முருகன்

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
10 மார்ச் 2018
 

பெருமாள்முருகன்

''இப்போது எனக்கு நானே  தணிக்கை செய்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். அதனால்தான் என் கதையின் கருப்பொருளாக வெள்ளாட்டை தேர்ந்தெடுத்தேன்'' என்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

கடந்த ஆண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை` நாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டிற்கு வெள்ளிக்கிழமை டெல்லி வந்தவரை சந்தித்து உரையாடினோம்.

மனிதர்கள் குறித்து எழுத அச்சம்

பூனாச்சி நாவலின் நாயகன் ஒரு வெள்ளாடு. அந்த வெள்ளாட்டை சுற்றித்தான் கதை நகர்கிறது. கதையும் இங்கு நிகழ்வது அல்ல. அசுரர்கள் உலகில் நகர்வது. தொடர்ந்து அவரது படைப்புகளில் ஆடு முக்கியப் பாத்திரமாக இடம் பிடிக்கிறது.  இது குறித்து அவரிடம் கேட்டோம்,  அதற்கு அவர் பூனாச்சி நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதையே விவரிக்கிறார், "கடவுள் குறித்து எழுத முடியாது. மனிதர்கள் குறித்து எழுத அச்சம். எனக்கு ஐந்து விலங்குகளை நன்கு தெரியும். அதில் பூனையும், நாயும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. அதனால்தான் அதனை தேர்ந்தெடுத்தேன். எனக்கு நானே தணிக்கை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டேன்" என்கிறார்.

இது மாதொருபாகன் சர்ச்சைகளுக்குப் பின் எடுத்த முடிவா...? இனி சாமான்ய மனிதர்கள் உங்கள் கதைகளில் இடம்பிடிக்க மாட்டார்களா என்ற நம் கேள்விக்கு, அவர்,  "அப்படியெல்லாம் இல்லை. கதை தமக்கான கதாபாத்திரங்களை அதுவாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு, கதைகளுக்கான 15 கரு என்னிடம் இருந்தது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் அதில் எந்தக் கருவும் எனக்கு உத்வேகம் தரவில்லை. நான் எனது படைப்புகளை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டேன். காலம்தான் என் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தீர்மானிக்கிறது" என்றார் அவர்.

 

பூனாச்சி

மாதொருபாகன் வெளிச்சம்

"எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்." - இது மாதொருபாகன் சர்ச்சைக்குப் பின் பெருமாள் முருகன் கூறியது. இப்போது எது உங்களை எழுத தூண்டியது? எது பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனை உயிர்த்தெழ வைத்தது? என்ற கேள்விக்கு, "நீதிமன்றத் தீர்ப்புதான்" என்கிறார் அவர்.

இது குறித்து மேலும் அவர், "தீர்ப்பின் இறுதி வரி - 'எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்' என்று இருந்தது. அதை எனக்கான கட்டளையாகதான் கருதினேன். அந்தக் கட்டளையை புறந்தள்ளுவது, இனியும் பேசாமல் இருப்பது, அனைவருக்கும் அவநம்பிக்கையை அளிக்கும் என்று நினைத்தேன். அதனால்தான், மீண்டும் எழுத முடிவு செய்தேன்".  என்று தான் மீண்டும் எழுத முடிவு செய்ததன் பின்னணியை விளக்குகிறார் பெருமாள் முருகன்.

"மாதொருபாகன் சர்ச்சையால் என் மீது வெளிச்சம் பாய்ந்தது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை, என் படைப்பின் மூலமாக அடையாளப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்," என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

 

பூனாச்சி

யார் இந்த பூனாச்சி?

