Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மூவின சமூகத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மூவின சமூகத்தினர்

03 OCT, 2022 | 12:02 PM
image

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பாந்தோட்டையின் தங்காலையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், மூவின மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான போராட்டத்தை காங்கேசன்துறை - மாவட்டபுரத்தில் ஆரம்பித்து வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தொழிற்சங்கப் பிரமுகர் ஜோசப் ஸ்டாலின் போன்றோரும் இன்று தங்காலையில் நடைபெற்ற இறுதி நிகழ்விலும் பங்கேற்றனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மக்களின் கையெழுத்துக்களைச் சேகரித்த பின்னர் இன்று அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையில் தனது செயற்பாட்டைத் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மூவின சமூகத்தினர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மூவின மக்களும் ஒன்றாக ஒற்றுமையாகப் போராடுகின்றோம்....தமிழருக்கென்று ..ஒரு குறையும்மில்லை...அது முந்தைய அரசுகள் செய்தது...ஐ.நா..தேவையில்லாமல்...உங்களைக் குழப்பாமல்..நாம் அனைவரும் ஒன்று என்று மகிந்தவின் கோட்டையில் காட்டிவிட்டோம்..எனவே இந்த அரசுக்கு உதவி செய்யாமல் பு து அமைச்சர்கள்...தெரிவில் எம்மையும் உள்ளீர்ந்து  செயல்பட உதவுங்கள்...எவ்வளவு காலமாக நாங்கள்  காத்திருப்பது...இது கூத்தமைப்பு..கூட்டாளிகளின்..ஆதங்கம்....ஐ.நா ..இரங்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மூவின சமூகத்தினர்

இதுவரை காலமும் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக ஏன் இந்த சமூகத்தினர் அணி திரளவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதுவரை காலமும் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக ஏன் இந்த சமூகத்தினர் அணி திரளவில்லை?

இதுவரை காலமும் இந்த பயங்கரவாதச் சட்டத்தால் பாதிக்கப்பட்டதும், தண்டிக்கப்பட்டதும் தமிழர் மட்டுமே. அப்போ எல்லோரும் கைகட்டி, கைதட்டி, கை உயர்த்தி  வேடிக்கை பார்த்தார்கள். இப்போ அது மூவினத்தார் மேலேயும் பாயுது, அதை பொறுத்துக்கொள்ளாத சுமந்திரன் சீறி எழுந்துவிட்டார் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

இதுவரை காலமும் இந்த பயங்கரவாதச் சட்டத்தால் பாதிக்கப்பட்டதும், தண்டிக்கப்பட்டதும் தமிழர் மட்டுமே. அப்போ எல்லோரும் கைகட்டி, கைதட்டி, கை உயர்த்தி  வேடிக்கை பார்த்தார்கள். இப்போ அது மூவினத்தார் மேலேயும் பாயுது, அதை பொறுத்துக்கொள்ளாத சுமந்திரன் சீறி எழுந்துவிட்டார் என்பதே உண்மை.

 

அப்போ தமிழர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றுக்கு அனுப்புவதில் என்ன தான் நன்மை இருக்கிறது?

தமிழர்களுக்காக உழைக்காதவர்களை ஏன் பாராளுமன்று அனுப்ப வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

அப்போ தமிழர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றுக்கு அனுப்புவதில் என்ன தான் நன்மை இருக்கிறது?

தமிழர்களுக்காக உழைக்காதவர்களை ஏன் பாராளுமன்று அனுப்ப வேண்டும்?

தமிழருக்காக பேரம்பேசும் ஒரே கட்சி தாங்கள், தங்களை பலப்படுத்தினால் பிரச்சனையை தீர்ப்போம் என உறுதியளித்து வாக்கு பெற்று  பாராளுமன்றம் புகுந்தவுடன் தமிழரையும் அவர்தம் பிரச்சனையையும் அடகுவைத்து மற்ற இனத்துக்கு வக்காலத்து வாங்குவது, மக்கள் சிந்திக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.