Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளசின் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 23-08-2007 18:02 மணி தமிழீழம் [சிறீதரன்]

டக்ளசின் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம்

ஈபிடிபி ஆயுததாரியும் அமைச்சரும் டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற் கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதட்டமான நிலமை காணப்ப்டது.

கடந்த திங்கட்கிழமை பகல் டக்ளஸ் தேவானந்த நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தமையால் அவரின் பாதுகாப்பக் காரணங்கள் என்ற போர்வையில் ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவர்கள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆலய சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பிட்ட இடங்களில் நின்று வழிபடவும் அனுமதிக்காது விரட்டியுள்ளார்கள்.

இத்துடன் தேசிய அடையாள அட்டைகள் கேட்டும் பயமுறுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதேவேளை பலத்த பாதுகாப்புடன் ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரின் கவச வாகனம் வீதித் தடைக்கள் ஏற்கனவே தொண்டர்களால் போட்டிருந்த பாதுகாப்பு நிலையங்களையும் உடைத்துக் கொண்டு உள் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகளினால் ஆலய சுற்றாடலில் பெரும் பதட்டமான நிலமை காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பதிவு

முருகப் பெருமானே!!

உனக்கும் இந்தக் கதியா?? :lol::lol:

யாழில் படையினரின் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் பாதிப்பு

யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் நல்லூர் பிரதேசசபைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை அரை மணி நேரத்தால் தளர்த்திய போதிலும், ஏனைய பகுதிகளில் வழமையான நேரத்திற்கு தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுவதால், பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னின்டு ஊடரங்கு உத்தரவை குடாநாடு முழுவதிலும் தளர்த்துமாறு ஆலய பரிபாலன சபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் அரை மணி நேர தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து நல்லூருக்குச் செல்வோர் உரிய நேரத்திற்கு திரும்ப முடியாது என்பதால் தமது பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 7.00 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரையும், நல்லூரில் மாலை 7.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரையும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

-- நன்றி : பதிவு --

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா அரோகரா என்ரை நல்லூர்ச்சாமிக்கு அரோகரா அதோடை வந்த டக்ளஸ் சாமிக்கும் அரோகரா..................... :D

டக்லஸ் சாமியோ? போறபோக்கைப் பார்த்தால் டக்லஸ் சுவாமிக்காக நீங்கள் தூக்குக் காவடி எடுப்பீங்கள் போல இருக்கிது? :D

  • கருத்துக்கள உறவுகள்

டக்கு:நல்லூர் முருகா என்னுடைய லைவ்க்கு ஒரு வாரண்டி ஒன்று தர கொழும்பில் இருந்து ஓடோடி வந்து இருக்கின்றேன்.

நல்லூர் முருகன்:என்ன டக்கு எப்படி சுகம்.கண்டு கன காலம்.என்னடாப்பா மகிந்துவின்ரை அமைச்சருக்கு நான் லைவ் வாரண்டி தரவோ?

டக்கு: இல்லை முருகா,யார் எதிரி எண்டு தெரியேல்லை.பக்கத்திலே நிக்கிற என்ரை பொடிகாட்டே இழக்கி விட்டிடுவான் போல கிடக்கு

நல்லூர் முருகன்: டக்கு,கேட்டு குறை நினக்காதே. நானே ஒரு தொந்துபறியில் இருக்கின்றேன்.இதுக்குள்ளே உனக்கு வாறண்டி வேறே

டக்கு: ?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.