Jump to content

அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன்

அதிகாரத் திமிர் ஒன்று 
இடிந்து விழுந்தது 
இலங்கைத் தீவில் இன்று

இனவாதத்தின் 
இன்னும் ஒரு முகம் 
எரிந்து வீழ்ந்தது 

வீரம் பேசிய கோத்தா 
வீட்டுக்கு போய் விட்டார் 
தோல்வியை சுமந்தபடி

பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று 
போன இடம் தெரியவில்லை
சர்வாதிகார ஆட்சி ஒன்று 
சரிந்து விழுந்திருக்கிறது 

பசியோடு கிடந்தவனுக்கும்
உரிமைக்காய் போராடியவனுக்கும் 
தொலைந்து போன மக்களுக்கும் 
நீதி கிடைத்தது போல் 
இருந்தது இன்றைய நாள்

கூட நின்றவனுக்கும் 
கூடிக் குடிச்சவனுக்கும் 
முண்டு கொடுத்தவனுக்கும் 
போலிச் சோஷலிசக்காரனுக்கும் 
அபிவிருத்தி என்று 
அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் 
திருடர்களுக்கு துரோகிகளுக்கு 
ராஜபக்சே இராச்சியத்தை 
இனி அசைக்க முடியாதென்றவனுக்கும் 
அடி விழுந்திருக்கிறது 
அத்தனை பேர் தலையிலும் இன்று

மாற்றம் ஒன்றே மாறாததென்பதை
இன்று நிரூபித்திருக்கிறார்கள் 
இலங்கை மக்கள்

இனி எல்லோரும் மாற வேண்டும் 
இருண்ட யுகம் கடந்து போகவேண்டும் 
இன மதம் கடந்து  
எல்லோருக்கும் நீதி வேண்டும் 

இருந்து பார்ப்போம் 
இது மாறுமா இல்லை இது தொடருமா
இனியும் இந்த மக்கள் சிந்திப்பார்களா.

பா.உதயன் ✍️
 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.