Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கார்

பட மூலாதாரம்,TWITTER

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்து விதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை தனித்துவமானது.

அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சுங்கத்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் கராச்சி நகரின் டி.ஹெச்.ஏ பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர். சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்தாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அது சாதாரண வண்டி அல்ல, அது பென்ட்லி முல்சான் செடான் ஆட்டோமேட்டிக் கார். அதன் மதிப்பு சுமார் 2, 4 கோடி ரூபாயை விட அதிகம்.

உளவு நிறுவனங்கள் இந்த காரை பற்றி நீண்ட காலமாக பேசிக் கொண்டிருந்தன. இந்த வண்டி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் ரெய்டு நடத்தி காரை பறிமுதல் செய்தனர்.

 
 

Presentational grey line

 

Presentational grey line

கறுப்பு நிற துணியால் அந்த கார் மூடப்பட்டிருந்தது. அந்த துணியை அகற்றிய போது காரில் உள்ளூர் நம்பர் பிளேட் இருந்ததுள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் அறிக்கையின்படி காரின் 'சேசிஸ்' எண்ணை அதிகாரிகள் கண்டறிந்ததும் அதை பரிசோதித்து அது உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த அதே எண் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகே கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கார் திருட்டு சம்பவத்தில் இருவர் ஈடுபட்டுள்ளனர். கராச்சியில் இந்த காரை வைத்திருந்த உரிமையாளர், தனக்கு இந்த காரை விற்ற நபர்கள் 2022 நவம்பருக்குள் சட்ட ஆவணங்களை முறைப்படி முடித்துத் தந்து விடுவதாக உறுதியளித்தனர் என சுங்கத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இந்த கார் பறிமுதல் செய்யப்பட்ட காட்சிகளை சிலர் காணொளியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பியதும் பலரும் அது குறித்து கேள்வி எழுப்பத்தொடங்கினர்.

லண்டனில் இருந்து இந்த கார் கராச்சிக்கு வந்தது எப்படி?

 

கார்

பட மூலாதாரம்,TWITTER @USAMA QURESHI

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, விசாரணையின் முடிவில் தான் முழு விவரங்களும் வெளிவரும். ஆனால் லண்டனில் திருடப்பட்ட கார் பாகிஸ்தானை வந்தடைந்து எப்படி என அறிந்துகொள்ள பிபிசி உருது சேவை முயன்றது.

பாக் வீல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சுனில் முஞ்ச் பிபிசியிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த திருட்டு சம்பவங்களில் சில கும்பல்கள் ஈடுபடுகின்றன. எங்கே திருட்டு நடக்கிறதோ, அங்கே திருட்டு குறித்து புகார் பதிவு செய்யப்படாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்கிறார்கள்.

அப்போது, கார் எந்த நாட்டில் இருந்து கிளம்புகிறதோ, எந்த நாட்டுக்கு சென்றடைகிறதோ இரு தரப்பிலும் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விடும்.

ஒருவேளை கார் திருட்டு புகார் ஆகியிருந்தால், துறைமுகத்தில் சோதனையின்போது மாட்டிக் கொல்லும். ஆகவே கார் திருடுபோனது புகார் ஆகாமல் இருப்பது அந்த கும்பல்களுக்கு முக்கியம்.

துறைமுகத்தில் கார் ஏறும்வரை ரகசியம் காத்த முகவர்கள்

 

கார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இந்த காரை பொறுத்தவரையில், லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு கார் கைமாற்றப்படும்வரை, அது திருடுபோன கார் என்பது யாருக்கும் தெரியாது. பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து கார் வெளியேறியதும், லண்டனில் கார் திருடுபோனது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் அவர்கள் காப்பீட்டுத் தொகையை பெறமுடியும்.

இப்படித்தான் அந்த கும்பல்கள் செயல்படுகின்றன. கார் முறைப்படி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்றவுடன் திருடுபோனது பதிவு செய்ய்யப்படும், பின்னர் கார் உரிமையாளர் அதை தேடத்தொடங்கி விடுவார் என விவரித்தார் சுனில் முஞ்ச்.

ஆனால், இது ஒன்றும் முதல் விவகாரம் இல்லை. பாகிஸ்தானில் நிறைய கார்கள் இப்படி உள்ளூர் எண்ணுடன் ஓடுகின்றன. இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்கிறார் அவர்.

பாகிஸ்தானுக்கு இந்த கார் வந்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வண்டியை 4 கோடியே 14 லட்சம் மதிப்பு கொண்டது என மதிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தற்போதைய சூழலில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக 5 கோடியே 85 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. பல்வேறு வரிகளை எல்லாம் சேர்த்து, தற்போது இந்த காரின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 30 கோடி ரூபாயாகும்.

கேலிக்குள்ளான சம்பவம்

இந்த கார் விவகாரம் பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், பலர் இது குறித்து கிண்டல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

லண்டனில் இருந்து திருடி பாகிஸ்தானுக்கு கடத்திய நபருக்கு பரிசு தர வேண்டும் என ஒரு பயனர் எழுதியுள்ளார். லண்டன்காரர்கள் இந்த ஒரு துணை கண்டத்தையே கொள்ளையடித்தார்கள்; அவர்கள் ஒரு காரைத் தானே கொள்ளையடித்தனர் என இன்னொரு பயனர் எழுதி இருக்கிறார்.

பென்ட்லி காரை லண்டனில் இருந்து திருடி உங்கள் பாக்கெட்டில் வைத்து பாகிஸ்தானுக்கு கொண்டு வந்துவிடலாம், நீங்கள் பாகிஸ்தானில் அந்த காரை பதிவு செய்யவும் முடியும் என எழுதியுள்ளார்.

அதே சமயம், இந்த கார் எப்படி லண்டனில் இருந்து பாகிஸ்தான் வந்திருக்க முடியும்? முழு விசாரணை தேவை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-62820849

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 திருப்பதிக்கே  லட்டா என்கிற மாதிரி  ஒரு தினுசாய்த்தான் பிரிட்டிஷ்காரனுட்ட  இருந்து பாக்கியள் சொள்ளையடிச்சிருக்கிறானுகள்...😂

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 திருப்பதிக்கே  லட்டா என்கிற மாதிரி  ஒரு தினுசாய்த்தான் பிரிட்டிஷ்காரனுட்ட  இருந்து பாக்கியள் சொள்ளையடிச்சிருக்கிறானுகள்...😂

அண்ணா, இப்படியான மோசடிகள் பெரும்பாலும் வாகன உரிமையாளர்களின் ஒத்துழைப்போடு ( இலாபத்தில் இத்தனை வீதம் % ) தான் அரங்கேறுவது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 திருப்பதிக்கே  லட்டா என்கிற மாதிரி  ஒரு தினுசாய்த்தான் பிரிட்டிஷ்காரனுட்ட  இருந்து பாக்கியள் சொள்ளையடிச்சிருக்கிறானுகள்...😂

 

ஜேர்மன் நாட்டிடமும் சுட்டு இருப்பானுகள் எதுக்கும் செக் பண்ண சொல்லுங்க 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மன் நாட்டிடமும் சுட்டு இருப்பானுகள் எதுக்கும் செக் பண்ண சொல்லுங்க 🤔

எங்களுக்கு போலந்துகாரங்கள் இருக்கிறாங்கள்.

கார் நிக்கும். ரயர் இருக்காது 😎

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

எங்களுக்கு போலந்துகாரங்கள் இருக்கிறாங்கள்.

கார் நிக்கும். ரயர் இருக்காது 😎

எங்க போனாலும் ஏதாவது ஒரு நாட்டுக்காரன் வில்லனாவே இருக்கான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.