Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு-

” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தை நாம் சபையில் சமர்ப்பித்துள்ளோம்.

இன்று நாம் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடியின் ஆழம் தொடர்பாக நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனினும், இதுதொடர்பாக இன்னும் சிலருக்கு தெளிவில்லாமல் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு பின்னோக்கி நகர்வதாக பலரும் இன்று கூறுகிறார்கள்.

தூரநோக்கில்லாத பொருளாதாரக் கொள்கையினால் தான் நாடு இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
மக்கள் அனைத்தையும் அரசாங்த்திடமிருந்தே எதிர்ப்பார்க்கிறார்கள்.

அரசாங்கமானது கொள்கைகளை வகுக்க வேண்டுமே ஒழிய வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என ஜே.வி.பியின் உறுப்பினரான சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். இது உண்மையில் வரவேற்றக்கத்தக்கதாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான எமது பேச்சுக்கள் வெற்றியடைந்து இறுதிக்கட்டத்தில் உள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்துள்ளோம். எரிபொருள்- எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடிகின்றது.

ஆனால், இவற்றையிட்டு நாம் திருப்தியடைய முடியாது.

எமக்கான நிலையான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியமாகும். 2023 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டமானது பூகோல பொருளாதாரத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதனை இலக்காகக் கொண்டே இந்த இடைக்கால வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

தனியார் துறைகளையும் இதனை பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவை அரச வங்கிகளில் பெறும் கடன்களைப் பெற்றே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை உள்ளிட்ட 50 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி மற்றும் பணம் அச்சிடுதல் குறித்து புதிய சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்.

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மின்சார வசதியில்லாத பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் சமுர்த்தி பயனாளர்கள், முதியோர் கொடுப்பனவைப் பெறுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபாவை வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மலையகத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு புகையிரதத்தின் ஊடாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை குருநாகலில் நிறுவுவதற்கு முன்மொழியப்படுகிறது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அவற்றின் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்ட ஒழுங்குமுறைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் மாதம் முதல் நாட்டின் சுற்றுலாத்துறையை பலப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

2023 ஆண்டு இறுதியில் ஒரு வருடத்திற்கு நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சமாக உயர்த்துவதே இதன் இலக்காகும்.

கொரோனா தொற்றினால் தொழிலை இழந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சியை வழங்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தின் போது உரத்தின் விலை குறைவடையும். இதன் ஊடாக அரசியை சாதாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

அத்தோடு, நாட்டில் சுமார் 61,000 குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளன. அவற்றுக்கு சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணங்கள் வழங்கப்படும்.

எதிர்க்காலத்தில் எரிபொருளை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட உரப்பிரச்சினை மற்றும் கிருமிநாசினி பிரச்சினைக்கு மத்தியில் எக்டயார் 2 அல்லது அதிலும் குறைவாக நெல் பயிர்செய்கை செய்ய அரச வங்கிகளில் விவசாயிகளால் கடன் பெறப்பட்டுள்ளது.

2022 ஆண்டு, மே 30 ஆம் திகதிவரை 28, 259 விவசாயிகள் இவ்வாறு கடன் பெற்றுள்ளனர்.

விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கிணங்க, விவசாயிகளால் அரச வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள 680 மில்லியன் ரூபாய் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்யப்படும்.

தள்ளுபடி செய்யப்பட்ட இந்த தொகையானது, திரைச்சேறியின் ஊடாக இரண்டு வருட தவனைகளுக்கு குறித்த வங்கிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், இந்த தொகைக்கான வட்டியை குறித்த வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்காக 350 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கியுள்ளோம்.

தேசிய பால் உற்பத்தியை நாம் இன்னமும் பலப்படுத்த வேண்டும். இதற்கான தேசிய வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படும்.