"தன் மக்களை எந்தக் கணத்திலும் எதிரியாகவும் விரோதியாகவும் துரோகியாகவும் ஆக்கிவிடும் வல்லமை படைத்தது ராசாங்கம்" என்ற வரி பூனாச்சி நாவலில் வருகிறது. அதுமட்டுமல்லாமல்,  அரசு என்ற நிறுவனம், அதில் மக்களின் நிலை போன்ற விஷயங்கள் இதில் உட்பொருளாக இருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பூனாச்சி யார்? பெருமாள் முருகன்தானா அது? என்ற கேள்வியை முன் வைத்தபோது, "பூனாச்சி நான் அல்ல. நீங்கள் அரசு, அரசியலுடன் புரிந்துக் கொண்டால், அது உங்கள் புரிதல். எழுத்தாளன் தனது படைப்பை இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. நீங்கள் இவ்வாறாகப் பொருள் விளக்கம் கொள்வது உங்கள் சுதந்திரம்." என்கிறார்.

மேலும், பூனாச்சி குறித்து பெருமாள் முருகன் தனக்கும் தனது நண்பருக்கும் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார், "நான் பூனாச்சியை எழுதி முடித்தவுடன், அதன் கையெழுத்துப் பிரதியை முதலில் என் நண்பருக்குதான் கொடுத்தேன். அதை படித்துபார்த்தவர், இதே கேள்வியைதான் கேட்டார். பூனாச்சி நீங்களா? இதில் ஏழு குட்டிகளை சுமந்த பூனாச்சி கல்லாகிவிடுவதாக விவரிக்கிறீர்கள். நீங்கள் மாதொருபாகன் வரை ஏழு நாவல்களை எழுதி இருக்கிறீர்கள். இது குறியீடா என்று கேட்டார். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை."

"நானும் கூச்ச சுபாவம் உடையவன். 15 வயது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்து திரிந்தவன் போன்ற பூனாச்சியின் தன்மைகள் என்னிடம் இருக்கலாம். ஆனால், பூனாச்சி நானில்லை,"  என்று தெரிவித்தார்.

 

பெருமாள்முருகன்

பட மூலாதாரம்,FACEBOOK/பெருமாள்முருகன்

"எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்"

தொடர்ந்து எழுத்தாளர்கள் இப்போது தாக்கப்படுகிறார்கள்;  கொல்லப்படுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் இது உங்களிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, "ஜனநாயக சமூகத்தில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரவெளி எவ்வளவு விரிவாகிறதோ, அந்த அளவிற்கு ஜனநாயகம் வலுவடையும். எழுத்தாளர்களுக்கான வெளி குறைவது, எழுத்தாளர்களைவிட ஜனநாயகத்திற்குத்தான் ஆபத்து," என்கிறார்.

"சாதாரணம் இங்கு அசாதாரணம் ஆகிறது"

ஒரு பேராசிரியராக உங்களுக்கும்,  மாணவர்களுக்குமான உறவு குறித்து உங்கள் மாணவர்கள் புத்தகம் தொகுத்து இருக்கிறார்கள். அதில் நெகிழ்ச்சியான சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆசிரிய - மாணவ உறவு எப்படி சாத்தியமானது? என்ற கேள்விக்கு, "சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. எல்லா இடத்திலும் சாதியப் பாகுபாடு உள்ளது போல, கல்வி நிலையங்களிலும் உள்ளது. அப்படியான சூழலில், இயல்பான விஷயங்கள் இங்கு அசாதாரண உறவாகக் கருதப்படுகிறது. "முன் இருக்கையில் அமர வைப்பது போன்ற சாதாரண விஷயத்தைதான் நான் செய்தேன். அதைத்தான் அவர்கள் பெரிதாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்," என்கிறார்

"அடுத்த நாவல் என்ன?"

"அடுத்த நாவல் கழிமுகம். நகர வாழ்க்கையில் ஒரு மத்தியதர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் என் அடுத்த நாவலின் பொருள். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. அதற்கு, இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம்," என்று தம் அடுத்த நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டார் பெருமாள்முருகன்.

https://www.bbc.com/tamil/india-43351221

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ....அந்தப் புத்தகம் "மாதொருபாகன்"தான்.......இதைப் படிக்கும்போது தெரிகிறது அவர் ரொம்ப மனசொடிந்து போய் இருக்கிறார்...... எல்லாம் எழுத்தர்களுக்கிடையே இருக்கும் காழ்புணர்ச்சிதான்......ஒரு தரமான எழுத்தாளனை முடமாக்கி வைத்திருக்கிறது........! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.