Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயிற்சி கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் - இந்திய அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சி கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் - இந்திய அமைச்சர்

By RAJEEBAN

21 OCT, 2022 | 12:04 PM
image

இந்தியாவில் பயிற்சிக்கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமாக காணப்பட்டது இந்தியாவில் பயிற்சிகளிற்கான கட்டணங்களை கூட செலுத்தமுடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என அஜய் பட் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளை தங்கியிருப்பதால் ஜனநாயக நாடொன்று எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இலங்கையின் அனுபவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ajay-bhatt_main.jpg

நாட்டை நிர்வகிப்பது சரியான முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அந்த நாடு இலங்கை போல மாறிவிடும் என இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

மிகமோசமான பொருளாதார நிலைகாரணமாக இலங்கை ஏனைய நாடுகளிடம் உதவியை கோரவேண்டிய நிலையேற்பட்டது இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால் இந்தியாவிற்கு பயிற்சிக்கு வந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் பெயரளவு கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள்சிறிய சலுகையை கோரினார்கள் அடுத்த வருடம் பணம் வந்தவுடன் அதனை செலுத்துவதாக தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138133

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில்... விகாரை  கட்டவும், காணி பிடிக்கவும்.... காசு, ரெடியாக இருக்கு. 😡
கடனுக்கு... இராணுவ பயிற்சி கொடுத்த நாடு என்றால்... இந்தியாதான். 😡

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பண்டாக்கள்  பொங்கி எழப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவில்... விகாரை  கட்டவும், காணி பிடிக்கவும்.... காசு, ரெடியாக இருக்கு. 😡
கடனுக்கு... இராணுவ பயிற்சி கொடுத்த நாடு என்றால்... இந்தியாதான். 😡

காசு இருந்தால் குடுப்பினம் தானே? வச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணீனம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2022 at 18:11, ஏராளன் said:

நாட்டை நிர்வகிப்பது சரியான முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அந்த நாடு இலங்கை போல மாறிவிடும்

இது சரத் வீரசேகர, விமல் வீரவன்சவுக்கு தெரியுமோ?

உலகின் பல நாடுகள் இப்போ இலங்கையை உதாரணம் காட்டி தம் நாடுகளை எச்சரித்து நடவடிக்கை எடுக்கவும்,, தம்மை உயர்த்திக்காட்டவும் பழகிவிட்டன. இவர்களோ தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கர்ச்சிக்கிறார்கள்.

On 21/10/2022 at 18:11, ஏராளன் said:

இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால் இந்தியாவிற்கு பயிற்சிக்கு வந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் பெயரளவு கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள்சிறிய சலுகையை கோரினார்கள் அடுத்த வருடம் பணம் வந்தவுடன் அதனை செலுத்துவதாக தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  
உலகநாடுகளுக்கு பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று பாடம் எடுத்த கோத்தா கட்டணம் பெறாமலா எடுத்தார்? யாரோ முறியடித்த போராட்டத்தை தான் முறியடித்தேன் என்று படங்காட்டி இப்போ இந்தியாவுக்கு பணம்கட்டாமல் பயிற்சி எடுத்தார்களாம். உதுக்கு உந்த அரசியல்வாதிகள் தூக்குப்போட்டு சாகலாம். அடுத்த வருடம் எங்கிருந்து வரும் பணம்? அதுவரை பயிற்சியை தள்ளிப்போட்டிருக்கலாமே? இப்போ எந்த நாட்டுடன் போர் செய்ய அவசரப்பட்டு கடனில கல்யாணம் சே..... பயற்சி எடுத்தவை? பக்கத்து வீட்டுக்காரர்தானே தானே என்று உரிமையோடு கடன்சொல்லியிருக்கும் இலங்கை, இதுதான் சந்தர்ப்பம் என்று இலங்கையின் மானத்தை வாங்குது இந்தியா, சீனாவை கலைக்கேலை என்கிற கோவத்தை வைச்சுக்கொண்டு. உது தெரிஞ்சிருந்தா சீனாவிட்டையே பயிற்சி எடுக்க போயிருக்கும் இலங்கை, வழக்கம்போல ஓசி என்று நினைத்து போனது தப்பாகிப்போச்சு!

ஏதோ இலங்கைக்கு உதவி செய்யிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் இந்தியா இதை பெரிதாக சொல்லிக்காட்டுது. புலிகளுக்கு எதிராக பயிற்சி, ஆயுதம் எல்லாம் இனாமாகத்தானே கொடுத்தார்கள் இப்போ என்ன வந்தது என்று சொல்லிக்காட்டுது? புலிகளை அழிக்காமல் இருந்திருந்தால்; கேட்டுகேக்காமல் எல்லாரும், எல்லாம் ஓசியா கொடுத்திருப்பினம் இலங்கைக்கு. பெரிய தப்பாய்ப்போச்சுது.

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.