Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சபையின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1305451

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் தீர்வு தான் பாக்கி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

ஓம் நித்தியானந்தா.....

Nithyananda Shrikailasa GIF - Nithyananda Shrikailasa Shiva - Discover &  Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவாக வாசியுங்கள் "புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள்" என்றுதான் குறிப்பிட்டிருக்கு........🤨

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானம்

By T. SARANYA

18 OCT, 2022 | 01:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள் குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போனோர் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவையின் அங்கத்தவர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்கள் தவிர இதில் மேலும் இரு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டு தொகையை 200,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும், நபரொருவர் காணாமல் போயுள்ளமை இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு , கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதோடு, ஐ.நா. அலுவலகம் மற்றும் சுவிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயங்களில் மகஜர் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/137913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.