Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் தலைமையில் நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளது - நிமல் சிறிபால டி சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் தலைமையில் நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளது - நிமல் சிறிபால டி சில்வா

By DIGITAL DESK 5

31 AUG, 2022 | 05:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

 

 

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களால் நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளதுடன் அவரது வேலைத் திட்டங்கள் சிறந்த பிரதிபலனை வழங்கி வருகின்றது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (31 ) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நான் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை ஆலோசனை வழங்கினேன். 

எனினும் அவர் அதை ஏற்கவில்லை. பின்னர் ரணில் விக்ரமசிங்க சவால்மிக்க அந்த பொறுப்பை ஏற்று தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.

மிக நெருக்கடியான ஒரு சூழ்நிலையில்   அவர் சிறப்பாக தமது பொறுப்பை முன்னெடுத்து வருகின்றார்.

நாட்டில் தற்போது ஸ்திரமான நிலை காணப்படுகின்றது. உர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, எரிபொருள் பிரச்சினையும் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் முதற்கட்ட உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் ஜப்பான் எமது நாட்டுக்கு முன்னுரிமையளித்து கடன் வழங்கியுள்ள நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறு சீரமைப்பை மேற்கொள்வதற்கு முன் வந்துள்ளது. 

நாடு இத்தகைய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையிலும் கடந்த ஜூலை மாதம் 1.8 பில்லியனை ஏற்றுமதி வருமானமாக பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  செயற்பாடுகளுக்கு கிடைத்துள்ள சிறந்த பிரதிபலனாகும்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பாரிய செலவினங்களுக்கு மத்தியில் சமுர்த்தி உதவியாளர்களுக்கு வழங்கும் கொடுப்பனவு தொடர்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுவர்களின் மந்த போசனத்தை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

சிறுவர்களின் மந்தபோசன நிலையை போக்க  பல சர்வதேச நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.

வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும் வரியை நீக்கியதாலேயே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என பிரசாரம் செய்தவர்களும் அவர்கள் தான்.

மண்ணெண்ணெய் பிரச்சினை உருவெடுத்துள்ள நிலையில் மீனவர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அதனை செலுத்த தவறியுள்ளதால் 18 வயதிற்கு மேற்பட்டோரின் விபரங்கள் தொடர்பில் வலையமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது வருமான வரியை முறையாக பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/134766

  • கருத்துக்கள உறவுகள்

பொருட் களின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப  மக்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.  அமைச்சர் புளுகியடிப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா விடுங்கண்ணா...அவரு பாவம்தானே...என்னத்தை விற்று ..காசு பார்ப்பம் என்று ஓடிதிரிந்தவர்...இப்ப பிளேனைதவிர மற்ற எல்லத்தையும் விக்கச் சோலி அணில் சொல்லீருக்கும்...அப்ப அவரு வித்தால் நல்ல கமிசன் வரும்தானே...இதுக்காயினும் நரியைப் பாராட்ட வேணும்தானே..

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யப்பான் கொம்பனி ஒன்றிடம் இலங்கையில் தொழில் தொடங்க நூறு மில்லியன் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக யப்பானிய உயரஸ் தானிகரால் நேரடியாக பெயர் சொல்லி குற்றம் சாட்டப் பட்டவர். ரணில் வந்ததும் சாட்டுக்கு ஒரு கோமிற்றி நியமித்து இவரில் பிழை இல்லை என்று தீர்ப்பு வந்ததற்கு  பிரதி உபகாரம் செய்கிறார். இவர் முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த பொழுது தாதியர் வேலைக்கு பாலியல் லஞ்சம் கேட்டே வேலை நியமனம் கொடுத்தவர் ஆவார். நிறைய திருகுதாளங்கள் செய்தாலும் இன்னும் முறையாக மாட்டுப்படாமல் இருக்கிறார் 

Edited by பகிடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.