Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் போலியானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது யாப்பு தமிழில் 

https://www.parliament.lk/files/pdf/constitution-ta.pdf


38. (1) (ஆ)

"அவர், சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் தம்கைப்பட்ட கடிதத்தின் மூலம் தனது பதவியை துறந்தால்" 

என்று சொல்கிறது.

இது முதலில் சொல்லிய (ஆங்கில) சரத்துடன் பெருமளவு ஒத்துபோகிறது.

அனால், நான் முதலில் சொன்னது போல, சிங்களத்தில் எந்த கருத்துப்பட இருக்கிறது என்பதே இறுதியாக தீர்மானிக்கும்.

இந்த பிரச்சனையை வைத்து சிங்களம் யாப்பை திருத்தவேண்டியும் வரலாம், ஏனெனில், சிங்களத்தில் தம்கைப்பட்ட கடிதத்தை (தபால் அல்லது வேறு சேவை வழியாக) அனுப்பி எனும் பொருள்பட இருந்தால், சனாதிபதி எங்கிருந்தும் பதவி துறக்கலாம்.

அனால், யாப்புகளில் மறைமுக (implied) கருத்துக்கள் இருக்கிறது அல்லது வேண்டும் என்றே உருவாக்குவது இருக்கிறது  என்று நினைக்கிறன்.  

உ.ம். சிங்கள பௌத்த அரசு. இது யாப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

அனால், பௌத்தத்திற்கு அதிஉன்னத இடம், சிங்களமொழி மட்டும் உத்தியோகபூர்வம், சனநாயக அடிப்படையில் சிங்களவர் பெரும்பான்மை உருவாக்குவது  சிங்கள பௌத்த மக்களுக்கு இறைமையும், அரசும்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

சொல்ல மறந்து விட்டேன்,  முகவரிப்படுத்தப்பட என்பது அரச கரும சொற்பிரயோகமும் கூட.

https://www.lawteacher.net/free-law-essays/administrative-law/the-rules-behind-statutory-interpretation-administrative-law-essay.php

கடஞ்சா,

நீங்கள் சொல்லியது பல உண்மை என்றாலும், rules of interpretation படி, ஒரு நீதிபதியானவர் எழுத்தில் உள்ள ஒரு சட்டத்தை 4 வேறுபட்ட வகைகளில் வியாக்கியானப்படுத்தலாம். இங்கே நீதிபதி இடத்தில் வருபவர் சபாநாயகர். அவர் சட்டமா அதிபர், பிரதம நீதியரசரரின் ஆலோசனையை பெற்று செயல்படுகிறார் என நினைக்கிறேன்.

evidence ஐ பொறுத்தவரை கோட்டவுடன் தொடர்பு கொண்டு, சிங்கபூர் ஹைகொமிசனில் கடிதத்தை ஒப்படைக்க வைத்து அது உண்மையானதே என உறுதி செய்கிறார்.

intention - கோட்டா ஒன்று மேற்பட்டோருக்கு தேதி சொல்லி, தான் விலக போவதை சொன்னது, நாட்டை நீங்கியது, சொன்னது போலவே கடிதம் அனுப்பியது - அவருக்கு பதவி விலகும் intention கடிதம் இருக்கும் போது இருந்ததை நிறுவுகிறது.

இப்போ நாட்டில் இருக்கும் நிலை (கோட்ட வெளியே இருந்து பதவி விலகியது) அரசியல்சட்டம் எதிர்பாராத நிலை. அப்படி இருக்க கோட்ட நாடு திரும்பும் வரை காத்திருப்பது முடியாத செயல். எனவே  purposive approach ஐ சபாநாயகர் எடுத்து, அதனுடன் பிரதமநீதியரசர், சட்டமாஅதிபர், பாராளுமன்றும் ஓம்பட்டால் அது சட்டபூர்வமானதாகவே கருதப்படும்.

சட்டம் பெரும்பாலான சமயங்களில், இறுக்கமான எழுத்தில் உள்ளதை தொடரும் literal approach எடுக்கும் என்றாலும், களயதார்தத்தை சட்டத்தால் கூட புறம் தள்ளி நடக்க முடியாது. குறிப்பாக அப்படி செயல்படுவது நாட்டை முடக்கும், சட்டத்தை கேலிக்குள்ளாகக்கும், மதிப்பிழக்கவைக்கும் எனும் போது.

இதுவே கோட்டவை இன்னொரு நாடு கடத்தி போய்  வைத்து விலகல் கடிதம் கொடுக்கவைத்தால் -சட்ட வியாக்கியானம் வேறு மாரி இருக்கும்.

பிகு

கட்டுரையை 4 வேறுபட்ட rules of interpretation ஐ விளக்கவே இணைத்தேன். கட்டுரையின் கருத்தை ஆமோதித்து அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

கோட்டா பதவி விலகினால் புதிதாக வரும் அரசு இராஜபக்ஸ குடும்பத்தின் மீது ஊழல் விசாரணை மேற்கொள்ளாதா?

