Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர்

 

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,

விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் மேலும் தெரிவித்தார்.

"ரணில் ராஜபக்ஸ" ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார். 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரஜபகஸவ-வட-ரணல-ரஜபகஸ-மகவம-ஆபததனவர/175-302667

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர்

ஹிருணிகாவுக்கு… குசும்பு கூடிப் போச்சுது. கள்ளி…  😂 🤣

ஐயையோ… மருதர், கோவிக்கப் போறார். 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

"ரணில் ராஜபக்ஸ" ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார். 

தெரிந்தபடியால் வெளிப்படையாக கூறுகின்றார்.😁

  • கருத்துக்கள உறவுகள்

எவன் தீர்க்கதரிசி?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஞானாக்கவிமூலம்..கோட்டா ரணில்மீது உருக்கொண்டுள்ளார்...அப்ப யாருடைய ஆட்😆சி நடக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்ட பின், பொன்சேகாவை சிங்களமக்கள் பாராட்டினர். அதனை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, பொன்சேகாவை ஓரங்கட்டத் தொடங்கினார். தாங்கமுடியாத பொன்சேகாவை எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிறுத்தின. நம்ம ஆக்களும் பொன்சேகாவை ஆதரியுங்கள் என்று மக்களை தூண்டி அவருக்கு அதிக வாக்குகள் சேர்ந்தன. மஹிந்த தேசப்பிரிய தேர்தல் முறைகேடுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகளும், பொன்சேகாவும் ஓரிடத்தில் கூடியிருந்து தேர்தல் முடிவுகளை கேட்டுக்கொண்டிருந்தனர். பொன்சேகாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது தான் தோற்றால் தனக்கு என்ன நிகழுமென்பது, அதனால் அவர் அமெரிக்காவுக்கு செலவதற்கும் ஆயத்தமாக இருந்தார்.  அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர முதல், பொன்சேகாவுக்கு கீழ் நிலை அதிகாரியாக இருந்தவர், பழைய கோபம் இவருக்கு அவர்மேல் உண்டு, வந்து அங்கு இருந்த பொன்சேகாவை அடித்து இழுத்து சென்றபோது, படிக்கட்டில்  அவரின் கால்கள் ஒரு முனையில் அடிபட்டு மறுமுனையில் மோதியதாம். இதைப்பார்த்து அதிர்ந்த கூடியிருந்த எதிர்க்கட்சிகள் அவரோடு தொடர்பு வைத்திருப்பதை நிறுத்திக்கொண்டனர், அதில் இந்த நரியாரும் ஒருவர்! அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மகிந்த தேசப்பிரிய அப்படி ஒரு தேர்தல் முறைகேடும் நடக்கவில்லை என்று அறிக்கை விட்டார். கிழக்கு மாகாண போர் நடவடிக்கை மேற்கொண்ட தளபதியை இந்தக்கூத்தா பழிவாங்கி, அவரது பாதுகாப்பை குறைத்தபோது அவர் நீதிமன்றம் சென்று குறைந்தளவு பாதுகாப்பை பெற்றுக்கொண்டபோது, சரத் பொன்சேகா உஷாராகியிருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. மங்கள ஓடியோடி புலிகளுக்கெதிராக தடைகளை பெற்று வெற்றிகண்டபின் இந்த ஊத்தைக் கோத்தாவால் தூக்கி எறியப்படும்போது யோசித்திருந்தால் இந்த நிலை வந்திராது. அந்த மங்களவும் நரியோடேயே வந்து ஒண்டிக்கொண்டார். மற்றவர் கஷ்ரப்பட்டு சேர்க்கும் பணம், பதவி, புகழ், அதிகாரம் எல்லாம் தமக்காக்கிக்கொள்ளும் பேராசை கொண்டது இந்த பக்க்ஷா  கூட்டம். நல்லாட்சி அமைந்தபோது பக்க்ஷாக்கள் தாம் விதைத்ததை அறுக்க அஞ்சி ஒடுங்கியிருந்தபோது ஓடோடி சென்று பாதுகாப்பாய் அனுப்பிவைத்தது இந்த நரி. நந்தசேன என்று விளித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  எப்படி எச்சரித்தார் இந்த கோத்தா என்பதையும் நரியறியும். கத்தியின்றி, சத்தமின்றி, போராட்டமின்றி, தேர்தலின்றி ஆட்சியை பிடித்த நரி எவ்வளவு பொறுமை, அவமானம் காத்து வந்ததென்றால் அதனுடைய அனுபவம், தான் பெற்றதிலும் அதிகமாகவே இருக்கும் திப்பிக்கொடுக்கும்போது! அவரவர் செயற்பாடுகள், அவரவர் வெளியிடும் வார்த்தைகள் அவர்களுக்கான தீர்ப்பை வழங்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.