இதன் ஊடாக முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் சுற்றுலாத்துறையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிங்கள- தமிழ்- முஸ்லிம்- பறங்கியர் என அனைவரையும் இதில் இணைக்க முடியும் என நாம் நம்புகிறோம்.
பொருளாதாரம் பலமில்லாத ஒரு சமூ

த்தில் இனியும் எம்மால் வாழ முடியாது. இன்னமும் கடன் சுமையுடன் வாழும் சமூகமாகவும் இருக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தினால்தான் சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையவில்லை என்று சில அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியாக நான், ஒரு தனி மனிதராக கொள்கைகளை வகுக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்துதான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
எனவே, விரும்பமில்லாத கொள்கைகள் இருப்பின் எம்முடன் இணைந்து அதனை மாற்றியமைக்குமாறு கட்சிகளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தனிப்பட்ட அரசியல் கொள்கைகளை விடுத்து நாட்டுக்கான ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும். இதனை தவற விட்டால் நாம் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

உலகத்துடன் ஒன்றிணைந்து வேகமாக முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம்- என்றார்.

https://athavannews.com/2022/1296780

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பாராளுமன்றில் மட்டும் இது செல்லாது🤪

7 minutes ago, Nathamuni said:

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

இவர்கள் ஏதோ வேலையாவது செய்கிறார்கள். ஒவ்வொரு உதவி அரச அதிபர் பிரிவிலும் ஐந்து டெவலெப்மெண்டு ஒவிசர் எண்டு கிரஜ்ஜுவேட் பாடிகள் சிலதை வைத்கிருக்கினம் பாருங்கோ….

அவை சும்மா சேர்ட்… டை..ட்வுசர்…சப்பாத்து போட்டு போய் ஓபிசில இருந்து வாட்சப் பாக்கிறதுதான் வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில், 'ஜறாவ'என்று

ஆர் யு சுவர்? ஜராவ வேறை எல்லோ? (💩)?

மாமூலை - பந்தங், கப்பங், கொமிஸ், உதவுவக், ஹெல்பெகெக், பொடி சப்பொர்ட்டெகெக், இப்படித்தானே சொல்லுறது?

நான் கேள்விபடமாமலும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பாராளுமன்றில் மட்டும் இது செல்லாது🤪

Medamulana Mahinda" and the Political Rise Of "Ruhunu Rajapaksas" - DBS  Jeyaraj Column | Daily Mirror

முதலில்.... அங்கு  இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ராஜபக்சவின் ... கடைக்குட்டி, பசில் ராஜபக்சவுக்கே.. 72 வயது.
அப்ப மூத்த மூன்று பேருக்கும்... எத்தினை வயது இருக்கும் என்று, 
நீங்களே... கணக்கு பார்த்துக் கொள்ளுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

கடைக்குட்டி, பசில் ராஜபக்சவுக்கே.. 72 வயது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 72 வயசெண்டாலும் தம்பி தம்பிதானே🤣.

நீங்கள் சட்டம் கொண்டு வரும் நரியாரை விட்டுட்டியள். ஆளுக்கு ஒரு டிரவுசரும் இடுப்புல நிக்குதில்ல - அந்தளவுக்கு உடம்பு மெலிஞ்சு போச்சு.

பிறகு எங்கட கெளரவ திருமலை நாடாளுமன்ற உறுப்பினர்….

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. 72 வயசெண்டாலும் தம்பி தம்பிதானே🤣.

நீங்கள் சட்டம் கொண்டு வரும் நரியாரை விட்டுட்டியள். ஆளுக்கு ஒரு டிரவுசரும் இடுப்புல நிக்குதில்ல - அந்தளவுக்கு உடம்பு மெலிஞ்சு போச்சு.

பிறகு எங்கட கெளரவ திருமலை நாடாளுமன்ற உறுப்பினர்….

"கபுடாஸ்" கதை... மெல்ல, மெல்ல மறந்து கொண்டு போக...
நீங்கள், "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" மீண்டும் கிளறிப்  போட்டியள். 🤣

ஒரு நாளைக்கு... ரணிலின் கால் சட்டை, நழுவி விழும் போலதான்   இருக்கு.
எதுக்கும்... நல்ல, "ஜொக்கா" போட்டுக் கொண்டு திரியச் சொல்லுங்கோ.
ஸ்ரீலங்காவின்  இரண்டாவது  ஜனாதிபதியும், "ஜொக்கா" போடாமல் திரிந்தால், நல்லாய் இராது. 😂

நம்மடை...  திருமலை  கோமான்தான், 
இருக்கிற ஆட்களிலேயே வயது கூடினவர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

