Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு கட்டடங்களை கைப்பற்றுவதல்ல என்பதால் , அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார அவரது முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

287526392_1043168512974494_7958615285071

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

சில தரப்பினர் பாராளுமன்ற வளாகத்திற்கும் , சபாநாயகரின் உத்தியோக இல்ல வளாகத்திற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெருந்திரளானோர் காலி முகத்திடலுக்கு வருகை தருகின்ற அதே சந்தர்ப்பத்தில் , ஏனைய சிலர் அவர்களை வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவை ஆர்ப்பாட்டக்காரர்களினால் அல்லது பொது மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எனினும் தொடர்ந்தும் கட்டடங்களைக் கைப்பற்றுவது ஆர்ப்பாட்டங்களின் இலக்கு அல்ல.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை நிச்சயம் காணப்படுகிறது. ஆனால் பலவந்தமாக கட்டடங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுக்குள் பிரவேசித்தல் போன்றவற்றை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் அவ்வாறானவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து , திட்டமிடலுடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் நாம் அவர்களின் செயற்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இவ்வாறான செயற்பாடுகளை இடை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களது ஆதரவையும் இழக்க நேரிடும்.

எனவே ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் 6 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் உத்தியோகபூர்வ குழுவின் இலக்காகவுள்ளது. இந்நிலையில் சபாநாயகரின் இல்லத்தையும் முற்றுகையிட நடவடிக்கை எடுத்தால் அது பொறுத்தமற்ற செயற்பாடாகும்.

அத்தோடு ஜனாதிபதி பதவி விலகாமல் இருப்பதற்காக சபாநாயகருக்கு அழுத்தம் பிரயோகிப்பது நியாயமற்றதாகும். எனவே வன்முறை கும்பலுடன் இணைந்து எவரும் அவரவர் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 
 

 

https://www.virakesari.lk/article/131436

  • கருத்துக்கள உறவுகள்

பேராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசிக்காமல் விட்டிருந்தால் கோத்தா பதவி விலககுவதாக அறிவித்திருக்கமும் மாட்டார்.நாட்டடைவிட்டு வெளியேறி இருக்கவும்மாட்டார்.ஆனால் அதே வேளை ரணில் இன்னமும் முரண்டுபிடிப்பதுவும் பேராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதும் சந்தேககங்களைக் கிளப்புகிறது.பேராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தைச்சுற்றிவளைப்பதை  சட்டத்தரணிகள் சங்கமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருபகுதியினரும் அமெரிக்காவும் எதிர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளை பேராட்டக்காரர்களில் ஒரபகுதியினர் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைப்பது ருணிலை வரவிடாமல் தடுப்பதற்கு உதவும். ஆனால் இதன் பின்னாலும் வெளிச்சக்திகளின் கைகள் இருப்பது போலத் தெரிகிறது. நாட்டில் இவ்வளவு நடக்க இந்தியா மட்டும் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நாட்டில் இவ்வளவு நடக்க இந்தியா மட்டும் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதா?

இலங்கைப் பிரச்சினை... இந்தியாவிடம் இருந்து... அமெரிக்காவிடம் போய் விட்டது.   

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் குள்ளநரித்தனம் செயற்படத் தொடங்கிவிட்டது போல... 😉

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மாத்திரமே உண்மையானவர்கள், அவர்களுக்கு மாத்திரமே போராடும் உரிமை உள்ளது என்பது இல்லையே. அது பொதுமகன் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. 

காலிமுகத்திடல் போராட்டத்தின் உற்சாகம் புதியவர்களையும், நாடளாவிய ரீதியில் போராடும் புதிய குழுக்களையும் உருவாக்கக்கூடும். 

அதேசமயம் பாராளுமன்றத்தை கைப்பற்றும் போராட்டத்தை முன்னெடுப்பதில் கோத்தா மகிந்த ஆதரளவாளர்களின் பங்களிப்பும் காணப்படலாம். 

இயல்பு நிலையை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படலாம். 

அடிப்படை நிர்வாக கட்டமைப்பு உடைந்தால் மக்களின் நாளாந்த வாழ்க்கை, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.