Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு !

24 OCT, 2022 | 05:23 PM
image

 

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக  ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில்  கைதிகள் தொடர்பான   தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதிகள் விடுதலை தொடர்பான   ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபர் ஆகியோரின் கருத்து பெறப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

இந்த தமிழ் கைதிகளில் மூவர்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இவர்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்தை வினவியுள்ளதோடு  அவரின் இணக்கப்பாட்டுடன்,  இவர்களின்  விடுதலைக்கு தேவையான ஆரம்ப கட்ட  முன்னெடுப்புகள்  தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள்  அமைப்புடன் தொடர்புடைய 04 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவர்கள்  எதிர்காலத்தில்  அனுபவிக்க வேண்டியுள்ள  தண்டனை காலத்தைக்  குறைத்து  இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த  மற்றுமிரு   தமிழ் கைதிகள்   மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளதுடன் மேலும் இரு கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டு 14  ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக  14 வருடங்கள் சிறைத்தண்டனை  அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில்  அடங்குகின்றனர்.

https://www.virakesari.lk/article/138350

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.

(11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும்  ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டு 14  ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக  14 வருடங்கள் சிறைத்தண்டனை  அனுபவிக்கும் இருவர்)😭

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் நீதிச்சபையின் சீர்த்துவம் இதுதான்!. கொலைகாரனெல்லாம் சிறிது காலத்தில் விடுதலை, பதவி, பந்தா. இதுக்குள்ள மல்கம் ரஞ்சித் ஏதோ புலம்புது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரணில் அரசு 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அரசியலமைப்பின் 34வது சரத்திற்கு அமைய, இலங்கை நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே, குறித்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சில தமிழ் அரசியல்வாதிகள், ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த விசாரணை அறிக்கை நீதி அமைச்சர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இந்த கைதிகளின் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இணக்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

எதிர்வரும் காலத்தில் சிறைத் தண்டனையை அனுபவிக்க இருக்கும் கால எல்லை குறைக்கப்பட்டு, கொழும்பு - மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 4 கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர், தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறு கோரி முன்வைத்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும், இரண்டு தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.

பொங்கல் தினத்தில் மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தில் மேலும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி எண்ணியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளும்னற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

 

சந்திரிகா கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டோர் உட்பட 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

பட மூலாதாரம்,MANO GANESAN

தீபாவளி தின தேசிய நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது, பொங்கலுக்கு இன்னுமொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்கும் தனது கோரிக்கைக்கு, ஜனாதிபதி கொள்கை ரீதியில் இணக்கத்தை வெளியிட்டார் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு நன்றி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கும், நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பிற்கும் இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி விசேட இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனைகளின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

அதேபோன்று, சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதியான ரகுபதி சர்மாவின் விடுதலையை தாம் விசேடமாக வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது.

அதேபோன்று, சுமார் 10 வருடங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-63385662

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2022 at 23:03, ஏராளன் said:

இந்த தமிழ் கைதிகளில் மூவர்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

வகைதொகையின்றி தமிழரைக்கொன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட படையினர் எந்த விளக்கமோ அடைப்போ இல்லாமல் வெளியில் நடமாடுவது எப்படி? இவர்களை விடுவிக்க பாதிக்கப்பட்ட தரப்பை யாரவது  சம்மதம் கேட்டார்களா? இதில ஜானாதிபதி பொதுமன்னிப்பு அளித்தாராம். சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள் இவர்கள். அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடி அழித்து குற்றத்திற்காக. என்ன செய்வது நிலைமை அப்படி? இதென்ன இது இந்தாள் தனக்குத்தானே ஏதோ போடுது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.