Jump to content

அறிவியல் சிக்கல்: தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் சிக்கல்: தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தேஜாவூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இன்னும் சிலர் இதை மறுபிறவி என்பார்கள். 1870-களில் 'ஏற்கெனவே பார்த்தது' என்று பொருள்படும்படியாக பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி தேஜாவு என இதற்குப் பெயர் வைத்தவர் எமிலி போயராக். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஞானி.

இவர் பெயர் வைத்தாரே தவிர துல்லியமான விளக்கம் எதையும் கூறவில்லை. அதனால் மறுபிறவி அமானுஷ்யம் என்பது போன்ற பல கற்பிதங்கள் தேஜாவுக்கு கூறப்பட்டு வந்தன. பல ஹாலிவுட் திரைப்படங்கள் முதல் தமிழ்த் திரைப்படங்கள் வரை தேஜாவு பற்றிப் பேசியிருக்கின்றன. ஆனால் அவையும் அறிவியல் ரீதியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல.

உண்மை என்னவென்றால் தேஜாவு என்று கூறப்படும் அந்த உணர்வு பற்றி யாராலும் 100 சதவிகிதம் விளக்கம் தர முடியவில்லை.

ஆனால் உளவியல் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு பல வகையான சாத்தியக்கூறுகளைக் கூறுகின்றனர். மூளை, அதன் நினைவுதிறன், அறிவாற்றல் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையிலான கோட்பாடுகள் அவை.

ஒரு சூழ்நிலையை நாம் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன்பு, நமது மூளை அதை விரைவாகவும் மேம்போக்காகவும் உள்வாங்குகிறது. சிறிது நேரத்தில் நாம் அதை முன்பே பார்த்தது போன்ற ஒரு அதிர்ச்சியைப் பெறலாம். இதை பிளவுபட்ட சிந்தனை என்கிறார்கள்.

 

தேஜாவூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல மற்றொரு கருத்துருவும் உண்டு. மூளையின் அரைக் கோளங்களிலிருந்தும் நமது எண்ணங்கள் டெம்போரல் லோப் எனப்படும் மூளையின் பொட்டு மடல் பகுதிக்குள் நுழைகின்றன. அப்போது ஒன்று மற்றொன்றை விட ஒருசில மில்லி விநாடிகள் தாமதமாகச் செல்கிறது. இந்த தாமதமான தருணத்தில் தான் தேஜாவு ஏற்படுகிறது என்று சில விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.

தேஜாவு பற்றி ஆய்வு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அப்படியொன்று நடப்பது வரை காத்திருக்க முடியாது என்பதுதான் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதே நேரத்தில் டெம்போரல் லோப் பாதிப்பு உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அடிக்கடி தேஜாவு நடப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள்.

2012 இல், ஒரு ஆய்வு மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை வெவ்வேறு முப்பரிமாணச் சூழல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையின் காத்திருப்பு அறை, திரையரங்கம் போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. அந்த நேரத்தில் பலருக்கு தேஜாவு போன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. அதனால் தேஜாவூ என்பது நமது நினைவுடன் தொடர்புடையது என்று அறிய முடிகிறது.

ஆனால் 2014-ஆம் ஆண்டில் நடந்தப்பட்ட மற்றொரு ஆய்வு வேறு மாதிரியான முடிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு 'படுக்கை', 'தலையணை', 'தூக்கம்', 'கனவு' போன்ற சொற்கள் காட்டப்பட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பொதுவான 'தூக்கம்' என்ற சொல் காட்டப்படவே இல்லை.

 

தேஜாவூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலிலேயே ஆங்கில எழுத்து 'எஸ்' இல் தொடங்கும் சொற்கள் ஏதாவது தென்படுகிறதா என்பதைப் பார்த்துக் கூறவும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பலர் அப்படிச் சொல் எதுவும் தோன்றவில்லை என்று உறுதியாகக் கூறினார்கள். ஆனால் தங்களுக்கு தூக்கம் அதாவது 'Sleep' என்ற சொல் காட்டப்பட்டதாக சிலர் கூறினார்கள். இது தேஜாவுவுக்கு சமமான அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. தேஜாவுவின் போது மூளையை ஸ்கேன் செய்த நிபுணர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர்.

அவர்கள் தேஜாவு என்பது மூளையின் நினைவகத்தில் ஏற்படும் பிரச்னையல்ல. மாறாக முன்மூளையில் ஏற்படும் மாற்றம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தப் பகுதிதான் நாம் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தேஜாவு ஏற்படுகிறவர்களுக்கு நினைவாற்றல் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவை எவையும் தேஜாவு பற்றி முழுமையாக விளக்கவில்லை. தேஜாவு என்பது பேரலல் யுனிவெர்ஸ் என்று கூறப்படும் வேறொரு பிரபஞ்சத்துக்குச் செல்லும் வழியாகவும் இருக்கலாம். இல்லையெனில் காலத்தில் ஏற்பட்ட பிளவாக இருக்கலாம். வருங்கால ஆராய்ச்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

https://www.bbc.com/tamil/science-62047029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, உடையார் said:

எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

என்ன உடையார் இதை போய் இவ்வளவு சீரியசா எடுக்கிறியள்?

எனக்கு சின்னதில் இருந்தே இது வரும். அடிக்கடி அல்ல ஆனால் வருடம் 1,2 தரம் வரும்.

நான் கேட்ட பலரும் அப்படித்தான் சொல்லினம்.

அனுபவத்தை எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

அப்ப Denzel Washingtonன் Déjà Vu இரண்டாம் பாகத்திற்கு கதை ரெடியா? 

ஆனாலும் இது ஒரு விளங்காத புதிர்தான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

வெயிட்டிங் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2022 at 13:21, உடையார் said:

எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

 

On 5/7/2022 at 14:09, goshan_che said:

என்ன உடையார் இதை போய் இவ்வளவு சீரியசா எடுக்கிறியள்?

எனக்கு சின்னதில் இருந்தே இது வரும். அடிக்கடி அல்ல ஆனால் வருடம் 1,2 தரம் வரும்.

நான் கேட்ட பலரும் அப்படித்தான் சொல்லினம்.

அனுபவத்தை எழுதவும்.

உடையார், கோசான் போன்றவர்கள்... தங்கள் அனுபவத்தை, 
பகிர வேண்டும் என ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
    • நல்லதொரு விளக்கம். கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது. இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா? நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?
    • அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.