Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் 

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.

 அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்றி இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியது. இன்னும் பல குற்றச்சாடுக்களை மனித உரிமை சபையால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைக்கான மரியாதை (rule of law, non-discrimination and respect for human rights) என்னும் முக்கியமான விடியங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் மக்களின் இனப் படுகொலை சார்பாக எந்தக் கருத்தும் இந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. 

எது எப்படி இருப்பினும் எல்லா நாடுகளுமே தம் சுய நலன்( Self-interest ) சார்ந்தே காய்களை நகர்த்துவார்கள். தொடர்ந்தும் ஐ நா அறிக்கை விடுவதும் தீர்மானக்களை வருடா வருடம் நிறைவேற்றியதாகவே இருக்கின்றது. எந்த வித பயனும் எட்டியதாக தெரியாவில்லை. இந்த தீர்மானங்களை நிறைவேற்றிய நாடுகளே மீண்டும் இலங்கையுடன் சில ஒப்பந்தங்களுக்கு போகின்றன இது இவர்களது இரட்டை நிலைப்பாடை( double standard morality) பிரதிபலிக்கின்றன.

பல ஐரோப்பியா நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறலை கண்டித்ததோடு மற்றும் நல்லிணக்கம் (Promoting Reconciliation and Accountability ) பொறுப்பு கூறல் நடை முறை படுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தின. மனித உரிமை ஜனநாயகம் மதிப்பளிக்கப் பட்டு இலங்கையில் ஒரு மாற்றம் வேண்டி மனித உரிமை அமைப்பு வேண்டி நின்றது. இந்தியா வழமை போலவே 13 க்கு தூசு தட்டி மீண்டும் கொண்டு வந்து அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது. அருகில் இலங்கை பிரதிநிதிகள் இருந்து மெல்லமாக தமக்குள் பேசிக்கொண்டன அது இந்தியாவின் வழமையான ஒரு பாடல் என்று. என்னவாக இருந்தாலும் இந்தியாவின் சில அழுத்தங்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலையில் முக்கியமானதென கருத இடமுண்டு.

எது எப்படியோ இம் முறை மனித உரிமைப் பேரவை சற்று இறுக்கமான அறிக்கையை சமர்ப்பித்தது. இது எவ்வளவு தூரம் எதிர் காலத்தில் நன்மை அளிக்கும் அல்லது நடைமுறைப் படுத்தப்படும் என்பது கேள்விக் குறியே. கடந்த பல ஆண்டுகளாக ஐ நா மனித உரிமைப் பேரவையால் கொண்டு வரப்பட்ட தீர்மானக்கள் யாவும் இலங்கை அரசால் கிடப்பில் போடப் பட்டு எந்த வித காத்திரமான நடைமுறைப்படுதலோ அன்றி எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.

இது இவ்வாறு இருக்க இலங்கையின் சார்பில் பேசிய இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் இறைமையை (Sovereignty ) மனித உரிமை அமைப்பு மீறுவதாக கூறி இலங்கை இதை நிராகரிப்பதாக கூறினார். எந்த முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த இனத்தில் இருந்து வந்த முஸ்லீம் சமூகத்தை சேர்த்த இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தம் இனத்துக்கு ஏற்படும் துன்பத்தை இல்லை என்று மறைப்பதும் பொய் கூறுவதும் இலங்கையில் வாழும் சிறு பான்மை சமூகத்து செய்யும் பெரும் மன்னிக்க முடியாத துரோகமாகும். 

காலம் காலமாக இலங்கை அரசு மிகவும் தந்திரமாக காய்களை நகர்த்தி சிறு பான்மை தேசிய  இனங்களுக்கிடையே சிலருக்கு மிக முக்கிய பதவிகளை வழங்கி அவர்களைக் கொண்டே பெரும் பொய்களைக் கூற வைத்து இந்த தேசிய இனங்களின் போராட்டத்தை அடக்கும் சதி அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பதவிக்காகாவும் பணத்துக்ககாக்கவும் தம் சொந்த இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகிகள் தமிழ் பேசும் சமுதாயத்தில் பலர் இருப்பது பெரும் அவலம். சொந்த இனத்தை விற்கும் ஓர் பாதகச் செயல். தம் அடிப்படை உரிமையையும் விடுதலையையும் வேண்டி நிற்கும் மக்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா- மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

பா-உதயன் ✍️
 

 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் நல்லதொரு கட்டுரை.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 20:39, ஈழப்பிரியன் said:

உதயன் நல்லதொரு கட்டுரை.நன்றி.

கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 20:19, uthayakumar said:

ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் 

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.

 அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்றி இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியது. இன்னும் பல குற்றச்சாடுக்களை மனித உரிமை சபையால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைக்கான மரியாதை (rule of law, non-discrimination and respect for human rights) என்னும் முக்கியமான விடியங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் மக்களின் இனப் படுகொலை சார்பாக எந்தக் கருத்தும் இந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. 

எது எப்படி இருப்பினும் எல்லா நாடுகளுமே தம் சுய நலன்( Self-interest ) சார்ந்தே காய்களை நகர்த்துவார்கள். தொடர்ந்தும் ஐ நா அறிக்கை விடுவதும் தீர்மானக்களை வருடா வருடம் நிறைவேற்றியதாகவே இருக்கின்றது. எந்த வித பயனும் எட்டியதாக தெரியாவில்லை. இந்த தீர்மானங்களை நிறைவேற்றிய நாடுகளே மீண்டும் இலங்கையுடன் சில ஒப்பந்தங்களுக்கு போகின்றன இது இவர்களது இரட்டை நிலைப்பாடை( double standard morality) பிரதிபலிக்கின்றன.

பல ஐரோப்பியா நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறலை கண்டித்ததோடு மற்றும் நல்லிணக்கம் (Promoting Reconciliation and Accountability ) பொறுப்பு கூறல் நடை முறை படுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தின. மனித உரிமை ஜனநாயகம் மதிப்பளிக்கப் பட்டு இலங்கையில் ஒரு மாற்றம் வேண்டி மனித உரிமை அமைப்பு வேண்டி நின்றது. இந்தியா வழமை போலவே 13 க்கு தூசு தட்டி மீண்டும் கொண்டு வந்து அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டியது. அருகில் இலங்கை பிரதிநிதிகள் இருந்து மெல்லமாக தமக்குள் பேசிக்கொண்டன அது இந்தியாவின் வழமையான ஒரு பாடல் என்று. என்னவாக இருந்தாலும் இந்தியாவின் சில அழுத்தங்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலையில் முக்கியமானதென கருத இடமுண்டு.

எது எப்படியோ இம் முறை மனித உரிமைப் பேரவை சற்று இறுக்கமான அறிக்கையை சமர்ப்பித்தது. இது எவ்வளவு தூரம் எதிர் காலத்தில் நன்மை அளிக்கும் அல்லது நடைமுறைப் படுத்தப்படும் என்பது கேள்விக் குறியே. கடந்த பல ஆண்டுகளாக ஐ நா மனித உரிமைப் பேரவையால் கொண்டு வரப்பட்ட தீர்மானக்கள் யாவும் இலங்கை அரசால் கிடப்பில் போடப் பட்டு எந்த வித காத்திரமான நடைமுறைப்படுதலோ அன்றி எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.

இது இவ்வாறு இருக்க இலங்கையின் சார்பில் பேசிய இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் இறைமையை (Sovereignty ) மனித உரிமை அமைப்பு மீறுவதாக கூறி இலங்கை இதை நிராகரிப்பதாக கூறினார். எந்த முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகிறார்களோ அந்த இனத்தில் இருந்து வந்த முஸ்லீம் சமூகத்தை சேர்த்த இலங்கை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தம் இனத்துக்கு ஏற்படும் துன்பத்தை இல்லை என்று மறைப்பதும் பொய் கூறுவதும் இலங்கையில் வாழும் சிறு பான்மை சமூகத்து செய்யும் பெரும் மன்னிக்க முடியாத துரோகமாகும். 

காலம் காலமாக இலங்கை அரசு மிகவும் தந்திரமாக காய்களை நகர்த்தி சிறு பான்மை தேசிய  இனங்களுக்கிடையே சிலருக்கு மிக முக்கிய பதவிகளை வழங்கி அவர்களைக் கொண்டே பெரும் பொய்களைக் கூற வைத்து இந்த தேசிய இனங்களின் போராட்டத்தை அடக்கும் சதி அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பதவிக்காகாவும் பணத்துக்ககாக்கவும் தம் சொந்த இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகிகள் தமிழ் பேசும் சமுதாயத்தில் பலர் இருப்பது பெரும் அவலம். சொந்த இனத்தை விற்கும் ஓர் பாதகச் செயல். தம் அடிப்படை உரிமையையும் விடுதலையையும் வேண்டி நிற்கும் மக்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

”பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா- மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”

பா-உதயன் ✍️
 

 

அரசியல் ஆய்வுக் கட்டுரைக்கு, நன்றி உதயன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.