Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg"

அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள்

அன்னை  இரண்டாம் எலிசபத்

தன்னைக் கவர்ந்தனன் காலன்

ஐக்கிய ராச்சிய அரசியாக

ஆண்டுகள் எழுபதைக் கடந்து

முக்கிய உலகத் தலைவியாக

முடியுடன் வாழ்ந்தவள் அன்னை

 

அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன்

ஆற்றலால், அன்பினால் பலத்தால்

தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த

தாயவள் எலிசபத் அரசி

இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு

இப்படியமையுமா அறியோம்

இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த

இனியதாய் மறைந்தனள் அந்தோ

 

பொதுநலவாயத் தலைமையை ஏற்று

பொறுப்புடன் கடமைகள் ஆற்றி

அதிகரித்திட்ட அகதிகட்குதவி

ஆற்றிய சேவைகள் பலதாம்

விதியது முடிய அமைதியைத் தேடி

விண்ணுலகடைந்தனள் அன்னை

பதியொடுமிணைந்து பரமனின் நிழலில்

பக்தியோடின்புற வாழ்க.

 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

உவர் ஏன்  அழுது வடியிறார். 😏

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது... அடிமைகளாக வாழப்பழகி விட்டோம் . அழுகின்றோம் ...👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2022 at 22:23, Kapithan said:

உவர் ஏன்  அழுது வடியிறார். 😏

சிங்களவருக்கும், இந்துத்துவ வடக்கத்தையாருக்கும் அடிமைகளாக வாழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் ஆங்கிலேயன் தந்த அகதியென்னும் பேரோடு சிறிதளவாவது விடுதலைக்காற்றைச் சுவாசிக்க உதவியிருக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அரசியான மூதாட்டி 2ம் எலிசபத்தின் மறைவையிட்டுக் கவலையடைவதில் சற்றும் தவறு இல்லை நண்பரே! துக்கம் வந்தால் கொண்டாடுங்கள் அல்லாவிடில் குதூகலித்து மகிழுங்கள்.   எங்கள் மனம் இப்படி, சகலதுமறிந்த அறிவாளிகளான நீங்கள் அப்படி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2022 at 22:42, வாத்தியார் said:

என்ன செய்வது... அடிமைகளாக வாழப்பழகி விட்டோம் . அழுகின்றோம் ...👍

வடக்கத்தையாருக்கும், தெற்கத்திச் சிங்களவருக்கும் அடிமைகளாக வாழப் பழகாமல், அடிமைகளாக ஆக்காமல் உரிய மதிப்புத்தந்து ஆதரிக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்திற்கு விசுவாசமாக இருந்து அதன்அரசி 2ம் எலிசபத்தின் மரணத்தில் துயருறுதல் மேலானதாகப் படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, karu said:

சிங்களவருக்கும், இந்துத்துவ வடக்கத்தையாருக்கும் அடிமைகளாக வாழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் ஆங்கிலேயன் தந்த அகதியென்னும் பேரோடு சிறிதளவாவது விடுதலைக்காற்றைச் சுவாசிக்க உதவியிருக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அரசியான மூதாட்டி 2ம் எலிசபத்தின் மறைவையிட்டுக் கவலையடைவதில் சற்றும் தவறு இல்லை நண்பரே! துக்கம் வந்தால் கொண்டாடுங்கள் அல்லாவிடில் குதூகலித்து மகிழுங்கள்.   எங்கள் மனம் இப்படி, சகலதுமறிந்த அறிவாளிகளான நீங்கள் அப்படி.

எப்படி அடிமையானோம் என்பதை மறந்துவிட்டீர் நண்பரே ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எப்படி அடிமையானோம் என்பதை மறந்துவிட்டீர் நண்பரே ☹️

ஆண்ட  ஆங்கிலேயன் கைவிட்டுப் போனான், ஆட்சியைப் பிடித்துக் கொண்டவன் அடிமையாக்கினான்.  இது புரியாமல் இருக்கிறீரே நண்பா. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, karu said:

ஆண்ட  ஆங்கிலேயன் கைவிட்டுப் போனான், ஆட்சியைப் பிடித்துக் கொண்டவன் அடிமையாக்கினான்.  இது புரியாமல் இருக்கிறீரே நண்பா. 

கைவிட்டு சென்றபோது இவதானே இளவரசி! சரி அப்பத்தான் அதிகாரம் இல்லாவிட்டாலும் ராணியாக வந்தபின்னாவது எதுவும் செய்தவவோ நாங்கள் இவவுக்காக இரங்குவதற்கு??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஏன் அகதியானோம் என்பதற்கு நதிமூலம் ரிசிமூலம் தேடினால் மண்டைதான் வெடிக்கும். தனியரசுகளாக இருந்த தமிழினத்தை தங்கள் சுக போகத்திற்காக இணைத்த ஆங்கிலேய அரசபரம்பரை இலங்கையை விட்டுச்செல்லும் போது நயவஞ்சகத்தையும் விதைத்து விட்டே சென்றார்கள்.ஆசிய ஆபிரிக்க,மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் இனவாத மதவாத சண்டைகளுக்கும் காரணகர்தாக்கள் கூட இந்த மகாராணி வம்சம் தான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோல்பரி பிரபு வந்து 60 க்கு 40 பிரதிநிதித்துவும் தருகிறோம் கூட்டாக ஆளுங்கள் என்றார்.  ஜிஜி பொன்னர் போன்றோர் குழப்பியடித்தார்கள். பண்டாரநாயக்காகூட அப்படிச் செய்ய ஒத்துக்கொண்டாராம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.   பிறகு உவர்கள் சரிவர மாட்டார்கள் என்று புரிந்து கொண்டு சர்வஜன வாக்கெடுப்பைப் பரிந்துரைத்துவிட்டுப் போய்விட்டார்.  தற்போது அணிலேறவிட்ட நாய்களாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறோம்.   அதற்கு அந்த மனுசி என்னசெய்யும்.   96 வயது வரை வாழ்ந்து காமன் வெல்த்தைத் தனது செல்வாக்கால் கட்டிக்காத்த மனுசி.  இன்றும் பலருக்கு அ தைவிட்டுப் பிரிய மனமில்லை.   சும்மா ஒரு 20 லட்சம்பேரில் ஒரு சிலர் அந்தப் பெரிய சாம்ராச்சியத்தைப்பார்த்துக் குரைத்துக் கொண்டிருப்பதில் என்ன அறிவு ஜீவித்தனம் வெளிப்படுகிறதோ தெரியவில்லை.  இப்போதும் அவர்களிடம்தானே கெஞ்சிக்கொண்டு நிற்கிறார்கள்.  ஆங்கிலேயனில்லாது எதுவும் சரிவராது தம்பிமாரே!   வாயைத் திறந்தால் ஆங்கிலம் அதற்குள் பெரும் சவடால்.  உலகமே யந்த மனுசிக்காக இரங்குகிறது.  இது என்னடாவென்றால் செக்கும் தெரியாமல் சிவலிங்கமும் தெரியாமல்  நக்கி முகர்வதனால் நயமென்ன வந்துவிடும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.