"கபுடாஸ்" கதை... மெல்ல, மெல்ல மறந்து கொண்டு போக...
நீங்கள், "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" மீண்டும் கிளறிப்  போட்டியள். 🤣

ஒரு நாளைக்கு... ரணிலின் கால் சட்டை, நழுவி விழும் போலதான்   இருக்கு.
எதுக்கும்... நல்ல, "ஜொக்கா" போட்டுக் கொண்டு திரியச் சொல்லுங்கோ.
ஸ்ரீலங்காவின்  இரண்டாவது  ஜனாதிபதியும், "ஜொக்கா" போடாமல் திரிந்தால், நல்லாய் இராது. 😂

நம்மடை...  திருமலை  கோமான்தான், 
இருக்கிற ஆட்களிலேயே வயது கூடினவர் என நினைக்கின்றேன்.

🤣 அண்ண ஒரு கேள்வி,

எங்கட பழைய ஆக்கள் எல்லாருக்கும் இரும்பு மனிதன், அடலேறு, அடங்காத்தமிழன், கோப்பாய் கோமகன் இப்படி இராணி காமிக்ஸ் கதாபாத்திரங்கள் போல பட்டம் கொடுப்பது வழமை🤣

ஐயாவை மட்டும் ஏன் மொட்டையா விட்டவங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

🤣 அண்ண ஒரு கேள்வி,

எங்கட பழைய ஆக்கள் எல்லாருக்கும் இரும்பு மனிதன், அடலேறு, அடங்காத்தமிழன், கோப்பாய் கோமகன் இப்படி இராணி காமிக்ஸ் கதாபாத்திரங்கள் போல பட்டம் கொடுப்பது வழமை🤣

ஐயாவை மட்டும் ஏன் மொட்டையா விட்டவங்கள்?

அவர், ஒரு பட்டத்துக்கும் தகுதி இல்லாதவர் என்பது தான்... உண்மை. 😧

வேணுமென்றால்... கம்பன் கழகத்திடம் சொன்னால், 
ஐரோப்பிய தமிழன் என்று கொடுத்த மாதிரி ஏதாவது...  கொடுத்து விடுவார்கள். 😜
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அவர், ஒரு பட்டத்துக்கும் தகுதி இல்லாதவர் என்பது தான்... உண்மை. 😧

ஏன் இல்லாமல்.

phone ஓவ் பண்ணிய பெருமகன்.

தீபாவளிக்குள் தீர்வு தந்த திருமகன்.

சிங்ககொடிச் செம்மல்.

இப்படி ஏதாவது கொடுக்கலாமே😆.

3 minutes ago, தமிழ் சிறி said:

வேணுமென்றால்... கம்பன் கழகத்திடம் சொன்னால், 
ஐரோப்பிய தமிழன் என்று கொடுத்த மாதிரி ஏதாவது...  கொடுத்து விடுவார்கள். 😜

சும்மா இருங்கோ….

உப்பிடித்தான் நெடுக்ஸ் ஒரு வசனம் சொல்ல, நான் அதை வச்சு ஜோக்கடிக்க…..

….கடைசில 4 பக்கம் HMRC காரனை விட கரிசனையா எழுதி முடிச்சது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஏன் இல்லாமல்.

phone ஓவ் பண்ணிய பெருமகன்.

தீபாவளிக்குள் தீர்வு தந்த திருமகன்.

சிங்ககொடிச் செம்மல்.

இப்படி ஏதாவது கொடுக்கலாமே😆.

அப்படியானவற்றை நிறைய குடுக்கலாம்,
அவர், விரும்பி வாங்க வேணுமே... 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆர் யு சுவர்? ஜராவ வேறை எல்லோ? (💩)?

மாமூலை - பந்தங், கப்பங், கொமிஸ், உதவுவக், ஹெல்பெகெக், பொடி சப்பொர்ட்டெகெக், இப்படித்தானே சொல்லுறது?

நான் கேள்விபடமாமலும் இருக்கலாம்.

கேட்போர், 'கவுரவமாக' சொல்வது 'பொடி சப்போர்ட் எக்கக் தென்ன' (சின்ன, ஆதரவு ஒன்று தாங்கோ).

