Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது

கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல், 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது கடந்த மாதம் 10ஆம் திகதி நாட்டை அண்மித்த நிலையில், இதுவரையில் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1304276

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைக்கு காணி பிடிப்பதில் எல்லோரும் பிசி கப்பலை திரும்பி போக சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் இல்லை என்றால் ஏன் மசகெண்ணெய் கப்பலுக்கு முற்பதிவு செய்கிறார்கள்?! கமிசன் பாக்கவோ? 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

40 நாட்களாக கட்டணம் செலுத்தப்படாது நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்

By DIGITAL DESK 5

21 OCT, 2022 | 07:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

 

கொழும்பில் நங்குரமிடப்பட்டுள்ள 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு  இதுவரை கட்டணம் செலுத்தப்பட்டவில்லை என்று  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு இன்னமும்  கட்டணம் செலுத்தப்படவில்லை. 40 நாட்களுக்கும் அதிகமான காலம் குறித்த கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்குரமிடப்பட்டுள்ள நிலையில் சப்புகஸ்கந்த எரிபொருள் நிலையமும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எவ்வாறாயினும் நாட்டை  வந்தடைந்த  டீசல் கப்பலுக்கு நேற்று கட்டணம் செலுத்தபட்டுள்ளது.  கப்பலில் உள்ள 40 ஆயிரம் மெட்றிக் தொன்  டீசலை இறக்கும் பணிகள் நேறைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை விமானங்களுக்கு தேவையான எரிபொருள் ஏற்றி வந்த கப்பலுக்கும் கட்டணங்கள் செலுத்தபட்டுள்ளதுடன் எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலக்கரியை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று இலங்கை நிலக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக இலங்கை நிலக்கரி சங்கத்தின் முகாமையாளர நாவல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அமைவாக இடையூறு இன்றி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியும். மேலும் கையிருப்பில் உள்ள நிலக்கரியை தொகை எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைத்திடப்பட்ட நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செயய  திட்டமிட்டப்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138145

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

40 நாட்களாக கட்டணம் செலுத்தப்படாது நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்

By DIGITAL DESK 5

21 OCT, 2022 | 07:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

 

கொழும்பில் நங்குரமிடப்பட்டுள்ள 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு  இதுவரை கட்டணம் செலுத்தப்பட்டவில்லை என்று  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பலுக்கு இன்னமும்  கட்டணம் செலுத்தப்படவில்லை. 40 நாட்களுக்கும் அதிகமான காலம் குறித்த கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்குரமிடப்பட்டுள்ள நிலையில் சப்புகஸ்கந்த எரிபொருள் நிலையமும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எவ்வாறாயினும் நாட்டை  வந்தடைந்த  டீசல் கப்பலுக்கு நேற்று கட்டணம் செலுத்தபட்டுள்ளது.  கப்பலில் உள்ள 40 ஆயிரம் மெட்றிக் தொன்  டீசலை இறக்கும் பணிகள் நேறைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை விமானங்களுக்கு தேவையான எரிபொருள் ஏற்றி வந்த கப்பலுக்கும் கட்டணங்கள் செலுத்தபட்டுள்ளதுடன் எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலக்கரியை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று இலங்கை நிலக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நிறுவனம் ஒன்றிலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக இலங்கை நிலக்கரி சங்கத்தின் முகாமையாளர நாவல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அமைவாக இடையூறு இன்றி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியும். மேலும் கையிருப்பில் உள்ள நிலக்கரியை தொகை எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைத்திடப்பட்ட நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செயய  திட்டமிட்டப்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138145

ஒரு நாளுக்குரிய தண்டப் பணமே… 150,000 அமெரிக்க டொலர்கள்.
40 நாளுக்கும்… உரிய தண்டப் பணம் அநியாய செலவு. 
பொறுப்பற்றவர்களின் செயலால்…. மக்கள்தான் தண்டிக்கப் படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தண்டம் கட்டியே அழியப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு நாளுக்குரிய தண்டப் பணமே… 150,000 அமெரிக்க டொலர்கள்.
40 நாளுக்கும்… உரிய தண்டப் பணம் அநியாய செலவு. 
பொறுப்பற்றவர்களின் செயலால்…. மக்கள்தான் தண்டிக்கப் படுகிறார்கள்.

சிங்கள மக்கள் படு பிசி விகாரை கட்ட தமிழரின் நிலங்களை பிடிப்பதில் இதுக்குள் தன்டமாவது முண்டமாவது இருக்கவே இருக்கு ஏமாளி இந்தியா நாலு சைனிஸ் சுற்றுலா பஸ் வண்டிகளை நெடுந்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் அனுப்ப சிங்களவனின் காலடியில் கனவு இந்திய  வாலரசு அழுது கிடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2022 at 00:16, ஏராளன் said:

டொலர் இல்லை என்றால் ஏன் மசகெண்ணெய் கப்பலுக்கு முற்பதிவு செய்கிறார்கள்?! கமிசன் பாக்கவோ? 

மக்களை ஏமாற்ற இப்படியான உத்திகளை கையாண்டு தண்டம் அதற்கு மேலால் செலுத்துவினம். தமிழரை அழிப்பதுவே இப்ப முக்கியம் உதெல்லாம் பெரிதல்ல சிங்களத்துக்கு! சிங்கள அரசியல்வாதிகள் இதெல்லாவறையும் மறைக்க விகாரை, தொல்பொருள், சிங்களம் ,பவுத்தம் என ஊளையிடுவினம். எங்கே அந்த சரத் வீரசேகர, விமல்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.