Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்தினார்.

இருப்பினும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அவதானம் செலுத்த வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியறுத்தினார். (நன்றி கேசரி)

https://athavannews.com/2022/1295488

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பில் விசேட கவனம்

முன்னாள் ஜனாதிபதிக்கான... பாதுகாப்பில், விசேட கவனம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2022/1295473

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

அப்போ வெளிநாட்டு உதவிகள் ????

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு இவ்வளவு எடுப்பு. என்னத்தை சாதிச்சு கிழிச்சாருன்னு. பேசாமல்.. ஏதாவது ஒரு ஆமி காம்பில்.. அல்லது நேவி காம்பில் விட்டாப்போச்சு. அங்கிருந்து இனவாதம் பேசியே கடைசிக் காலத்தை கழிச்சிடலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அப்போ வெளிநாட்டு உதவிகள் ????

போராட்டக்காரர்களின்  தேவை வரும் என்று தான்...  அவர்களை முற்றாக ஒடுக்காமல், 
விகாரமாதேவி பூங்காவில் போராடச் சொல்லி ஒதுக்குப் புறமாக ரணில் வைத்திருக்கிறார்.

கோத்தா வந்து தனக்கு... எதிராக ஏதாவது செய்ய முற்பட்டால்...
போராட்டக் காரர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்.

அரசியல் வாதிகளை சாதாரணமாக எடை போடக் கூடாது.
தமது பதவியை காப்பாற்ற, எந்த எல்லையையும் தொட்டு, நியாயம் கற்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாதுகாப்புப்படை நரியின் அதிகாரத்தில். தேவையேற்பட்டால், கோத்தாவை கைது செய்து அடைக்கவும் தயங்க மாட்டார்.  கேள்விகேட்க யாரும் முன்வரமாட்டார்கள், கேட்ப்பவர்களையும் அடைப்பார்.. எல்லாம் அவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

இப்போ பாதுகாப்புப்படை நரியின் அதிகாரத்தில். தேவையேற்பட்டால், கோத்தாவை கைது செய்து அடைக்கவும் தயங்க மாட்டார்.  கேள்விகேட்க யாரும் முன்வரமாட்டார்கள், கேட்ப்பவர்களையும் அடைப்பார்.. எல்லாம் அவர்களிடம் இருந்து பெற்ற பயிற்சியே!

ஓம்.... மகிந்த கட்சியும், தனது ஆதரவில் தானே இவர்  வந்தவர் என்று,
பாராளுமன்றத்தில், அதிக ஆட்டம்  போட முடியாது.
துருப்பு சீட்டு இவர் கையில் உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை.

சிங்களத்தால் சிங்கள மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் தலைவனுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு எதற்கு? 😎

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

சிங்களத்தால் சிங்கள மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் தலைவனுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு எதற்கு? 😎

அவர்கள் தேர்ந்தெடுத்த படியாற்தான் அவர்களால் அவரை விரட்டமுடிந்தது, அப்போ திரும்பி வரும்போது எட்டடுக்கு பாதுகாப்பு வேண்டுமோ வேண்டாமோ? இதுவே தமிழர் எதிர்ப்பு தெரிவித்தால் ஓரடுக்கே அதிகம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று!

இலங்கை வரும் கோட்டா? மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு !

மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக இல்லம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் அவரது வருகை அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் அரசியல் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் நாட்டுக்கு வருகைதரும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1295589

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

முன்னாள் ஜனாதிபதிக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

   சொல்லாமல், கொள்ளாமல் ஓடிப்போய் வெளிநாட்டிலிருந்து ராஜினாமா செய்தவருக்கு எதுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு? உதெல்லாம் அவரை கைது செய்வதை தடுக்கும் உத்தி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

   சொல்லாமல், கொள்ளாமல் ஓடிப்போய் வெளிநாட்டிலிருந்து ராஜினாமா செய்தவருக்கு எதுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு? உதெல்லாம் அவரை கைது செய்வதை தடுக்கும் உத்தி!

May be a cartoon of one or more people

கோட்டா.. திரும்பி வர, ரணிலுக்கு... உதறல் எடுக்குது.
நரி... எப்பிடி, வெட்டி ஆடுது என்று பார்ப்போம்.  😂 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.