அலுவலகத்துக்கு வெளியே, காத்திருப்போர், வேலை முடித்து வெளியே வருபவர்களிடம் கேட்பது, ''ஜராவ துன்னத'? (லஞ்சம் கொடுத்தீர்களா)

கொடுத்தோர் 'கவுரவமாக' சொல்வது 'ஜராவ துன்னா'. (கொடுத்து துளைத்தேன்)

முகத்தை பார்த்து, வாங்குபவரா, இல்லையா என்று சொல்லும் அளவுக்கு, அனுபவம் உண்டு 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கேட்போர், 'கவுரவமாக' சொல்வது 'பொடி சப்போர்ட் எக்கக் தென்ன' (சின்ன, ஆதரவு ஒன்று தாங்கோ).

அலுவலகத்துக்கு வெளியே, காத்திருப்போர், வேலை முடித்து வெளியே வருபவர்களிடம் கேட்பது, ''ஜராவ துன்னத'? (லஞ்சம் கொடுத்தீர்களா)

கொடுத்தோர் 'கவுரவமாக' சொல்வது 'ஜராவ துன்னா'. (கொடுத்து துளைத்தேன்)

முகத்தை பார்த்து, வாங்குபவரா, இல்லையா என்று சொல்லும் அளவுக்கு, அனுபவம் உண்டு 😁

பொஹோமஸ் ஸ்தூதி🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் அரச சேவைக்காக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

மின்சார வாகனங்களைத்தான் ஜனாதிபதி இலத்திரனியல் வாகனமென்று சொல்கிறாரோ !!!

 

14 hours ago, தமிழ் சிறி said:

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட இலங்கையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக 60 வயதைக் கடந்தவர்கள் எத்தனைபேர். இவர்களுக்கும் நிரந்தர ஓய்வு வழங்கப்பட்டு அவர்களையும் வீட்டுக்கு அனுப்பணுமா? இல்லையா? 

14 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள- தமிழ்- முஸ்லிம்- பறங்கியர் என அனைவரையும் இதில் இணைக்க முடியும் என நாம் நம்புகிறோம். ...... 

நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

மற்றைய சந்தர்ப்பங்களில் இனவாதத்தை கையில் எடுத்து சிங்களவர் அல்லாதவர்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படும். 

 

14 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதாரம் பலமில்லாத ஒரு சமூகத்தில் இனியும் எம்மால் வாழ முடியாது. இன்னமும் கடன் சுமையுடன் வாழும் சமூகமாகவும் இருக்க முடியாது.

இப்படியான ஒரு நிலைமை வரக் காரணமானவர்களை தண்டிக்கவும் நாட்டின் திறைசேரியை கொள்ளையடித்தவர்களை இனங்காட்டி களவாடப்பட்ட நிதியை மீட்டுக்கொண்டுவர என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஆட்சியாளர்களின் பிழைகள் தட்டிக் கேட்கப்படவேண்டும். இல்லாவிடின் அது மீண்டும் நிகழ சந்தர்ப்பம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ஒரு சாரதி அனுமதிப்பத்திரம்.

போர்ம் கொடுக்க ஒருவர், நிரப்பி கொடுத்ததை சரி பார்த்து, அதனை, வேறு மேசையில் இருக்கும் ஒருவர், மேலே இனிசல் போட்டு, அதனை இனொரு மேசையில் இருக்கும் ஒருவரிடம் பாரம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் இடையே, சிங்களத்தில், 'ஜறாவ'என்று அழைக்கப்படும் லஞ்சம், மாமூலுக்கான சிக்னல் கொடுக்க ஒரு பீயோன்.

கொடுத்த போர்ம், கம்ப்யூட்டரில் போட ஒருவர். அதனை process செய்ய இன்னுமொருவர்.

படத்தினை ஸ்கேன் செய்ய ஒருவர். கொடுத்த, பாஸ் சான்றிதல்களை செக் பண்ண ஒருவர்.

பிளாஸ்டிக் காட்டில் பிரிண்ட் செய்ய ஒருவர்.

அதனை கொண்டு வந்து தர ஒருவர்.

ஆக, இலங்கை அரச திணைக்களங்களில் அளவுக்கு அதிகமாக ஊழியர்கள். 😭

ஆசிய நாடுகளுக்கு பொருந்தகூடிய வகையில்தான் பகிடி சீன் வைக்கினம் தோழர்..👍

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.