Jump to content

நாட்டிலிருந்து வெளியேறும் ஜனாதிபதியின் முயற்சிகள் தோல்வி - அமெரிக்க தூதரகமும் விசா வழங்க மறுத்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது

--

DINESHA DILRUKSHI WIJESURIYA, AMAL JAYASINGHE

SBS

 

இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட  15பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன.

9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலைகடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமானநிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார்.

அவர் முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு நேற்று மாலை சென்றார்.

நாட்டின் விமானபடையின் பிரதிநிதியொருவர் ராஜபக்சவும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் யுஎல் 225 விமானம் மூலம்  துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் என உறுதி செய்தார்.

ஆனால் ராஜபக்சவும் அவரது குடும்பத்தவர்கள் குழுவினர் அனைவரும் பண்டாரநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு தங்கள் ஆவணங்களை உறுதி செய்வதற்காக  வந்தனர் என்பதை குடிவரவு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பாதுகாப்;பு தரப்பினர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பொதுமக்களிற்கான பகுதிக்கு செல்வதை தடு;க்கின்றனர் என பொலிஸாரும் விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்களும் இந்த ஊடகத்திற்கு தெரிவித்தனர்.

9ம் திகதி முதல் மிக முக்கிய பிரமுகர்களி;ற்கான  பகுதிகளில் பணியாற்றுவதற்கு குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என எஸ்பிஎஸ் சிங்கள சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் எதிகாட் ஈவை267 விமானநிலையத்தில் ஏற முயன்றனர்,ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அதனை தவறவிட்டனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது என எங்கள் ஊடகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இரவில் தங்கியிருந்த ஜனாதிபதி எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என ஆராய்ந்தனர் என பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவர் உறுதி செய்தார்.

அமெரிக்க விசா மறுப்பு

2019 தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்ட  கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவிற்கு செல்வதற்காக கடந்த வாரம் அமெரிக்க தூதகரத்திடம் விசாவை கோரியுள்ளார்,ஆனால் அந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரஜாவுரிமையை துறந்த ஒருவருக்கு மிகவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளை தவிர விருந்தினர் விசாவைவழங்க முடியாது என தூதரகம் ஜனாதிபதி;க்கு நினைவுபடுத்தியது என தூதரக வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்கள சேவைக்கு தெரிவித்தன.

அவருக்கு விசா வழங்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அவர் நாட்டின் தலைவராக விசா இன்றி செல்ல முடியும் என்பதை நினைவுபடுத்தினோம்ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் வேறுவிதமானவை என தூதரக பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

எனினும் புதிய கடவுச்சீட்டை பெறும் விடயத்தில் அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் இளைய சகோதரருக்கு உதவியது.

நாட்டிலிருந்து வெளியேறும் ஜனாதிபதியின் முயற்சிகள் தோல்வி - அமெரிக்க தூதரகமும் விசா வழங்க மறுத்தது | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார்.

https://www.bbc.co.uk/news/world-asia-62132271

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.