ராஜ பக்சக்கள் அவசரமாக, முறையற்ற விதத்தில் ஆட்சியை கைப்பற்றியதன் நோக்கமே; நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசு தங்களது ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, மக்களிடம் உள்ள தங்களது செல்வாக்கு சரிந்துவிடும், தாம் சிறை செல்ல நேரிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அதை தடுக்கவே அவசரமாக, தனக்கு ஜனாதிபதியாகும் தகுதி இருக்கா என்பதைக்கூட யோசியாமல், பதவியை பிடித்து இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால் தர்மம் காத்திருந்து, எந்த அதிகாரத்தை வைத்து அடக்க நினைத்தார்களோ அந்த அதிகாரத்தை வைத்தே அவர்களை வளைத்து பிடித்தது.

 

3 hours ago, vasee said:

இலங்கையிலிருந்து கொண்டு ஆட்சியிலிருந்து விலகினால் சிக்கலாக இருக்காதா?

கண்டிப்பாக! அதனாற்தான் தாம் தங்குவதற்கு இடம் தேடி அலைகிறார். நாட்டில்  இருந்தால் பதவியை வைத்து, இராணுவத்தின் மூலம் பாதுகாப்பை பெறலாம் என நினைக்கலாம், ஆனால் அது இனி வருங்காலத்தில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. ஆனால் பதவி விலகி நாட்டில் இனி இவர்கள் நிம்மதியாக, வசதியாக வாழ முடியாது. வெளி நாடுகளிலும் பழைய செல்வாக்கு கிடைக்காது. இனி இவர்கள் எங்கு போனாலும் இவர்கள் செய்த பழி துரத்திக்கொண்டே இருக்கும். இவர்கள் சுரண்டிய பணமும் இனி வருங்காலத்தில் இவர்களை காப்பாற்றப்போவதில்லை, அதுவே இவர்களுக்கு கைவிலங்காக மாறலாம்.

 

3 hours ago, vasee said:

கோத்தாவும் ஆட்சியில் தொடர்ந்திருந்தால்  மக்கள் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டால் இராணுவத்தின் உதவியினூடு இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தினால் கோத்தா தொடர்ந்து அதிகாரத்திலிருக்கலாம்

  இனிமேல் இராணுவம் கைகொடுக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படி முடிந்திருந்தால் கோத்தா நாட்டை விட்டு வெளியேறியிருக்கமாட்டார். அப்படி இராணுவ ஆட்சி வந்தாலும் அது கோதாவுக்கே ஆபத்தாக மாறும். எனக்கென்னவோ அவரை எந்த நாடும் ஏற்காமல் மீண்டும் சொந்த நாட்டுக்கே  திரும்பி வரலாமென தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு தான் பதவி விலகும் அதிகாரம் கூடவா இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

அப்படி இராணுவ ஆட்சி வந்தாலும் அது கோதாவுக்கே ஆபத்தாக மாறும். எனக்கென்னவோ அவரை எந்த நாடும் ஏற்காமல் மீண்டும் சொந்த நாட்டுக்கே  திரும்பி வரலாமென தோன்றுகிறது.

ஒரு பேராசைதான், சிங்களமக்களுக்கும் தமது இராணுவத்தினரை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அதனால் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

கோட்டா பதவி விலகினால் புதிதாக வரும் அரசு இராஜபக்ஸ குடும்பத்தின் மீது ஊழல் விசாரணை மேற்கொள்ளாதா?

ராஜ பக்சக்கள் அவசரமாக, முறையற்ற விதத்தில் ஆட்சியை கைப்பற்றியதன் நோக்கமே; நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசு தங்களது ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, மக்களிடம் உள்ள தங்களது செல்வாக்கு சரிந்துவிடும், தாம் சிறை செல்ல நேரிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அதை தடுக்கவே அவசரமாக, தனக்கு ஜனாதிபதியாகும் தகுதி இருக்கா என்பதைக்கூட யோசியாமல், பதவியை பிடித்து இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள். முன்பு நிதியமைச்சராக பதவி  வகித்தவர் சொல்லியிருந்தாரே; கடந்த அரசு கோத்தபாயாவை கைது செய்வதை தான்தான் தடுத்ததாக, அவரே பின்னர் கோத்தபாயாவால் பதவி விலக்கப்பட்டவர். ஆனால் தர்மம் காத்திருந்து, எந்த அதிகாரத்தை வைத்து அடக்க நினைத்தார்களோ அந்த அதிகாரத்தை வைத்தே அவர்களை வளைத்து பிடித்தது.

 

3 hours ago, vasee said:

இலங்கையிலிருந்து கொண்டு ஆட்சியிலிருந்து விலகினால் சிக்கலாக இருக்காதா?

கண்டிப்பாக! அதனாற்தான் தாம் தங்குவதற்கு இடம் தேடி அலைகிறார். நாட்டில்  இருந்தால் பதவியை வைத்து, இராணுவத்தின் மூலம் பாதுகாப்பை பெறலாம் என நினைக்கலாம், ஆனால் அது இனி வருங்காலத்தில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. ஆனால் பதவி விலகி நாட்டில் இனி இவர்கள் நிம்மதியாக, வசதியாக வாழ முடியாது. வெளி நாடுகளிலும் பழைய செல்வாக்கு கிடைக்காது. இனி இவர்கள் எங்கு போனாலும் இவர்கள் செய்த பழி துரத்திக்கொண்டே இருக்கும். இவர்கள் சுரண்டிய பணமும் இனி வருங்காலத்தில் இவர்களை காப்பாற்றப்போவதில்லை, அதுவே இவர்களுக்கு கைவிலங்காக மாறலாம். இவர்களால் வெளிநாடுகளில் வைப்பிலிட்ட பணம் முடக்கப்படும் வாய்ப்புமுள்ளது. 

 

3 hours ago, vasee said:

கோத்தாவும் ஆட்சியில் தொடர்ந்திருந்தால்  மக்கள் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டால் இராணுவத்தின் உதவியினூடு இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தினால் கோத்தா தொடர்ந்து அதிகாரத்திலிருக்கலாம்

  இனிமேல் இராணுவம் கைகொடுக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படி முடிந்திருந்தால் கோத்தா நாட்டை விட்டு வெளியேறியிருக்கமாட்டார். அப்படி இராணுவ ஆட்சி வந்தாலும் அது கோத்தாவுக்கே ஆபத்தாக மாறும். எனக்கென்னவோ அவரை எந்த நாடும் ஏற்காமல் மீண்டும் சொந்த நாட்டுக்கே  திரும்பி வரலாமென தோன்றுகிறது.

3 hours ago, vasee said:

கோட்டா பதவி விலகினால் புதிதாக வரும் அரசு இராஜபக்ஸ குடும்பத்தின் மீது ஊழல் விசாரணை மேற்கொள்ளாதா?

ராஜ பக்சக்கள் அவசரமாக, முறையற்ற விதத்தில் ஆட்சியை கைப்பற்றியதன் நோக்கமே; நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசு தங்களது ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, மக்களிடம் உள்ள தங்களது செல்வாக்கு சரிந்துவிடும், தாம் சிறை செல்ல நேரிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அதை தடுக்கவே அவசரமாக, தனக்கு ஜனாதிபதியாகும் தகுதி இருக்கா என்பதைக்கூட யோசியாமல், பதவியை பிடித்து இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்தார்கள். முன்பு நிதியமைச்சராக பதவி  வகித்தவர் சொல்லியிருந்தாரே; கடந்த அரசு கோத்தபாயாவை கைது செய்வதை தான்தான் தடுத்ததாக, அவரே பின்னர் கோத்தபாயாவால் பதவி விலக்கப்பட்டவர். ஆனால் தர்மம் காத்திருந்து, எந்த அதிகாரத்தை வைத்து அடக்க நினைத்தார்களோ அந்த அதிகாரத்தை வைத்தே அவர்களை வளைத்து பிடித்தது.

 

3 hours ago, vasee said:

இலங்கையிலிருந்து கொண்டு ஆட்சியிலிருந்து விலகினால் சிக்கலாக இருக்காதா?

கண்டிப்பாக! அதனாற்தான் தாம் தங்குவதற்கு இடம் தேடி அலைகிறார். நாட்டில்  இருந்தால் பதவியை வைத்து, இராணுவத்தின் மூலம் பாதுகாப்பை பெறலாம் என நினைக்கலாம், ஆனால் அது இனி வருங்காலத்தில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. ஆனால் பதவி விலகி நாட்டில் இனி இவர்கள் நிம்மதியாக, வசதியாக வாழ முடியாது. வெளி நாடுகளிலும் பழைய செல்வாக்கு கிடைக்காது. இனி இவர்கள் எங்கு போனாலும் இவர்கள் செய்த பழி துரத்திக்கொண்டே இருக்கும். இவர்கள் சுரண்டிய பணமும் இனி வருங்காலத்தில் இவர்களை காப்பாற்றப்போவதில்லை, அதுவே இவர்களுக்கு கைவிலங்காக மாறலாம். இவர்களால் வெளிநாடுகளில் வைப்பிலிட்ட பணம் முடக்கப்படும் வாய்ப்புமுள்ளது. 

 

3 hours ago, vasee said:

கோத்தாவும் ஆட்சியில் தொடர்ந்திருந்தால்  மக்கள் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டால் இராணுவத்தின் உதவியினூடு இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தினால் கோத்தா தொடர்ந்து அதிகாரத்திலிருக்கலாம்

  இனிமேல் இராணுவம் கைகொடுக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படி முடிந்திருந்தால் கோத்தா நாட்டை விட்டு வெளியேறியிருக்கமாட்டார். அப்படி இராணுவ ஆட்சி வந்தாலும் அது கோத்தாவுக்கே ஆபத்தாக மாறும். எனக்கென்னவோ அவரை எந்த நாடும் ஏற்காமல் மீண்டும் சொந்த நாட்டுக்கே  திரும்பி வரலாமென தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.